Showing posts with label சாருலதா. Show all posts
Showing posts with label சாருலதா. Show all posts

Friday, March 23, 2012

செளமித்ர சட்டர்ஜி - தாதாசாஹேப் பால்கே விருது


இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது வங்க நடிகர் செளமித்ர சட்டர்ஜிக்கு கிடைத்திருப்பது குறித்து அறிய மிக்க மகிழ்ச்சி.

சத்யஜித்ராயின் பல திரைப்படங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் அறிமுகமானது 'அபுர் சன்சார்' (1959) எனும் ரே படத்தில்தான். ரேவின் மற்றொரு திரைப்படமான 'சாருலதா'வில் இவரின் பங்களி்ப்பு குறி்ப்பிடத்தகுந்தது. தனிமையில் துயரரும் சாருலதாவின் வாழ்வில் இவரின் வருகை எப்படி புரட்டப் போடப் போகிறது என்பதை அறிமுகக் காட்சியிலேயே சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

இவருக்கு விருது கிடைத்த செய்தி குறித்து சாருலதாவாக நடித்த மாதவி முகர்ஜயிடம் கேட்ட போது "அமோலுக்கு (திரைப்பட பாத்திரத்தின் பெயர்) விருது கிடைக்கும் போது சாருலதாவிற்கு மகிழ்ச்சியாக இருக்காதா?" என்றாராம் குறும்பாய்.
 
suresh kannan

Monday, December 12, 2011

சாருலதா ஊஞ்சல் ஷாட்



சத்யஜித்ரே இயக்கிய 'சாருலதா' திரைப்படத்தில் அற்புதமான ஒரு பாடல் காட்சி வருகிறது. மாதவி முகர்ஜி ஊஞ்சலில் ஆடிக் கொண்டே பாடும் அந்தப் பாடல் காட்சியி்ல் காமிரா ஊஞ்சலின் கூடவே எந்த வித ஜெர்க்கும் இல்லாமல் பயணிக்கும். திரை உருவாக்க நுட்பங்களில் அனுபவமில்லாவிட்டாலும் ஆர்வம் காரணமாக  அந்தக் காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள் என்று நிறைய முறை யோசி்த்திருக்கிறேன். (பாடலை மேற்கண்ட இணைப்பில் காணலாம்)

 இயக்குநர் சார்லஸின் வலைப்பதிவு இணையத்தில் அறிமுகமான பிறகு அங்கும் இந்தக் கேள்வியை முன்வைத்தேன். அது தொடர்பான விவாதம் இங்கே.

நேற்றைய இந்து நாளிதழில்தான் இதற்கான விடை கிடைத்தது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் திரைப் பதிப்பில் குறிப்பிட்ட காமிரா கோணங்களை உதாரணங்களுடன் விளக்கும் தொடர் ஒன்று வெளிவருகிறது. அந்த வரிசையில் இந்தப் பாடலை உதாரணம் காட்டி இது SNORRICAM வகை நுட்ப உத்தி என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். 

suresh kannan