Tuesday, July 16, 2019

பிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்








நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு

**

இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வெளியாகும். வழக்கம் போல், உங்களின் தொடர்ந்த ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


**

பிக்பாஸ் 3 – நாள் 22 – “பிக்பாஸ் வீட்டின் ‘புதிய’ இம்சை அரசி”

பிக்பாஸ் (தமிழ்) வரலாற்றிலேயே இது நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை. முன்மொழிபவர் இரு நபர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதைத்தான் வழக்கமாக காட்டுவார்கள். ஆனால் பெரும்பாலோனோர் சொல்லி வைத்தது போல் இன்று மீராவின் பெயரையே வரிசையாகக் குறிப்பிட்டார்கள். பிக்பாஸின் எடிட்டிங் டீமே இதனால் மிரண்டு போய் தன் வழக்கமான பாணியைக் கைவிட்டு மீராவின் திருநாமம் தொடர்ந்து உச்சரிக்கப்படுவதைக் காட்டி நம்மையும் மிரட்டினார்கள்.

அபிநயத்தால் மோகனிடம் கேட்டார் சரவணன். அதில் காணப்பட்ட சில சைகைகளும் உடல்மொழியும் மோகனை காயப்படுத்திற்று.

பரதநாட்டியம் கற்ற ஆண்களுக்கு ஒரு பிரச்சினையுண்டு. பெண்களின் உடல்மொழி தன்னிச்சையாக அவர்களிடம் படிந்துவிடும். இது இயல்பானதுதான். ஆனால் பொதுப்புத்திக்கு இது புரியாது. ஆபாசமாக கிண்டலடிக்கும். கமல்ஹாசனுக்கும் இது போன்ற சங்கடம் நேர்ந்ததாக ஒரு தகவல் உண்டு. பரதநாட்டியம் பயின்று கொண்டிருந்த காலக்கட்டத்தில் இது சார்ந்த விமர்சனங்கள் வரத்துவங்க, அவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு கடுமையான உடற்பயிற்சி செய்து தன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றிக் கொண்டதாக சொல்வார்கள்.






suresh kannan

1 comment:

malar said...

நேற்றைய எபிசோடில் சரவணன் செய்தது ஏற்க முடியாதது .
அப்படி அபிநயம் பிடித்து காட்ட அவர் நடனம் பயின்றவருமல்ல .என்னதான் அவர் சமாளித்தாலும் காபி போடும் இடத்தில நடந்தது பிரச்சினையின் காரணகர்த்தா சரவணைன் .அவர் செய்தது அது முகம் சுளிக்கவைத்தச்செயல் .
வர வர லொஸ்லியா கவின் போரடிக்கிறார்கள் .ஐ மிஸ் வனிதா .