Wednesday, May 11, 2005

மொபைல் கணினிகள் பத்தாயிரம் ரூபாய்க்காமே?

பெங்களூரைச் சேர்ந்த கணினி ஆராய்ச்சி நிறுவனமொன்று (CSIR) தயாரிப்பில் இருக்கும் தங்கள் புதிய மொபைல் கணினிகளைப் பற்றி தெரிவித்த செய்தியன்று இன்றைய இந்து நாளிதழில் வந்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் விற்பனைக்கு கிடைக்கவிருக்கும் இந்த கணினிகளின் விலைதான் என்னை பரவசப்படுத்தியுள்ளது. ஒரு desktop கணினியின் அத்தனை அடிப்படை அம்சங்களும் கொண்ட இநத கணினிகளின் விலை ரூபாய் பத்தாயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

சமீபத்தில் ஏதோ ஒரு விழாவில் பேசிய தயாநிதி மாறன் வரும் 2008 ஆண்டுக்குள் எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் கணினியின் விலை பத்தாயிரமாக ஆக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்லி முடிப்பதற்குள் வந்திருக்கும் அறிவிப்பு அரசியல்வாதிகள் தாங்கள் சம்பந்தப்பட்ட துறையில் எவ்வளவு updated ஆக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த பட்ஜெட்டில் கணினியின் விலை குறையும் என்று எதிர்பார்த்து ஏமாந்த எனக்கு இந்த செய்தி உண்மையிலேயே மகிழ்வளிக்கிறது என்றாலும் இதன் சாதக, பாதக அம்சங்கள் குறித்த முழுத்தகவல்கள் அறியாமல் முழுவதுமாக மகிழ முடியாது.

கணினி சம்பந்தப்பட்ட நுட்பத்தில் தேர்ச்சியடைந்திருக்கும் நண்பர்கள், இதைப் பற்றின மேலதிக விவரங்களை ஆராய்ந்து தெரிவித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சம்பந்தப்பட்ட சுட்டி:
http://www.hindu.com/2005/05/11/stories/2005051103002200.htm

suresh kannan

No comments: