Thursday, June 29, 2006

புதுப்பேட்டையும் காயலான் கடையும்

என் நினைப்பில் மண்ணைப் போட்ட செல்வராகவன் என்று 7-ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தைப் பற்றி நான் முன்னமே எழுதியிருந்தாலும் அவரின் மீது எனக்கு இன்னமும் நம்பிக்கை இருந்தது, "காதல் கொண்டேன்" என்கிற வித்தியாசமான முயற்சியை அளித்ததற்காக. ரவுடி, தாதாக்களை நாயகர்களாகக் கொண்ட படங்கள் தற்சமயம் நிறைய வந்துக் கொண்டிருந்தாலும் செல்வராகவன் தன் தனித்தன்மையுடன் 'புதுப்பேட்டை' யை உருவாக்கியிருப்பார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் .......

()

விளிம்புநிலை மனிதர்களை பிரதானமாகக் கொண்ட படம் என்று கேள்விப்பட்டதிலிருந்து இந்தப்படத்தை சென்னையின் படுலோக்கல் தியேட்டர்களான கிருஷ்ணவேணி, சயானி, நாதமுனி போன்றவற்றில்தான் பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். தங்களுடைய வாழ்க்கையில் நிஜத்தில் அன்றாடம் பார்க்கின்றவற்றை நிழிலில் பார்க்கும் போது எவ்வாறு அவர்கள் எதிர்வினையாற்றுவார்கள் என்று யூகிப்பது எனக்கு கிளர்ச்சியூட்டுவதாயிருந்தது. ஆனால் சென்னையின் சொகுசு திரையரங்களில் ஒன்றான "சத்யம்" குழுமத்தில் பார்க்க விதித்திருந்தது.

முலைகளையும், பிருஷ்டங்களையும் பிரதானமாக துருத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிந்திருந்த பெரும்பாலான யுவதிகள், தங்களை வெறித்துப் பார்க்கும் ஆண்களைப் பற்றிய பிரக்ஞை இல்லாதது போல் பாவனை செய்தனர். யுவன்களோ, லண்டன் வெள்ளைக்கார தாதிக்கு பிறந்தவர்கள் போல் " கிவ் மீ பிப்டி பக்ஸ் மேன்" என்று குதறலான ஆங்கில உச்சரிப்புடன் உலவிக் கொண்டிருந்தனர். பணக்காரத்தனமான அந்த சூழல் வழக்கம் போல் என்னை அசெளகரியமாகவும் விநோதமாகவும் உணர வைத்தது. மேல்தட்டு மக்கள் இடைவேளையில் முன்னரே கட்டணம் செலுத்தி தின்பண்டங்களை பிருஷ்டங்களை நகர்த்தாமல் தங்களின் இருக்கைகளுக்கே வரவழைத்துக் கொண்டனர். மூத்திரப்புரைக்கு செல்லத் தேவையில்லாமல் இருந்த இடத்திலேயே சிறுநீர் பிடிக்கப்பட்டுக் கொள்ளும் வசதி இருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்தி அதையும் பயன்படுத்திக் கொள்வார்களாயிருக்கும். இந்த மாதிரியான மனிதர்கள் "Low Class People" படத்தை பார்க்க விரும்பினது குறித்து எனக்கு எந்தவிதமான ஆச்சரியமுமில்லை. ஏனெனில்....

சிலவகை படங்கள் திறமையான மார்க்கெட்டிங் உத்திகள் மூலமும், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு மூலமும் சிறந்த படம் என்கிற மாயத்தோற்றத்தையும், சராசரி திரைப்பட பார்வையாளனிடம் ஒரு மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி லாபம் சம்பாதித்து விடும். ரஜினிகாந்த், விஜய் போன்றவர்களின் பெரும்பாலான குப்பைப் படங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். புதுப்பேட்டையையும் அந்த வகையில் சேர்க்க நேரிட்டது துரதிர்ஷ்டவசமான ஒன்றுதான்.

()

தனிமைச் சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி (தனுஷ்) சற்றே மனம் பிறழ்ந்த நிலையில் தன் வாழ்க்கையை சுயவாக்குமூலமாக பார்வையாளர்களுக்கு விவரிப்பதில் படம் துவங்குகிறது.

எந்தவிதமான முன்னேற்பாடான காட்சிகளுமில்லாமல், "படிச்ச நாயே கிட்ட வராதே" என்ற பாடலை ஒரு சேரி வாழ் மாணவன் பாடுகிறான். திரைப்படங்களில் பாடல் எனும் அம்சம் இருப்பதே அபத்தமெனும் போது "எதற்காக படிச்ச நாயை திட்டுகிறான்" என்று கேள்வி எழுப்புகிற சம்பந்தமேயில்லாத இந்த மாதிரி பாடல்களின் பங்கு இன்னும் அபத்தமானது. இதில் irony என்னவென்றால் பாடுகிற மாணவனே பிளஸ் 2 படிப்பவன்தான். பாடலில் மட்டுமே ஒலிக்கிற (புதுப்பேட்டை, காசிமேடு, வியாசர்பாடி எங்க ஏரியா) குறிப்பிடப்படுகிற இடங்கள் திரைப்படத்தின் பெரும்பாலான பின்னணி காட்சிகளில் எங்குமே காணப்படவில்லை. நிர்மாணிக்கப்பட்ட ஜொலிப்பான அரங்குகளிலும் பின்னணியின் சூழலே புரியாத இடங்களிலுமே திரைப்படம் பயணிக்கிறது.

தன்னுடைய தந்தையினாலேயே தன் தாய் கொல்லப்படுவதை அறிகிற அவன் பயந்து போய் வீட்டை விட்டு ஓடி பிச்சையெடுக்க ஆரம்பிப்பதும் சூழ்நிலை காரணமாக ஒரு ரவுடி கூட்டத்தில் சரண் புகுந்து அவனே பெரிய ரவுடியாகி, சமூக விரோதிகளின் பாதுகாப்பான புகலிடமான அரசியலில் குதிப்பதில் படம் நிறைகிறது. இந்த காவியத்தை "வித்தியாசமாய் சொல்கிறேன் பேர்வழி" என்று பார்வையாளர்களை படுத்தி எடுக்கிறார் செல்வராகவன். நம்பவே முடியாத காட்சியமைப்புகள், நாயக பாத்திரத்திற்கு பொருந்தாத தனுஷின் உடல்வாகு, நத்தை வேக திரைக்கதை என்று எல்லா அம்சங்களும் சேர்ந்து இந்தப் படத்தை ஒரு தரமில்லாத படமாக்குகின்றன.

()

தனுஷைப் பற்றி சிறப்பாக கூறியாக வேண்டும். படத்தின் காட்சி ஒன்றில் ரவுடி கதாபாத்திரம் ஒன்று தன் தம்பியை நோக்கி எரிச்சலுடன் கூறுவதாக ஒரு வசனம் வரும். "அந்த கூலிங்கிளாஸ கழட்டித் தொலைடா. லட்சம் லட்சமா பணத்த கொட்டி இவனைப் போட்டு படம் வேற எடுக்கறேன். என்ன ஆகப்போகுதோ" அதற்கு தம்பி "இல்லண்ணா. நீயே பாரு. படம் செமயா பிச்சிக்கப்போவுது" இந்த வசனம் செல்வராகவனின் மனச்சாட்சியிடமிருந்து தன்னையுமறியாமல் வெளிப்பட்டு விட்டதோ என்று யூகிக்கிறேன். தான் நடிக்கிற பாத்திரங்களுக்கேற்றவாறு முற்றிலும் பொருந்துகிற உடலமைப்பு இல்லையென்றாலும் தன் நடிப்புத் திறமையால் அந்த வெற்றிடத்தை நிரப்பி சாதனை படித்தோர் முன் உதாரணங்களாக உண்டு.

"வீர பாண்டிய கட்டபொம்மன்" படத்தை பார்த்திருந்த ஒரு வெளிநாட்டவர், சிவாஜி கணேசனை நேரில் பார்க்க நேரும் போது "நீங்கள் இவ்வளவு குள்ளமானவர் என்பதை படத்தில் என்னால் உணரவே முடியவேயில்லையே. திரையில் பார்க்கும் போது உயரமானவராக காட்சியளித்தீர்களே" என்று ஆச்சரியத்துடன் கேட்டாராம். "அந்தப் பாத்திரத்திற்கான உடைகளை அணியும் போது உள்ளூர பொங்கும் கம்பீர உணர்ச்சியினால் என்னையுமறியாமல் மார்பை உயர்த்தி நடித்ததினால் அப்படி நேர்ந்திருக்கலாம்" என்றாராம் சிவாஜி. எங்கேயோ படித்திருக்கிறேன். "யார்ரா இவன் பென்சில்ல கோடு போட்டா மாதிரி" என்று படத்திலேயே கிண்டலடிக்கப்படும் தனுஷ் ஒரு ரவுடிக் கூட்டத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும் சரமாரியாக அடி வாங்கியும், கொடுத்துமாக பரிதாபமான உடலமைப்பைக் கொண்டு அவர் நடிக்க முயலும் போது நகைக்கவே தோன்றுகிறது. ராம்கோபால் வர்மாவின் முதல் தெலுங்குப்படமான "சிவா"வில் ஏறக்குறைய இதே மாதிரியான உடலமைப்பை கொண்ட ரகுவரன், பெரிய தாதாவாக வந்து அந்தக் குறையே தெரியாமல் தன் நடிப்பால் பார்வையாளர்களை பிரமிக்க வைப்பார். ஆக ... செல்வராகவன் இனி தன் சகோதரனையே கட்டியழுதுக் கொண்டிருக்காமல் பாத்திரத்திற்கு பொருத்தமானவர்களை தேர்ந்தெடுப்பது நல்லது. வட இந்தியாவைப் போல் இங்கே ரவுடிகளிடம் நவீன துப்பாக்கி வகைகள் இன்னும் அதிகளவில் புழக்கத்தில் வரவில்லையென்பது

யதார்த்தமென்றாலும், ஏதோ பழைய பட எம்.ஜி.ஆர் vs நம்பியார் போல தனுஷ் கத்தியை சுழற்றிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருப்பது அதீதமாக இருக்கிறது.

()

படத்தின் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாக அரவிந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவை குறிப்பிடலாம். காட்சிகள் கண்ணில் ஒற்றிக் கொள்கிற தெளிவுடன் சூழலுக்கேற்ற ஒளியமைப்புகளுடன் சிறப்பாக இருக்கிறது. யுவனின் பின்னணி இசை cliche-க்களைத் தவிர்த்து மேற்கத்திய பாணியில் சிறப்பாக இருந்தாலும் The God Father படத்தின் பின்னணி இசையை ஞாபகப்படுத்துவது போல் இருந்ததை தவிர்த்திருக்கலாம். "உசிரோட இருக்கணும் கண்ணு. அதுதான் முக்கியம்" என்பது போன்ற வசனங்கள் ஒலிக்கும் இடங்களில் மட்டும் பாலகுமாரன் நினைவுக்கு வருகிறார். 'விபச்சாரியாக நடித்தால் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது' என்று யாராவது சிநேகாவிடம் சொல்லியிருப்பார்களோ என்னவோ, ரொம்பவும் பரிதாபமாக வந்து போகிறார். சோனியா அகர்வாலைப் பற்றியெல்லாம் எழுதவே தேவையில்லை.

நாம் ஆள்வதற்கு (வேறு வழியில்லாமல்) தேர்ந்தெடுப்பவர்களின் நிழலான பின்னணிகள் குறித்தும், அதில் உள்ள அசிங்கங்கள் குறித்தும் சொல்ல செல்வராகவன் இவ்வளவு மோசமான அளவில் மெனக்கெட்டிருக்க தேவையில்லை. இவ்வளவு தரமில்லாத படத்தை எடுத்துவிட்டு "தமிழ்ச்சினிமாவை அடுத்த தளத்திற்கு நகர்த்தியிருக்கிறேன்." "சர்வதேசதர படம்" என்றெல்லாம் பேட்டிகளிலும் படவிளம்பரங்களிலும் குறிப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது. இந்த மாதிரியான ரவுடிகளை நாயகர்களாக காட்டும் இயக்குநர்கள் கிளைமாக்ஸ் முடியுமுன், சென்சாருக்கு பயந்தோ என்னவோ அவர்களை சாகடித்தோ, திருத்தியோ, வன்முறைக்கெதிரான அறிவுரை சொல்லியோ கேவலமாக படத்தை முடிப்பார்கள். ஆனால் பரவாயில்லை... செல்வராகவன் "இவர் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்" என்று போட்டு இதுதான் யதார்த்தம் என்பதை சொல்கிறார்.

()

சென்னையில் புதுப்பேட்டை என்கிற இடம், பழைய இரும்புச் சாமான்கள், வாகனங்களின் துருப்பிடித்த உதிரி பொருட்களை விற்கும் காயலான் கடைகள் அடங்கிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு அறியப்படுகிறது. இந்த புதுப்பேட்டையையும் இந்தக் கடைகளில் விற்கப்படும் ஒரு பொருளின் தரத்திற்கே இணையாக சொல்லலாம்.

பி.கே. சிவகுமாரின் கட்டுரைகள்

அழகிய சிங்கர் பல வருடமாக நடத்திக் கொண்டு வரும் சிற்றிதழான நவீன விருட்சத்தின் சமீபத்திய இதழில் (இதழ் எண்.71-72) பி.கே.சிவகுமாரின் கட்டுரைத் தொகுப்புக்காக நான் எழுதிய மதிப்புரை பிரசுரமாகியுள்ளது. அதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (நன்றி : நவீன விருட்சம்)

ஒரு வாசக மனத்தின் நுட்பமான அவதானிப்புகள்

அட்லாண்டிக்குக்கு அப்பால் - பி.கே.சிவகுமார் (கட்டுரைகள்)எனிஇண்டியன் பதிப்பகம், ரூ.120/-

()

தன்னைச் சுற்றி நிகழ்கிற அல்லது தன்னைப் பாதிக்கிற எந்த சமூக நிகழ்வைப் பற்றியும் கவலையில்லாத ஆட்டு மந்தைகளாக இருப்பவர் ஒருபுறமிருக்க, மாறாக அதை பொறுப்புணர்ச்சியோடு கூர்ந்து கவனித்து, உள்வாங்கி விமர்சிப்பதோ, பதிவு செய்வதோ சில பேருக்குத்தான் சாத்தியமாகிறது. எழுத்தாளர்களுக்கு தம் எண்ணங்களையும் கருத்துக்களையும் தம்முடைய படைப்புகளின் மூலம் வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்றால் சாதாரணர்களுக்கு வடிகாலாக அவர்களது நாட்குறிப்புகளே அமைகின்றன. இதனால் பலரின் சிறந்த கருத்துக்கள் வெளியுலகிற்கு தெரியாமலேயே போய்விடும் துர்ப்பாக்கிய நிலை இதுநாள் வரை ஏற்பட்டிருந்தது. ஆனால் கணினி தொழில்நுட்பம் சாதாரணர்களையும் எட்டியிருக்கிற இந்தக் காலகட்டத்தில் பல்வேறு விதமான இலவச வலைப்பதிவுச் சேவைகள், இந்தக் குறையை போக்கி எந்தவொரு மனிதரும் தம் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் அதை பிறர் பார்வையிடுவதற்குமான வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்கின்றன. எழுத்து என்றாலே அச்சு ஊடகம்தான் என்கிற நிலை மாறி இன்று இணையத்தில் ஏராளமான தமிழ் படைப்புகள் படிக்கக் கிடைக்கின்றன. அந்த வகையில் எழுதப்பட்ட பி.கே.சிவகுமாரின் சிறந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு அச்சு ஊடகங்களை மட்டுமே சார்ந்திருப்பவர்களின் வசதிக்காக புத்தக வடிவிலே வெளியிடப்பட்டிருக்கிறது.

சிவகுமாரின் இந்த கட்டுரைகள் எல்லாமே இணையத்திலேயே வெளியாகி இணைய வாசகர்களின் பரவலான கவனத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள இலக்கியம், சமூகம், விவாதம், கவிதை, என்று வெவ்வேறு தலைப்புகளில் உள்ள 45 கட்டுரைகளை ஒருசேர வாசிக்கும் போது சிவகுமாரின் நுட்பமான ரசனையையும், வள்ளுவர் சொன்ன 'மெய்ப்பொருள் காணுதலை'யும், அவரின் பரந்துபட்ட வாசிப்பையும் நம்மால் உணரமுடிகிறது. 'வாசக அனுபவம்' என்கிற தலைப்பில் அமைந்துள்ள முதல் பகுதியில் பல்வேறு நூல்களின் விமர்சனங்கள் உள்ளன. விமர்சனக்கலை என்பது தமிழில் பொதுவாக சுய விருப்பு மற்றும் வெறுப்பு சார்ந்த, முன்தீர்மானங்களுடன் நூலை அணுகுகிற நிலையிலேயே இருக்கும் இன்றைய சூழலில் எவ்வித முகாமையும் சாராத இம்மாதிரியான பொதுவான வாசகர்களின் பார்வையில் சம்பந்தப்பட்ட நூலின் உண்மையான தகுதி குறித்து நம்மால் தெளிவாக உணரக்கூடும். ஒரு இளம் வாசகன் இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது தன் வாசிப்பனுபவத்தின் போதாமையையும், அதன் எல்லையை விரிவாக்க வேண்டிய அவசியத்தையும் உணரக்கூடும்..

()

உமாமகேஸ்வரியின் 'வெறும் பொழுது' என்கிற கவிதைத் தொகுப்பைப் பற்றி சிவகுமார் குறிப்பிடுகையில், 'மேலை நாடுகளிலிருந்து பிரதியெடுக்கப்பட்ட பெண்ணியக் கருத்துக்கள்' என்று சிலரால் குற்றஞ்சாட்டப்படுகிற தற்போதைய பெண் கவிஞர்கள் அந்த குற்றச்சாட்டுக்களை தங்களின் உணர்வு ரீதியான படைப்புகளின் மூலம் பொய்யாக்கியிருக்கிறார்கள். தலித் இலக்கியம் போல் பெண்களின் உணர்வுகளை பெண்களினால் மட்டும் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்கிறார். உமா மகேஸ்வரியின் கவிதைகள் பெண்ணியத்தை பெண்மையின் சிறப்பான குணாதியங்களுடன் சொல்ல விழைகின்றன என்பது இவரது கருத்து. 'கவிதை மனதிற்கு ஓர் அசைவை ஏற்படுத்தியதாக இருக்க வேண்டும்' என்கிற பிச்சமூர்த்தியின் கருத்திற்கேற்ப உமா மகேஸ்வரியின் கவிதைகளும் செயல்படுகின்றன என்று சிலாகிக்கும் இவர், ஆண்டாண்டுகளாக ஒடுக்கப்பட்ட பெண்கள், அதை ஆண்கள் மீதான வன்மமாக வெளிப்படுத்துவதைப் போல் அல்லாமல் அன்பும் நம்பிக்கையும் கொண்ட கவிதைகளாக இவரின் படைப்புகளை பார்க்கிறார் சிவகுமார்.

பழம்பெரும் எழுத்தாளரான வல்லிக்கண்ணனின் சுயசரிதமான 'வாழ்க்கைச் சுவடுகள்' என்கிற நூலைப் பற்றி எழுதும் போது, இந்த நூலின் மூலம் தமிழ்ச் சமூக வாழ்க்கையையும், கலை இலக்கியத்தையும், சிறுபத்திரிகைச் சூழலை அறிய உதவுகிற பொக்கிஷமாக குறிப்பிடுகிறார். சரித்திர நாவல்கள் என்று எழுதப்படும் பம்மாத்துகளை வெறுக்கும் வல்லிக்கண்ணனின் படைப்புகளை திராவிட இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கியே வைத்திருந்தன என்கிற செய்தி இந்த நூலின் மூலமாக நமக்கும் தெரிகிறது. திரைப்படத் துறையினரின் 'நீக்கு போக்குக்கு' ஏற்ப தம்மால் செயல்பட முடியாது என்று வந்த வாய்ப்பை உதறித் தள்ளிய வல்லிக் கண்ணனின் மீது சிவகுமாருக்கு ஏற்படுகிற மரியாதையைப் போலவே நமக்கும் ஏற்படுகிறது. 'பாராட்டுகிற மனம் வேண்டும்' என்கிற பாரதியின் வழியை தாமும் பின்பற்றுவதாக சொல்லும் வல்லிக்கண்ணனை, ஜெயமோகன் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் இவ்வாறு விமர்சித்துள்ளார் "வல்லிக்கண்ணன் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் பிற்காலத்தில் முக்கியமானவர்களாக ஆன பெரும்பாலான எழுத்தாளர்களை ஊக்குவித்து ஒருவரியேனும் எழுதியவரோ, பேசியவரோ அல்ல. அவர்களுக்கு தடைகளையும் உருவாக்கியவர். அவரை அங்கீகரிக்கும் முதிரா இளைஞர்களுக்கு மட்டும் ஓயாமல் ஊக்கம் கொடுப்பதே அவரது பாணி".

சுஜாதா (கணையாழியின் கடைசிப் பக்கங்கள்) சுகுமாரன் (திசைகளும் தடங்களும்) என்று நவீன இலக்கியம் மட்டுமல்லாது சித்தர் பாடல்களிலும், கம்ப ராமாயணத்திலும் சிவகுமாரின் வாசிப்பு நீள்கிறது. சிவவாக்கியரைப் பற்றி குறிப்பிடும் போது 'பகுத்தறிவைப் பயன்படுத்தி இறைவனை மறுக்கிற நாத்திகர்களிடையே, பகுத்தறிவால் இறைவனை உணர்ந்து அறிய முடியும் சொன்ன ஆத்திகர்' என்கிறார். பொருள்தேடி வெளிநாடு செல்லும் தமிழர்கள் பொதுவாக தங்கள் அடையாளங்களை அங்கே தொலைத்துக் கொண்டிருக்கும் சூழலில், சிவகுமார் தனது தாத்தாவிற்கு சொந்தமான பழுப்பேறிய புத்தகத்தை விருப்பமுடன் எடுத்துச் சென்றிருக்கிறார். வை.மு.கோபால கிருஷ்ணமாச்சர்யரின் கம்பராமாயண உரைத் தொகுப்பான அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதும் போது அவரின் நினைவுகள் பின்னோக்கி தாத்தாவின் வீட்டைச் சுற்றியும், நூல்நிலையத்தைச் சுற்றியும் வி¡கிறது.

கம்பராமாயணத்தில் கதல் (நெல்) பாகம், திராட்சா (புல்) பாகம், நாரிகேள (கல்) பாகம் என்று மூவகை நடையும் இருப்பதையும், அதை விளக்கும் வண்ணமாக நெல்லென்பது வாழைப்பழம் தோலையுரித்த பின் சுவை தருவது போல வாசக மனம் சிறிது ஆராய்ச்சி செய்த பின் சுவை தருவது, திராட்சா பாகம் என்பது சுவைத்த மாத்திரத்தில் உள்ளும், புறமும் சுவை தருவது, அதன் மேலிருக்கும் கடினமாக பட்டையையும், ஓட்டையும் நீக்கியபின் அவை தருகிற தேங்காய் மாதிரியானது நாரிகேள பாகம் என்றும் விளக்கும் உரையாசிரியரை சிலாகிக்கும் சிவகுமார், 'தற்கால நவீன கவிதைகளில் பெரும்பாலானவற்றை நாரிகேள பாகத்தில் அடக்கி விட முடியும் என்று தோன்றுகிறது' என்றெழுதி நம்மையும் நகைக்க வைக்கிறார்.

'இலக்கியம்' என்கிற பகுதியில் சிவகுமாரின் வாசக மனம் இலக்கியம் குறித்து சில உரத்த சிந்தனைகளை நம் முன் வைக்கிறது. மரபுக்கவிதையா, புதுக்கவிதையா என்கிற வாதங்கள் இன்றளவும் நீடிக்கின்ற சூழலில், தமிழ்க் கவிதைகள் ஒவ்வொரு காலத்திலும் தன் வடிவத்தை இடையறாது மாற்றிக் கொண்டு வரும் போது மரபுக்கவிதையும் ஒருகாலத்தில் புதிய வடிவம்தான் என்பதையும், இப்போது கொண்டாடப்படுகின்ற புதுக்கவிதையின் வடிவமும் ஒழிந்து வேறொரு வடிவம் பின்னாளில் வரும் என்கிற விரிவான
பார்வையோடு 'புதுக்கவிதையும் மரபுக்கவிதையே' என்கிற கட்டுரை மொழிகிறது. தமிழ் படைப்புகளின் மீதான விமர்சனங்களையும், விமர்சகர்களையும் குறித்து ஒரு கட்டுரை கூறுகிறதென்றால் இன்னொன்று 'எது கவிதை?' என்கிற தலைப்பில் கவிதைக்கும் வாசகனுக்கும் இடையிலான உறவையும், புரிதலையும் ஆராய்கிறது. சமையலையும் எழுத்தையும் ஒப்பிட தைரியம் வேண்டுமென்றால் அது சிவகுமாரிடம் இருக்கிறது. எளிமையான சமையலில் குறை இருந்தால் உடனே தெரிந்து விடுவது மட்டுமல்லாது இவ்வகையான சமையலே சிரமமானது என்றும் கருதும் நூலாசிரியர், அதே போல் எளிமையான ஆனால் குறை இல்லாத எழுத்தை படைப்பதும் சிரமமான காரியமே என்பதை 'சமையலும் எழுத்தும்' என்கிற கட்டுரையில் கூறுகிறார்.

