எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய 'மானுடப்பிரவாகம்' என்ற சிறுகதை ஒன்பதாம் வகுப்பு தமிழ் துணைப்பாடத்தில் இடம் பெற்றிருந்தது. மாமன் - மைத்துனன் இடையே வயல் வரப்பு தொடர்பாக ஏற்படும் தகராறு போலீஸ் வரை சென்று, பிறகு மாட்டை விற்று போலீஸிற்கு லஞ்சம் கொடுத்து விவகாரத்தை முடிக்கின்றனர். பின்னர் ஏற்படும் ஒரு குடும்ப விழாவில் இருவரும் தங்கள் தவறுகளை மறந்து ஒற்றுமையாகின்றனர். தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளை தாங்களே அமர்ந்து பேசி முடிப்பதையழித்து, மூன்றாம் மனிதர் (அதிலும் அதிகார அமைப்பு) தலையிடுவதன் மூலம் பொருள் இழப்பும் தீராப்பகையும் ஏற்படுவதால், இதைத்தவிர்த்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் கோடி நன்மை என்பது இக்கதையின் ஆதார நீதி.
ஆனால் இக்கதை காவல்துறையின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் இருப்பதால், இந்தக் கதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் இந்தக் கதை நீக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: தினமலர் செய்தி - 17.05.2005)
()
பாடத்திட்டத்தில் எந்தமாதிரியான உள்ளடக்கத்தை தர வேண்டும் என்று ஒரு குழுவே அமர்ந்து தீர்மானிக்கிறது. அவ்வாறு தீர்மானித்த பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை முறையற்ற காரணங்களுக்காக நீக்குவது என்பது சரிதானா? என்கிறதொரு கேள்வி என்னுள் எழுகிறது.
மேலாண்மை பொன்னுச்சாமி இடது சாரி சிந்தனையுடையவர் என்பதும் அவரது கதைகளில் பிரச்சாரத் தொனி சற்று மேலோட்டமாகவே இருக்கும் என்பதும் நாம் அறிந்தே இருக்கிறோம். அடிப்படையில் அவரே ஒரு விவசாயியாக இருப்பதால், உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு இந்தக் குறைகளை நாம் ஒதுக்கித்தள்ளவே வேண்டும். இவ்வாறானாவர், ஏதோ நடைமுறையில் இல்லாத ஒன்றையோ அல்லது முறையற்ற செயலை மறைமுகமாக ஆதரிக்கும் படைப்பையோ எழுதிவிடவில்லை. சமகாலப் பிரச்சினையையும் அதற்கு முறையான தீர்வு ஒன்றினையுமே அவர் தனது படைப்பில் கொடுத்துள்ளார்.
இந்தக் கதையை நீக்குவதன் மூலம் அவர்களின் நோக்கம் என்ன? இளம் தலைமுறையினரிடம் காவல் துறையின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவோ அல்லது மறைக்கவோ முயல்கின்றார்களா? அந்த நோக்கத்தில் இது செய்யப்பட்டிருக்குமாயின் அதை விட அபத்தம் ஒன்றுமிருக்க முடியாது. ஈராக்கில் குண்டு வெடித்து அதன் அதிர்வை அடுத்த அரைமணி நேரத்தில் நம் வரவேற்பறையில் உணர முடிகிற அளவிற்கு, ஊடகங்கள் தகவல் மழை பொழிந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், இளம் தலைமுறையினருக்கு நம் காவல்துறையினரின் லஞ்ச லாவண்யச் செயல்களும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் அப்பாவிகளை அவர்கள் கொடுமைப்படுத்துவதும், சமீபத்தின் செயல்பாடுகள் மூலம் ஒரு பெண்ணின் முந்தானைக்குள் ஒரு மாநிலத்தின் காவல்துறையே இளைப்பாறும் அசிங்கத்தையும் அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.
ஒரு சாராரின் கோரிக்கையை ஏற்று இப்படைப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படும் என்றால், இதை தீர ஆராய்ந்து பாடத்திட்டத்தில் சேர்த்ததின் நோக்கம் பலனற்றதாகவே போய்விடுகிறதல்லவா? இதே நிலை நீடித்தால், காக்கா வடை திருடிய கதையை கூட, வனவிலங்குகளின் பால் அக்கறை கொண்ட மேனகா காந்தி போன்ற அமைப்பினர், ஒரு பறவையை தவறான முறையில் சித்தரிப்பதா என்று கேள்வி எழுப்பும் பட்சத்தில், அந்தக் கதையையும் நீக்கிவிடுவார்களா? அபத்தம்.
suresh kannan
Monday, May 30, 2005
Thursday, May 19, 2005
முள்ளும் மலரும் திரைப்படம் - என் பார்வை (பகுதி 2)
என் முந்தைய பதிவின் தொடர்ச்சி ...............
இசையமைப்பாளர் இளையராஜா:
1980, 90-களில் இயக்குநர்கள் கதையை முடிவு செய்துவிட்டு, அதை திரைக்கதையாக்கும் போது இளையராஜாவையும் மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல் சம்பவங்களை நகர்த்துவார்கள். ராஜாவும் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் மிகச் சிறப்பாக அந்த வெற்றிடத்தை தன் தேவ இசையால் நிரப்புவார், சில சமயங்களில் மெளனங்களாலும். இந்தப் படத்தில் அவ்வப் போது Theme Music மாதிரி ஒலிக்கும் கழைக் கூத்தாடிகளின் மேளச் சத்தத்தை (இரண்டொரு முறைக்கு மேலேயோ அல்லது இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்தவருக்கோ இந்த ஒலி காதில் ஒலிக்கிறதா?) மனதை உருக்குவதான காட்சிகளில் திறமையாக பயன்படுத்தியிருப்பார்.
இது தொடர்பாக பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட (பிரபல புகைப்படக்காரர் யோகா சந்தித்தது) மகேந்திரனின் நேர்காணல் சுவையானது. (எப்பவாவாது பொதிகைக்காரர்களுக்கே போரடித்தால் போடுவார்கள், பாருங்கள்)
மகேந்திரன் இந்தக் கதையை திரைக்தையாக்கும் போது இசைக்கு ஏற்றாற் போல் பல இடங்களில் வசனங்களை குறைத்து மெளனங்களை அதிகப்படுத்தியிருப்பார். உதாரணமாக ஒரு காட்சியை பேட்டியில் அவர் குறிப்பிட்டார்:
ரஜினி ஒரு கையை இழந்து ஊருக்கு திரும்பி வரும் காட்சி. அவர் கையை இழந்தது தங்கைக்கு தெரியாது. அண்ணன் திரும்பி வந்த சந்தோஷத்தில் அவனை தழுவும் அவள், அப்போதுதான் அவன் கையை இழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அழ ஆரம்பிப்பாள். இந்தக் காட்சியில் ஒரு வசனமும் கிடையாது. மற்ற இயக்குநர்கள் என்றால் குய்யோ முறையோ என்றோ வீராவேசமாகவோ பக்கம் பக்கமாக வசனங்களால் நிரப்பியிருப்பார்கள். ஆனால் ராஜா இந்த இடத்தை அபாராக தன்னுடைய இசையால் பார்வையாளர்கள் உருகும்படி இசைத்திருக்கிறார்.
சமீபத்தில்தான் ஒரு தோல்விப்படத்தை கொடுத்திருந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளர், ரீ-ரிகார்டிங் முடிவதற்கு முன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு, பல இடங்கள் வசனங்கள் இல்லாமல் மெளனமாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். 'இன்னாங்க இப்படி எடுத்து வச்சிருக்கீங்க. நான் போண்டிதான் ஆயிடுவேன் போலிருக்கு". ஆனால் படம் வெளிவந்து மக்கள் அதை ஆரவாரமாக வரவேற்றது சரித்திரம்.
