இந்தியச்
சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது வங்க நடிகர்
செளமித்ர சட்டர்ஜிக்கு கிடைத்திருப்பது குறித்து அறிய மிக்க மகிழ்ச்சி.
சத்யஜித்ராயின் பல திரைப்படங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் அறிமுகமானது 'அபுர் சன்சார்' (1959) எனும் ரே படத்தில்தான். ரேவின் மற்றொரு திரைப்படமான 'சாருலதா'வில் இவரின் பங்களி்ப்பு குறி்ப்பிடத்தகுந்தது. தனிமையில் துயரரும் சாருலதாவின் வாழ்வில் இவரின் வருகை எப்படி புரட்டப் போடப் போகிறது என்பதை அறிமுகக் காட்சியிலேயே சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
இவருக்கு விருது கிடைத்த செய்தி குறித்து சாருலதாவாக நடித்த மாதவி முகர்ஜயிடம் கேட்ட போது "அமோலுக்கு (திரைப்பட பாத்திரத்தின் பெயர்) விருது கிடைக்கும் போது சாருலதாவிற்கு மகிழ்ச்சியாக இருக்காதா?" என்றாராம் குறும்பாய்.
சத்யஜித்ராயின் பல திரைப்படங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் அறிமுகமானது 'அபுர் சன்சார்' (1959) எனும் ரே படத்தில்தான். ரேவின் மற்றொரு திரைப்படமான 'சாருலதா'வில் இவரின் பங்களி்ப்பு குறி்ப்பிடத்தகுந்தது. தனிமையில் துயரரும் சாருலதாவின் வாழ்வில் இவரின் வருகை எப்படி புரட்டப் போடப் போகிறது என்பதை அறிமுகக் காட்சியிலேயே சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
இவருக்கு விருது கிடைத்த செய்தி குறித்து சாருலதாவாக நடித்த மாதவி முகர்ஜயிடம் கேட்ட போது "அமோலுக்கு (திரைப்பட பாத்திரத்தின் பெயர்) விருது கிடைக்கும் போது சாருலதாவிற்கு மகிழ்ச்சியாக இருக்காதா?" என்றாராம் குறும்பாய்.
suresh kannan