இதுவரையான பக்கங்களில் ஒரு வாசகராக நாம் பார்த்த சிவகுமார், 'விவாதம்' பகுதியில் ஒரு வழக்கறிஞராக உருமாறி கூர்மையுடனும், ஆதாரங்களுடனும், மெலிதான அங்கதத்துடனும் தாம் சரி என்று கருதும் வாதங்களை தீர்மானமாக முன்வைக்கிறார். ஜெயகாந்தனை விமர்சித்து முறையே அரவிந்தனும், மாலனும் இணையத்தில் எழுதிய கட்டுரைகளுக்கு இவரின் எதிர்வினைகள் தகவல்பூர்வமானதாகவும், பாராட்டத்தக்க அளவிலும் இருக்கிறது. என்றாலும் ஜெயகாந்தனை 'குருபீடமாக' ஏற்றுக் கொண்டிருக்கும் (இங்கே ஜெயகாந்தனின் 'குருபீடம்' என்கிற சிறுகதையை நினைவு கூர்வது பொருத்தமானது) சிவகுமார், 'எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளையும் அவற்றின் நிறை குறைகளோடு பரீசீலிப்பதும், தனது ஆதர்ச எழுத்தாளரின் படைப்புகளை கண்மூடித்தனமாக பாராட்டாதிருப்பதும், மாறாக தன்னைக் கவராத படைப்பாளிகளை முன்தீர்மானத்துடன் அணுகாதிருப்பதும், ஒரு சுதந்திரமான வாசகனின் ஆதாரமான செயல்பாடாக இருக்க வேண்டும்' என்று நான் கருதுகிற விஷயத்திற்கு மாறாக ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரை இறுகப் பற்றிக் கொண்டிருப்பது சரியா என சிவகுமார் யோசிக்க வேண்டும்.

'கவிதை கேளுங்கள்' பகுதியில் தன்னைக் கவர்ந்த சில கவிஞர்களின் படைப்புகளை தன் சுய அனுபவங்களுடன் ஒப்பிட்டு சிலாகிக்கிறார் சிவகுமார். 'தனித்தமிழ்' என்கிற விஷயம் மாயையான ஒன்று என்று ஆதாரங்களுடன் விளக்கும் இரண்டு கட்டுரைகளை (பொருந்தாக் காமம், தனித்தமிழ் என்னும் போலி') இந்தப் புத்தகத்தின் முக்கியமான கட்டுரைகளாக கருதலாம். பெரும்பாலோனோர் தினம் அருந்தும் பானமான, புழக்கத்திலுள்ள சொல்லாக விளங்கும் காப்பி (Coffee) என்ற சொல்லுக்கு மாற்றாக தனித்தமிழ் ஆர்வலர்கள் ஆக்கியிருக்கும் 'கொட்டைவடிநீர்' என்ற சொல்லை 'விந்து' என்று புரிந்து கொண்டதாக சிவகுமாரின் நண்பரொருவர் குறிப்பிடுகையில் திணிக்கப்படுகிற தனித்தமிழ் என்பது அபத்தமானதாகவும், அனர்த்தமான பொருள்படவும் ஆகிவிடக்கூடிய அபாயம் நமக்கு உறைக்கிறது. பரிதிமாற் கலைஞரும், மறைமலையடிகளும் ஆரம்பித்த 'தனித்தமிழ்' இயக்கத்திற்கு முன்பே எவ்வாறு பலவகையான பிறமொழி சொற்களை தன்னுள் ஏற்று பாதிப்படையாமல் தமிழ் செழுமையுடன் விளங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை பல்வேறு உதாரணங்களுடன் இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார் சிவகுமார்.

என்றாலும் "திசைச் சொற்கள் தொல்காப்பியத்திற்கு முன்பிருந்தே தமிழில் இருந்தன என்று அறிய வருகிறோம். உதாரணமாக 'அந்தோ' என்ற வார்த்தை சிங்களத்தில் இருந்து வந்தது என்றும் சிக்கு ('சிக்கெனப் பிடித்தேன்' என்கிறது நம் பக்தி இலக்கியம்) என்பது கன்னடத்திலிருந்து வந்தது என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்" என்று எழுதுவதின் மூலம் சிங்களமும் கன்னடமும் தமிழின் தொன்மைக்கு நிகரானது அல்லது அதற்கும் முந்தையது என்று கூற விரும்புகிறாரா என்று புரியவில்லை. 'சமூகம்' என்கிற பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கட்டுரைகளோடு வீரப்பன் மரணம், ஜெயேந்திரர் கைது, பெரியார், தலாய் லாமா, அரசியல் ஆகியவற்றின் உள்ளடக்கங்களில் இன்னபிற கட்டுரைகளும் நிறைந்துள்ளன.

இறுதிப் பகுதியான 'அமெரிக்கா' என்கிற தலைப்பில், வெளிநாட்டில் வாழும் தமிழரான கட்டுரையாசிரியரின் சுயஅனுபவங்களின் தொகுப்பு அடிப்படை மனித நேயத்துடனும், சுவாரசியமான சம்பவங்களுடனும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திண்ணை.காம் இணையத்தளம் குறித்த விமர்சனமும் இதில் அடக்கம். ஜெயமோகன் இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல "மேலை நாட்டு விஷயங்களை மிதமிஞ்சில் புகழ்ந்தேத்தி இந்தியாவை இறக்கி நோக்கும் பார்வை. என்ன இருந்தாலும் இந்தியா போல வருமா என்ற நோக்கு" ஆகிய தொனிகள் தவிர்க்கப்பட்டே இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

()

சிவகுமாரின் எழுத்து வாசிப்பிற்கு அப்பாலும் நம்மைச் சிந்திக்கச் செய்வதை (குறிப்பாக தனித்தமிழ் குறித்த கட்டுரைகள்) அவர் எழுத்தின் வெற்றியாகக் கருதுகிறேன். என்றாலும் சில கட்டுரைகள், ஆரம்பிக்கின்ற வேகத்திலேயே முடிந்து விடுகின்றன. சிவகுமார், சுகுமாரனின் கட்டுரைத் தொகுப்பைப் பற்றி குறிப்பிடும் போது "இப்படிப் பல இடங்களில் நிறுத்தி படிக்க வைக்கிற வரிகளைக் காணும் போது, அவற்றையெல்லாம் விரித்து இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை" என்று எழுதுகிறார். இதையே இவரின் சில கட்டுரைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. பின்னாளில் இந்தக் கட்டுரைகள் அச்சேறும் என்ற பிரக்ஞையுடன் எழுதப்பட்டிருந்தால் இந்தக் குறை தவிர்த்திருக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது.
விவாதக் கட்டுரைகளின் முன்னும் பின்னுமான தொடர்ச்சியான மற்றவர்களின் பதிவுகளை இணையத்தில் மாத்திரமே வாசிக்க முடியும் எனும் போது, இணையப் பரிச்சயம் இல்லாத வாசகர்களுக்கு இது ஒரு தடையாக இருக்கக்கூடும். மேலும் இணையத்தில் மட்டுமே புழங்கும் சில எழுத்தாளர்களின் பெயர்கள் கட்டுரைகளில் ஊடாடும் போது, அவர்களைப் பற்றின அறிமுகங்கள் இல்லாத அச்சு ஊடக வாசகர்களுக்கு இது நெருடலை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இவையெல்லாம் எளிதில் தாண்டிவிடக்கூடிய சிறு தடைகளே எனும் போது பொருட்படுத்த வேண்டியதில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஒரு இளம் வாசகன் இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் போது தனது வாசிப்பு பயணத்தை - அபத்தமான படைப்புகளைத் தவிர்த்து - ஒரு திட்டமிடலுடனும் தீர்மானத்துடனும் தொடர்வதற்கு உதவிகரமானதாக இருக்கக்கூடும்.

ஜெயகாந்தனும், ஜெயமோகனும் தத்தமது முன்னுரைகளில் வாழ்த்தியிருப்பதைப் போல முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சிவகுமாரின் எழுத்துலகம், புனைகதைகளின் பக்கமாகவும் திரும்புவது எழுத்தாளருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Saturday, June 24, 2006

அறியப்படாத எழுத்தாளர்களின் வரிசையில் ........

சுப்ரமணிய ராஜூ என்கிற எழுத்தாளரின் சிறுகதைகள் அனைத்தும் ஒரு தொகுப்பாக 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டுள்ளதை நினைத்து உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்றைய இளம் வாசகர்களில் எத்தனை பேருக்கு இந்த எழுத்தாளரின் பெயர் அறிமுகமாயிருக்கும் என்று தெரியவில்லை.

சுப்ரமண்ய ராஜூவின் நினைவாக பாலகுமாரனும் மாலனும் இணைந்து 'அன்புடன்' என்கிற பல்வேறு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுதியை வெளியிட்டனர். அதில் ராஜூவின் நண்பரான தேவக்கோட்டை வா.மூர்த்தியின் நெடிய முன்னுரையில் ராஜூவைப் பற்றின பல்வேறு நினைவுகள், சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அசோகமித்திரனும் இவரை சில கட்டுரைகளில் நினைவு கூர்ந்துள்ளார். இதன் மூலம் ராஜூவைப் பற்றிய அறிய வருகிற அவர் நட்பைப் பேணுவதில் மிகவும் கரிசனத்துடனும் கவனத்துடனும் இருந்துள்ளார். இலக்கியத்தை விட நட்பே அவருக்கு முக்கியமானதாகப் பட்டிருக்கிறது.

ராஜூவின் படைப்புகள் எனக்கு அதிகம் படிக்கக்கிடைக்கவில்லையெனினும் படித்த சிறுகதைகள் ஒன்றும் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. (மறைந்து போன படைப்பாளி என்பதவற்காக அவரை புகழந்தே ஆக வேண்டும் என்கிற சம்பிரதாயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை)வெகு காலத்திற்கு முன்பு

கணையாழியில் சுஜாதா "காலத்தை வென்று நிற்கக்கூடிய சிறுகதைகள்" அடங்கிய ஒரு பட்டியலை வெளியிட்டார். புதுமைப்பித்தனையே வெகு தயக்கத்திற்குப் பின் மட்டுமே சேர்த்துக் கொண்ட் அந்தப்பட்டியல் அப்போது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ராஜூவின் பெயரை பார்த்த பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. "நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு" என்னுமளவிற்கு பலத்த குரல்கள் இலக்கியவாதிகளின் மத்தியில் ஏற்பட்ட ஒரு பிரமை.

()

இது போல் திறமையான தமிழ் எழுத்துக்காரர்கள் அவ்வப்போது தோன்றி consistent-ஆக எழுதாமல் தனிப்பட்ட பிரச்சினைகளினாலோ அல்லது இறந்து போயோ பெரும்பாலான வாசகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட பத்ரியின் பதிவின் பின்னூட்டத்தில் பிரகாஷ், சம்பத் என்கிறவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஏதொவொரு
'விருட்சம்' சிற்றிதழில் சம்பத்தின் 'இடைவெளி' என்கிற சிறுகதையைபடித்தவுடன் எனக்குத் தோன்றியது. "WOW".

இதே போல ஐராவதம் என்கிற எழுத்தாளரைப் பற்றி என்னுடைய பழைய பதிவுகளில் எழுதியிருக்கிறேன். என்னளவில், அஸ்வகோஷ், சுப்ரமணியன் ரவிச்சந்திரன், எஸ்ஸார்சி என்று பல திறமையான எழுத்தாளர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே கவனம் பெற்று நின்று விடுகிறார்கள். இந்த வகையில் இன்றைய இளைய வாசகர்களிடம் நான் அறிமுகப்படுத்த விரும்புவது, இரவிச்சந்திரன் என்கிற துள்ளலான எழுத்தாளரைப் பற்றி.