ஆக.. இந்தப்படத்தின் முதுகெலும்பாக இளையராஜாவின் இசையை குறிப்பிடலாம். கதையோடு ஒட்டி, பின்னி உறவாடும் வகையில் பின்னணி இசை அமைப்பதில் இந்தியாவில் இவரளவிற்கு யாருமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. இதில் பாடல்களும் மிக சிறப்பாக இருக்கின்றன். 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா' என்கிற பாடலை மட்டும் ஒரு ஏகாந்த வேளையில் கேட்டால் நீங்களே ஒரு மலைப்பாதையை கடந்து போய்க் கொண்டிருப்பது மாதிரி தோன்றும். 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே' என்கிற பாடலில் வரும் லேலேலெலெ.... என்று வரும் ஹம்மிங்கை எப்போது கேட்டாலும், நான் எப்பவோ பார்த்த அஸாமைப் பற்றின ஒரு டாக்குமெண்டரிதான் ஞாபகத்திற்கு வரும். மிக இனிமையான ஹம்மிங்.
ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா
புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர்களுக்கான தேர்வில் தங்கம் வென்ற பாலுமகேந்திரா, தொழில்நுட்படம் அவ்வளவாக வளராத அந்த கட்டத்தில், ஆர்வோ (ORWO) கலரில் இந்தப் படத்தில் பல ஜாலமே செய்திருக்கிறார். மேற்குறிப்பிட்ட அதே பாடலை உதாரணமாக கொள்ளலாம். ஜீப்பில் மலைப்பாதையில் விரையும் திருப்பங்களும், பயணிக்கிறவர்களின் ஒவ்வொருத்தரின் முகபாவங்களும், பாடலின் முடிவில் வானத்து நிலாவை மரக்கிளைகளுக்கிடையான இடைவேளையில் காமிரா துரத்துவதுமாக....... கவிதைக் கணங்கள்.
ஒரு நல்ல ஒளிப்பதிவாளனின் வேலை, தன் திறமையை தனியே காண்பிக்காமல், கதையோட்டத்திற்கு குறுக்கே நிற்காமல், சம்பவங்களின் உணர்ச்சிகளுக்கேற்ப கோணங்களை ஒழுங்குபடுத்துவதுதான். அதை திறம்படவே செய்திருக்கிறார் பாலு.
ரஜினிகாந்த்
தன் எல்லா நடிப்புத் திறமையையும் இந்தப் படத்திலேயே கொட்டி விட்டதால், பிற்கால படங்களில் அந்தத் தொந்தரவுகள் ஏதும் இல்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தாரா என்று சந்தேகம் வருமளவிற்கு தன் உச்சபட்ச சிறப்பான நடிப்புத் திறமையை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.
தங்கைக்கு சோறு போடாமல் பட்டினியாக வைத்திருக்கிறான் என்று புரளி பேசினவனை அடித்து கும்மி விட்டு "என் வள்ளி பட்டினியா இருக்கான்னா, அது இந்த காளி செத்த நாளாத்தான் இருக்கும்" என்று உறுமுவதாகட்டும், கை போனதால் வேலையை விட்டு தூக்கிய, ஏற்கெனவே மெல்லிய வெறுப்பு படர்ந்திருக்கும் தன் மேலதிகாரயிடம் "பரவாயில்ல சார். நானும் உங்க இடத்துல இருந்தா, இப்படித்தான் செஞ்சிருப்பேன். கேவலம்.... நாம மனுஷங்கதானே சார்" என்று விரக்தியுடன் கூறிவிட்டு, சடாரென்று தன் முகபாவத்தை தீவிரமாக்கிக் கொண்டு "ரெண்டு கையி ரெண்டு காலு போனாலும் காளின்றவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட.... பய..... சார் இந்த காளி" என்று சவால் விடுகிறாற் போல் பேசுவதாகட்டும், கை போனதால் உதவிக்காக திருமணத்திற்கு சூசகமாக வற்புறுத்துகிற தன் தங்கையிடம் "ம்..... வள்ளிக்குட்டி. நான் என்னவோ நெனச்சேன். நீ கூட பொடி வெச்சு பேச கத்துக்கிட்டியே' என்று நக்கலடிப்பதாகட்டும், தனக்கு பிடிக்காத மாப்பிள்ளையுடன், ஊர்க்காரர்கள் துணையுடன் திருமணம் செய்யப் போகும் தங்கையிடம் "அந்த நாயிங்க எல்லாம் போகட்டும். ஏன்னா அதுங்க என் கூட பிறந்துதங்க இல்ல. ஆனா நீ என் ரத்தம்" என்று உருகுவதிலாகட்டும், தங்கை தன்னிடமே திரும்பி வந்ததும் "இப்ப உங்க மூஞ்சுங்கள எங்கடா வெச்சுக்கப் போறீங்க" என்று பெருமைப்படுவதிலாகட்டும்..........
ரஜினியின் Master Piece இந்தப்படம்தான் என்று தயங்காமல் கூறுவேன்.
ஆனால் இப்பேர்ப்பட்ட ரஜினி தன் பிற்கால படங்களில் இன்னும் விக் மாட்டிக்
கொண்டு 'நான் ஒரு தடவ சொன்னேன்னா' எனும் போது எரிச்சலாக இருக்கிறது. இந்தியாவின் டாப் ஸ்டாராகிய அபிதாப் கூட தன் வயதுக்கேற்ற மாதிரி BLACK., AKS மாதிரியான மாதிரியான மாற்றுப்படங்களில் நடித்துக் கொண்டிருக்க, இவர் இன்னும் தேவுடா..தேவுடா என்று பாடிக் கொண்டிருக்கிறார். அட தேவுடா...
ஷோபா
இந்தப் பெயரை உச்சரிக்கும் பா¡க்கும் போதே துக்கம் தொண்டையை அடைக்கிறது. இயல்பாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் ஒரு நல்ல நடிகையை நாம் இழந்துவிட்டோம்.
அப்பாவி முகத்துடன் அறிமுகமாகும் இவர், சரத்பாபு விட்டுச் சென்றிருந்த ஜீப்பை பஸ் டிரைவர் போல் தன்னை பாவித்துக் கொண்டு ஓட்டும் போதும் பின்பு பின்னால் வந்து நின்று கொண்டிருக்கும் சரத்பாவுவை மிரட்சியுடன் பார்ப்பதும் ஒரு குழந்தையைப் பார்ப்பது போலிருக்கிறது. இவருக்கும் சரத்பாபுவிற்கும் மலரும் அந்த சொல்லப்படாத காதலின் பரிணாம காட்சிகள் ஒரு கவிதைத்தனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் பிற்பகுதியில் குடும்பத்தின் பொருளாதார பாரத்தை தான் சுமக்க தயாராகும் போது அவரின் குழந்தை முகம் மறைந்து போய் முதிர்ச்சியான ஒரு இந்தியப் பெண்ணின் அடையாள முகம் தெரிகிறது. படத்தின் உச்சக்காட்சியில் தன் மனம் கவர்ந்தவனோடு போவதா, உருகி அழைக்கும் தன் அண்ணனின் குரலுக்கு செவிசாய்ப்பதா என்று தவிக்கும் காட்சியில் சிறப்பாக பங்காற்றியிருக்கிறார்.
சரத்பாபு
நான் சிறுவயதில் முதன்முதலாக ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நடிகர். (இப்போது பில்கேட்ஸே வந்தால் கூட வாங்க மாட்டேன்) மெல்லிய சிரிப்புடன் மிக மென்மையாக கையெழுத்திட்டு கொடுத்த அந்த மனிதரை மறக்கவியலாது.
இவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இவர் ஏன் ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக வரமுடியவில்லை என்று ஆச்சரியமாக இருக்கும். திடகாத்திரமான உடம்பு, நல்ல சிவப்பு, சுருள் முடி, அழகான முகம் என்று ஒரு
கதாநாயகனுக்குரிய எல்லா அம்சங்கள் இருந்தும், நண்பர்கள் வேஷத்திலேயே தன் திரையுலக பயணத்தை நடத்திக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி அங்கலாய்க்கவே தோன்றுகிறது. கதாநாயக முகம் என்பது எதிர்பார்க்கவியலாத ஒரு கலவையோடு, மக்கள் தங்கள் மனங்களில் மிக நெருக்கமாக உணர முடிகிற முகங்களுக்குத்தான் வாய்க்கும் போலிருக்கிறது.
