Monday, December 27, 2010

நாஞ்சில் நாடன் - பாராட்டு விழா

நாஞ்சில் நாடன் சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தொடர்பான பாராட்டு விழா ஒன்றின் அறிவிப்பு ஜெயமோகனின் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை இங்கே பகிர விரும்புகிறேன்.



எங்கள் அன்புக்குரிய அண்ணாச்சி நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி இந்தவருடத்திற்க்கான விருதை சூடிய பூ சூடற்க்க தொகுப்பிற்க்காக  அளித்து தன்னை சிறிது பெருமைபடுத்திக் கொண்டுள்ளது .
நண்பர்கள் இணைந்து சென்னையில் நாஞ்சிலுக்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்துள்ளோம் , தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் .

******************************************************************************
 
நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா

நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30
இடம் : ஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு – சென்னை (சோழாஹோட்டல் பின்புறம்)
.
வரவேற்புரை : சிறில் அலெக்ஸ் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
 
தலைமை : சிறுகதையாசிரியர் ராஜேந்திரசோழன்
 
நாஞ்சில்நாடனின் ”கான்சாகிப்” புத்தகம்
   வெளியிடுபவர் : இயக்குனர் பாலுமகேந்திரா
   புத்தகம் பெற்றுக்கொள்பவர் : பாரதி மணி

வாழ்த்துரை :

இயக்குனர் பாலா
எழுத்தாளர் ஞாநி
ராஜகோபால் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
எழுத்தாளர் கண்மணி குணசேகரன்
எழுத்தாளார் சு.வெங்கடேசன்
எழுத்தாளர் பவா செல்லத்துரை
எழுத்தாளர் ஜெயமோகன்

ஏற்புரை - நாஞ்சில்நாடன்

நன்றியுரை - தனசேகர் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

தொடர்புக்கு : +9194421 10123 vishnupuram.vattam@gmail.com
 
விழாவில் உங்கள் வருகையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் அன்புடன் எதிர்பார்க்கிறோம்.



suresh kannan

2 comments:

Ahamed irshad said...

வாழ்த்துக்க‌ள்..

Ashok D said...

சிறு விபத்து... குணமடைந்தால் சந்திப்போம் :)