இவருக்கும், காளி என்கிற கதாபாத்திரத்திற்கும் ஆரமபத்திலேயே அறிமுகமாகிற நல்லது, பொல்லாததுமான அறிமுகங்களும், காளிக்கு இவர் மேல் வெறுப்பு படரும் காட்சிகளும் மிகத்திறமையாக ஆரவாரமின்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. காளியால் 'லா பாயிண்ட்' என்று பட்டப் பெயர் வைத்து அழைக்கப்படும் இவர், காளி வேலை இழந்த நிகழ்வையும், காளிக்கு அடிபட்டிருக்கிற போது பகைமையை மறந்து மருத்துவமனைக்கு விரைவதிலும் ஒரு படித்த கனவானை நம் முன் நிறுத்துகிறார். தன் கெளரவத்தை விட்டு காளியிடம் பெண் கேட்டு மனரீதியாக மோசமாக அவமானப்படுவதிலும், ஓடிப் போகிற யோசனையை சொல்கிற காளியின் மனைவியிடம் அதை மறுப்பதிலும் தன் பாத்திரத்தை உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினையாற்றியிருக்கிறார்.
படாபட் ஜெயலஷ்மி
இன்னொரு ஷோபா. இன்னொரு தற்கொலை.
'அவள் ஒரு தொடர்கதை'யில் வருகிற அல்ட்ரா மாடர்ன் பெண்ணா என்று அதிசயப்பட வைக்கும் அளவிற்கு ஒரு கிராமத்து அடங்காப்பிடாரியாக நடித்திருக்கிறார். புளிப்பு மாங்காயும், வறுத்த மீனுமென்று தின்னிப் பண்டாரமாகவும் ஒரு ஆம்பிளைப் பாப்பாத்தியாக வருமிவர், காளியுடன் நடக்கும் ஒரு சிறிய சல்லாபத்தில் தன் பெண்மையை விழிப்பை உணர்ந்து நாணப்படும் காட்சியில் இயல்பாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் ஒரு குடும்பத்தலைவிக்கேயுரிய பொறுப்புடன் காளியின் தங்கையை தன் மகளாக நினைத்து அவளின் எதிர்காலம் பாழாகிற சூழ்நிலையில் தன்னையும் தன் வாழ்க்கையையும் பற்றி கவலைப்படாமல் தன் கணவனான காளிக்கு எதிரான தீர்மானமான முடிவை எடுக்கிறாள்.
மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு (அவர் மனைவியாக வருகிறவர்) என்று எல்லா கதாபாத்திரங்களும் மிக இயல்பாக வந்து போகிறார்கள்.
தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் தவற விடக்கூடாத அளவிற்கு அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் படமிது.
suresh kannan
இசையமைப்பாளர் இளையராஜா:
1980, 90-களில் இயக்குநர்கள் கதையை முடிவு செய்துவிட்டு, அதை திரைக்கதையாக்கும் போது இளையராஜாவையும் மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல் சம்பவங்களை நகர்த்துவார்கள். ராஜாவும் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் மிகச் சிறப்பாக அந்த வெற்றிடத்தை தன் தேவ இசையால் நிரப்புவார், சில சமயங்களில் மெளனங்களாலும். இந்தப் படத்தில் அவ்வப் போது Theme Music மாதிரி ஒலிக்கும் கழைக் கூத்தாடிகளின் மேளச் சத்தத்தை (இரண்டொரு முறைக்கு மேலேயோ அல்லது இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்தவருக்கோ இந்த ஒலி காதில் ஒலிக்கிறதா?) மனதை உருக்குவதான காட்சிகளில் திறமையாக பயன்படுத்தியிருப்பார்.
இது தொடர்பாக பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட (பிரபல புகைப்படக்காரர் யோகா சந்தித்தது) மகேந்திரனின் நேர்காணல் சுவையானது. (எப்பவாவாது பொதிகைக்காரர்களுக்கே போரடித்தால் போடுவார்கள், பாருங்கள்)
மகேந்திரன் இந்தக் கதையை திரைக்தையாக்கும் போது இசைக்கு ஏற்றாற் போல் பல இடங்களில் வசனங்களை குறைத்து மெளனங்களை அதிகப்படுத்தியிருப்பார். உதாரணமாக ஒரு காட்சியை பேட்டியில் அவர் குறிப்பிட்டார்:
ரஜினி ஒரு கையை இழந்து ஊருக்கு திரும்பி வரும் காட்சி. அவர் கையை இழந்தது தங்கைக்கு தெரியாது. அண்ணன் திரும்பி வந்த சந்தோஷத்தில் அவனை தழுவும் அவள், அப்போதுதான் அவன் கையை இழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அழ ஆரம்பிப்பாள். இந்தக் காட்சியில் ஒரு வசனமும் கிடையாது. மற்ற இயக்குநர்கள் என்றால் குய்யோ முறையோ என்றோ வீராவேசமாகவோ பக்கம் பக்கமாக வசனங்களால் நிரப்பியிருப்பார்கள். ஆனால் ராஜா இந்த இடத்தை அபாராக தன்னுடைய இசையால் பார்வையாளர்கள் உருகும்படி இசைத்திருக்கிறார்.
சமீபத்தில்தான் ஒரு தோல்விப்படத்தை கொடுத்திருந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளர், ரீ-ரிகார்டிங் முடிவதற்கு முன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு, பல இடங்கள் வசனங்கள் இல்லாமல் மெளனமாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். 'இன்னாங்க இப்படி எடுத்து வச்சிருக்கீங்க. நான் போண்டிதான் ஆயிடுவேன் போலிருக்கு". ஆனால் படம் வெளிவந்து மக்கள் அதை ஆரவாரமாக வரவேற்றது சரித்திரம்.
ஆக.. இந்தப்படத்தின் முதுகெலும்பாக இளையராஜாவின் இசையை குறிப்பிடலாம். கதையோடு ஒட்டி, பின்னி உறவாடும் வகையில் பின்னணி இசை அமைப்பதில் இந்தியாவில் இவரளவிற்கு யாருமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. இதில் பாடல்களும் மிக சிறப்பாக இருக்கின்றன். 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா' என்கிற பாடலை மட்டும் ஒரு ஏகாந்த வேளையில் கேட்டால் நீங்களே ஒரு மலைப்பாதையை கடந்து போய்க் கொண்டிருப்பது மாதிரி தோன்றும். 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே' என்கிற பாடலில் வரும் லேலேலெலெ.... என்று வரும் ஹம்மிங்கை எப்போது கேட்டாலும், நான் எப்பவோ பார்த்த அஸாமைப் பற்றின ஒரு டாக்குமெண்டரிதான் ஞாபகத்திற்கு வரும். மிக இனிமையான ஹம்மிங்.
ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா
புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர்களுக்கான தேர்வில் தங்கம் வென்ற பாலுமகேந்திரா, தொழில்நுட்படம் அவ்வளவாக வளராத அந்த கட்டத்தில், ஆர்வோ (ORWO) கலரில் இந்தப் படத்தில் பல ஜாலமே செய்திருக்கிறார். மேற்குறிப்பிட்ட அதே பாடலை உதாரணமாக கொள்ளலாம். ஜீப்பில் மலைப்பாதையில் விரையும் திருப்பங்களும், பயணிக்கிறவர்களின் ஒவ்வொருத்தரின் முகபாவங்களும், பாடலின் முடிவில் வானத்து நிலாவை மரக்கிளைகளுக்கிடையான இடைவேளையில் காமிரா துரத்துவதுமாக....... கவிதைக் கணங்கள்.
ஒரு நல்ல ஒளிப்பதிவாளனின் வேலை, தன் திறமையை தனியே காண்பிக்காமல், கதையோட்டத்திற்கு குறுக்கே நிற்காமல், சம்பவங்களின் உணர்ச்சிகளுக்கேற்ப கோணங்களை ஒழுங்குபடுத்துவதுதான். அதை திறம்படவே செய்திருக்கிறார் பாலு.
ரஜினிகாந்த்
தன் எல்லா நடிப்புத் திறமையையும் இந்தப் படத்திலேயே கொட்டி விட்டதால், பிற்கால படங்களில் அந்தத் தொந்தரவுகள் ஏதும் இல்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தாரா என்று சந்தேகம் வருமளவிற்கு தன் உச்சபட்ச சிறப்பான நடிப்புத் திறமையை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.
தங்கைக்கு சோறு போடாமல் பட்டினியாக வைத்திருக்கிறான் என்று புரளி பேசினவனை அடித்து கும்மி விட்டு "என் வள்ளி பட்டினியா இருக்கான்னா, அது இந்த காளி செத்த நாளாத்தான் இருக்கும்" என்று உறுமுவதாகட்டும், கை போனதால் வேலையை விட்டு தூக்கிய, ஏற்கெனவே மெல்லிய வெறுப்பு படர்ந்திருக்கும் தன் மேலதிகாரயிடம் "பரவாயில்ல சார். நானும் உங்க இடத்துல இருந்தா, இப்படித்தான் செஞ்சிருப்பேன். கேவலம்.... நாம மனுஷங்கதானே சார்" என்று விரக்தியுடன் கூறிவிட்டு, சடாரென்று தன் முகபாவத்தை தீவிரமாக்கிக் கொண்டு "ரெண்டு கையி ரெண்டு காலு போனாலும் காளின்றவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட.... பய..... சார் இந்த காளி" என்று சவால் விடுகிறாற் போல் பேசுவதாகட்டும், கை போனதால் உதவிக்காக திருமணத்திற்கு சூசகமாக வற்புறுத்துகிற தன் தங்கையிடம் "ம்..... வள்ளிக்குட்டி. நான் என்னவோ நெனச்சேன். நீ கூட பொடி வெச்சு பேச கத்துக்கிட்டியே' என்று நக்கலடிப்பதாகட்டும், தனக்கு பிடிக்காத மாப்பிள்ளையுடன், ஊர்க்காரர்கள் துணையுடன் திருமணம் செய்யப் போகும் தங்கையிடம் "அந்த நாயிங்க எல்லாம் போகட்டும். ஏன்னா அதுங்க என் கூட பிறந்துதங்க இல்ல. ஆனா நீ என் ரத்தம்" என்று உருகுவதிலாகட்டும், தங்கை தன்னிடமே திரும்பி வந்ததும் "இப்ப உங்க மூஞ்சுங்கள எங்கடா வெச்சுக்கப் போறீங்க" என்று பெருமைப்படுவதிலாகட்டும்..........
ரஜினியின் Master Piece இந்தப்படம்தான் என்று தயங்காமல் கூறுவேன்.
ஆனால் இப்பேர்ப்பட்ட ரஜினி தன் பிற்கால படங்களில் இன்னும் விக் மாட்டிக்
கொண்டு 'நான் ஒரு தடவ சொன்னேன்னா' எனும் போது எரிச்சலாக இருக்கிறது. இந்தியாவின் டாப் ஸ்டாராகிய அபிதாப் கூட தன் வயதுக்கேற்ற மாதிரி BLACK., AKS மாதிரியான மாதிரியான மாற்றுப்படங்களில் நடித்துக் கொண்டிருக்க, இவர் இன்னும் தேவுடா..தேவுடா என்று பாடிக் கொண்டிருக்கிறார். அட தேவுடா...
ஷோபா
இந்தப் பெயரை உச்சரிக்கும் பா¡க்கும் போதே துக்கம் தொண்டையை அடைக்கிறது. இயல்பாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் ஒரு நல்ல நடிகையை நாம் இழந்துவிட்டோம்.
அப்பாவி முகத்துடன் அறிமுகமாகும் இவர், சரத்பாபு விட்டுச் சென்றிருந்த ஜீப்பை பஸ் டிரைவர் போல் தன்னை பாவித்துக் கொண்டு ஓட்டும் போதும் பின்பு பின்னால் வந்து நின்று கொண்டிருக்கும் சரத்பாவுவை மிரட்சியுடன் பார்ப்பதும் ஒரு குழந்தையைப் பார்ப்பது போலிருக்கிறது. இவருக்கும் சரத்பாபுவிற்கும் மலரும் அந்த சொல்லப்படாத காதலின் பரிணாம காட்சிகள் ஒரு கவிதைத்தனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் பிற்பகுதியில் குடும்பத்தின் பொருளாதார பாரத்தை தான் சுமக்க தயாராகும் போது அவரின் குழந்தை முகம் மறைந்து போய் முதிர்ச்சியான ஒரு இந்தியப் பெண்ணின் அடையாள முகம் தெரிகிறது. படத்தின் உச்சக்காட்சியில் தன் மனம் கவர்ந்தவனோடு போவதா, உருகி அழைக்கும் தன் அண்ணனின் குரலுக்கு செவிசாய்ப்பதா என்று தவிக்கும் காட்சியில் சிறப்பாக பங்காற்றியிருக்கிறார்.
சரத்பாபு
நான் சிறுவயதில் முதன்முதலாக ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நடிகர். (இப்போது பில்கேட்ஸே வந்தால் கூட வாங்க மாட்டேன்) மெல்லிய சிரிப்புடன் மிக மென்மையாக கையெழுத்திட்டு கொடுத்த அந்த மனிதரை மறக்கவியலாது.
இவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இவர் ஏன் ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக வரமுடியவில்லை என்று ஆச்சரியமாக இருக்கும். திடகாத்திரமான உடம்பு, நல்ல சிவப்பு, சுருள் முடி, அழகான முகம் என்று ஒரு
கதாநாயகனுக்குரிய எல்லா அம்சங்கள் இருந்தும், நண்பர்கள் வேஷத்திலேயே தன் திரையுலக பயணத்தை நடத்திக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி அங்கலாய்க்கவே தோன்றுகிறது. கதாநாயக முகம் என்பது எதிர்பார்க்கவியலாத ஒரு கலவையோடு, மக்கள் தங்கள் மனங்களில் மிக நெருக்கமாக உணர முடிகிற முகங்களுக்குத்தான் வாய்க்கும் போலிருக்கிறது.
இவருக்கும், காளி என்கிற கதாபாத்திரத்திற்கும் ஆரமபத்திலேயே அறிமுகமாகிற நல்லது, பொல்லாததுமான அறிமுகங்களும், காளிக்கு இவர் மேல் வெறுப்பு படரும் காட்சிகளும் மிகத்திறமையாக ஆரவாரமின்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. காளியால் 'லா பாயிண்ட்' என்று பட்டப் பெயர் வைத்து அழைக்கப்படும் இவர், காளி வேலை இழந்த நிகழ்வையும், காளிக்கு அடிபட்டிருக்கிற போது பகைமையை மறந்து மருத்துவமனைக்கு விரைவதிலும் ஒரு படித்த கனவானை நம் முன் நிறுத்துகிறார். தன் கெளரவத்தை விட்டு காளியிடம் பெண் கேட்டு மனரீதியாக மோசமாக அவமானப்படுவதிலும், ஓடிப் போகிற யோசனையை சொல்கிற காளியின் மனைவியிடம் அதை மறுப்பதிலும் தன் பாத்திரத்தை உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினையாற்றியிருக்கிறார்.
படாபட் ஜெயலஷ்மி
இன்னொரு ஷோபா. இன்னொரு தற்கொலை.
'அவள் ஒரு தொடர்கதை'யில் வருகிற அல்ட்ரா மாடர்ன் பெண்ணா என்று அதிசயப்பட வைக்கும் அளவிற்கு ஒரு கிராமத்து அடங்காப்பிடாரியாக நடித்திருக்கிறார். புளிப்பு மாங்காயும், வறுத்த மீனுமென்று தின்னிப் பண்டாரமாகவும் ஒரு ஆம்பிளைப் பாப்பாத்தியாக வருமிவர், காளியுடன் நடக்கும் ஒரு சிறிய சல்லாபத்தில் தன் பெண்மையை விழிப்பை உணர்ந்து நாணப்படும் காட்சியில் இயல்பாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் ஒரு குடும்பத்தலைவிக்கேயுரிய பொறுப்புடன் காளியின் தங்கையை தன் மகளாக நினைத்து அவளின் எதிர்காலம் பாழாகிற சூழ்நிலையில் தன்னையும் தன் வாழ்க்கையையும் பற்றி கவலைப்படாமல் தன் கணவனான காளிக்கு எதிரான தீர்மானமான முடிவை எடுக்கிறாள்.
மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு (அவர் மனைவியாக வருகிறவர்) என்று எல்லா கதாபாத்திரங்களும் மிக இயல்பாக வந்து போகிறார்கள்.
தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் தவற விடக்கூடாத அளவிற்கு அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் படமிது.
suresh kannan
Subscribe to:
Posts (Atom)