என் சிறுவயதில் "சுஜாதா"வைப் பற்றி யாரிடமோ சிலாகித்துக் கொண்டிருந்த போது "இரவிச்சந்திரனைப் படித்திருக்கிறீர்களா?" என்றார். "யார் அவர்?" என்றதற்கு 'ஒரு இந்திய பாஸ்போர்ட்' என்கிற படைப்பை வாசிக்கக் கொடுத்தார். எனக்கு உடனே உடனே இரவிச்சந்திரனைப் பிடித்துப் போனதோடு, 'இந்த மாதிரியாக நம்மால் என்றாவது எழுத முடியுமா?" என்கிற தாழ்வு மனப்பான்மையும் பொறாமையும் கலவையாக தோன்றியது.

()

இரவிச்சந்திரன் பெங்களூர், மல்லேஸ்வரத்தைச் சேர்ந்தவர். சுஜாதா பணிபுரிந்த அதே BHEL-ல் இவரும் பணிபுரிந்திருக்கிறார். சுஜாதாவின் எழுத்துக்களைப் பிடித்துப் போய் அவரை குருவாக ஏற்றுக் கொண்டு அவரிடம் சிறுகதை பயின்று பின்னர் தன்னுடைய வழுக்கிச் செல்லும் நடையில் சுஜாதாவிற்கு இணையாகவும் சில சமயங்களில் தாண்டியும் செல்லும் வகையில் உரைநடையின் சாத்தியங்களை பயன்படுத்திக் கொண்டார். இவ்வளவு சிறப்பாக தமிழை கையாண்ட இவரின் தாய்மொழி தெலுங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்தப் படைப்பு மட்டுமல்ல, இனிவரும் எல்லாம் படைப்புகளை சுஜாதாவிற்கு சமர்ப்பணம்' என்றவர் தற்கொலை செய்து இறந்து கொண்டார் என்ற போது அதிர்ச்சியாக இருந்தது. தேசிகனின் மூலம் சுஜாதாவிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்த போது, இந்தச் செய்தியை வருத்தமுடன் அவரும் நிச்சயித்த போது வருத்தமாக இருந்தது. 'இனி ஒரு விதி செய்வோம்' 'ஒரு இந்திய பாஸ்போர்ட்' 'இந்திராகாந்தியின் இரண்டாவது முகம்' போன்ற சிறந்த தொகுதிகளை எந்த பதிப்பகமாவது மீள்பதிப்பு வெளியிட்டால் மகிழ்வேன்.
()

Marathadi இணையக் குழுமத்தின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களின் போதுஒவ்வொரு உறுப்பினரும் முறை வைத்து தினம்தினம் பல்வேறு விதமாக பதிய, என் முறை வந்த போது இரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தி ஒரு பதிவும் அவரின் சிறுகதையை ஒரு பதிவுமாக இட்டேன். அந்த பதிவுகளின் சுட்டிகள் கிடைக்காததால், எனது இந்த வலைப்பதிவில் அடுத்தடுத்த இடுகைகளாக இட்டுள்ளேன்.

அற்பாயுளில் இறந்து போன இன்னொரு சிறந்த எழுத்தாளரை அறிந்து கொள்ளுங்கள்.

இரவிச்சந்திரன் - சிறுகதை

சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே - ==============================================

-இரவிச்சந்திரன்

"இன்னும் நூறு வருஷத்துக்கு ஒரு கவிஞனும் கிடையாது. கவிதையும்
கிடையாது. 38க்கு இடைப்பட்ட வயசில் அவன் செத்தது கொடுமை. இந்த 38 வயசுங்கறதே, கலைஞனுக்கு ஒரு டேஞ்ஜர் பீ¡¢யட் போல. இவன், விவேகாநந்தர், புதுமைப்பித்தன், ஆலபர்ட் காம்யூ எல்லேர்ரும் 38தான். நல்ல வேளை நான் 54ஐத் தாண்டிட்டேன். அவன் இருந்தா இவ்வளவு காளான் முளைச்சு இருக்குமா? இன்ன தேதி வரைக்கும் ஒரு பயல் தமிழ் நாட்டில் கவிஞன்னு சொல்லிக்கிட்டுத் தி¡¢ய முடியுமா? அவனை மாதி¡¢ யாரய்யா இவ்வளவு Variety of Literature செஞ்சாங்க? குயில் பாட்டில் இருந்து ஜார் மன்னன் வீழ்ச்சி வரை பாடின Cosmopolitan minded popt அவன்தான். ஆயுதம் செய்வோம். நல்ல காகிதம் செய்வோம். கப்பல் கட்டுவோம். இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவோம்னு இண்டஸ்ட்¡¢யல் மைண்ட் அவனுக்குத்தான் இருந்தது........"

என்று உரை நிகழ்த்திவிட்டு, சோபாவில் தாக சாந்தி செய்து கொண்டார் இலக்கியப் பித்தன். ரூமில் உட்கார்ந்து இருந்த கூட்டம் ஆமா ஆமா! என்றது.

"தொடர்ச்சியா சொல்லுங்க," என்றார் ஒரு துணுக்கு எழுத்தாளர்.

"இவனை இப்படியே வளர விட்டால் ஆபத்து. கடைசியில் இவனோட பாட்டுக்குப் பயந்தே வெள்ளைக்காரன சுதந்திரம் கொடுத்திடப் போறான் அப்படின்னு பயந்து, திருவல்லிக்கேணியிலே ஒரு கூட்டம் அன்னைக்கு சாயங்காலம் அடிச்சே கொன்னானுங்களே, பாவிங்க."

"அய்யே! அப்படீங்களா?" என்றார் லோகல் கவிஞர்.

"ஆமா!" என்றார் தீர்மானமாக இலக்கியப் பித்தன்.

"அய்யா என்ன புதுசாச் சொல்றாப்பில?"

"யானை மிதிச்சுச் செத்தார்னு இல்லே சொல்லிக்கிறாங்க"

"பொய்யி. செஞ்ச தப்பை மறைக்கறதுக்கோசரம் அப்படி ஒரு வட்டார வழக்கு.
ஏன்யா, யானை மிதிச்சுச் சாகற ஆளாய்யா அவன்?"

"அதானே அதானே!" என்று ஒரு நாலைந்து அதானே.

இலக்கியப் பித்தன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டார். தரைக்கு மேல் ஒரடி உயரம் இருக்கிற மாதி¡¢ ஒரு நினைப்பு. தொண்டையைத் தட்டிக் கொண்டு கீழ்க் கண்டவாறு பாட ஆரம்பித்தார்.

சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு
மகளிருண்டுசூதிற் பணயமென்றே அங்கோர்
தொண்டச்சி போவதில்லைஏது கருதிப்
பணயம் வைத்தாய்? அண்ணே
யாரைப் பணயம் வைத்தாய்.
மாதர் குல விளக்கை........

"ஸார்! போஸ்ட்."

மாதர் குல விளக்கை அப்படியே விட்டு விட்டுக் கண்களைத் திறந்தார். எதி¡¢ல் சமீபத்தியப் புது யூனிபாரத்துடன் போஸ்ட் மேன்.

"இது வேறயா?" என்று முணுமுணுத்தார்.

"என்ன இது? அய்யாவைத் தொந்தரவு செஞ்சுகிட்டு" என்று முணுமுணுத்தார் ஒரு பத்தி¡¢கை ஆசி¡¢யர். தகாத செய்கை செய்தவனைப் போல - துகில் உ¡¢ந்த திரெளபதியைப் போல் சபையில் நின்ற போஸ்ட் மேன்.

"இல்லீங்க. இது ரெஜிஸ்டர் போஸ்ட். அய்யாதான் கையெழுத்துப் போடணும்னு ஐதீகம். அதனால்தான் தொந்தரவு பண்ணிட்டேன். மன்னிச்சுக்குங்க!" என்றார் பிச்சைக்காரத்தனமாக.

"பரவாயில்லை. உங்க கடமையை நீங்க செய்யணும்," என்று சொல்லி நீட்டின இடத்தில் போட்டுவிட்டு உறையை வாங்கினார். விலாஸத்தைப் படித்து விட்டு, எதி¡¢ல் உட்கார்ந்து இருந்த குடிமக்களைப் பார்த்துப் போனால் போகிறது என்று, "டில்லி லெட்டர். ஸாஹித்ய அகாடமியில் இருந்து வந்திருக்கு," என்றார்.

"என்னவாம்?"

"இந்தாப்பா. இதைப் படிச்சுச் சொல்லு" என்று அந்த சிரமத்தைத் தன்னுடைய அமானுவென்ஸஸிடம் கொடுத்தார். விறுவிறுவென்று முடித்து விட்டு, "இந்த வருஷம் panel-ல் தமிழுக்கு உங்களைப் போட்டு இருக்காங்களாம். ஒப்புதலைப் பத்து நாளிலே தொ¢விச்சுடணும்னு மகிழ்ச்சியுடன் அறிவிச்சு இருக்காங்க அய்யா!" என்றான்.

"அதே மகிழ்ச்சியுடன் ஒப்புதலைத் தொ¢விச்சு ஒரு லெட்டர் உடனே போட்டுரு."

"ஆகட்டுங்க," என்று சொன்ன அமானுவென்ஸஸ் பக்கத்து அறைக்குப் போனான். அங்கே அலமேலு கை நகத்துக்குப் பாலிஷ் ஏற்றி அதில் முகம் தொ¢யுமா என்று முயற்சித்துக் கொண்டு இருந்தாள்.

"இந்தாம்மா அலமேலு. இதை உடனே அடிச்சிடு. அவசரம்." என்றான்.

"அவசரமா அடிச்சா சா¢யா வராதுய்யா!" என்றாள் அலமேலு.

"இப்ப போஸ்டுக்குப் போயிடணும்."

"அய்யா சொன்னாரா?"

"ஆமா. பின்னே?"

"போய்க் கேட்கவா?" என்று டைப்ரைட்டரைத் தள்ளி விட்டு எழுந்து விட, அமானுவென்ஸஸ் பதறி, "தாயே! மன்னிச்சுக்கோ. அவரு அவசரப்படலை. நான்தான் பட்டேன்."

எழுந்த வேகத்தில் அலமேலு உட்கார்ந்து, "எனக்குத் தொ¢யாதா? உன்னை மாதி¡¢ எத்தனைப் பசங்களைப் பெறப் போறேன்."

"அம்மா ஆம்பிளைக் காமாட்சி! உனக்கு ராஜாமணின்னு பேரு வெச்சு இருக்கணும். அலமேலுன்னு வெச்சது நாச்சியாருக்கே இன்ஸல்ட்டு."

"அப்ப சா¢. இனிமே எங்க அம்மா பெக்கற குழந்தைக்கெல்லாம் உன்னைக் கேட்டுட்டுப் பேரு வெக்கச் சொல்லிடறேன். இப்ப திருப்தியா?"

அதிர்ந்து போய் "இப்படி எல்லாம் பேச வெட்கமாயில்லை?" என்று கோபித்தான் அமானுவென்ஸஸ்.

"இங்க வேலைக்கு வந்து சேர்ந்ததில இருந்து வெட்கம் எல்லாம் வெட்கப்பட்டுட்டுப் போயிடுச்சுய்யா!" என்றாள்.

சட்டென்று குனிந்து "சா¢. எப்பவோ அடிச்சா சா¢" என்று போனான். போனதைப் பார்த்துக் கொண்டே "ம். குதிரை சும்மா இருக்கும். லத்திதான் உறுமுமாம்." என்று அவன் காதுக்குப் பட சுவருக்குச் சொன்னான். அப்புறம் லோயர் ரோலரை ரீலிஸ் செய்து, கார்பனில் பேப்பரைப் புகுத்தி சிலிண்டருக்குள் செலுத்தி, தேதி போட்டு என்று தீப்பொறி பறக்கத் தட்ட ஆரம்பித்ததும், வாழ்வின் அவலங்கள் எல்லாம் மறந்து போயின, தற்காலிகத்துக்கு.

"இப்ப பாருங்க, பொதுச் சொத்து மாதி¡¢ ஆயிடுச்சு. புதிப்பு பதிப்புகளாப் போட்டு தீவட்டிக் கொள்ளை அடிச்சிட்டு இருக்கானுங்க. இருந்தப்ப சோத்துக்குச் செத்தான்....... என்று தொடர்ந்து கொண்டு இருக்கையில் 3 மீட்டர் தூரம் அரை மீட்டர் உயரத்தில் இருந்த டெலிபோன் அடித்தது. அதே அமானுவென்ஸஸ் டெலிமாலையைத் தொடுத்து, "அல்லோ...." என்றான்.

இலக்கியப் பித்தன், முகத்தைத் திருப்பி, திருட்டுச் சைகை ஒன்றின் மூலம்,
"யாரு?" எனறார்.

வாய்ப் பக்கத்தை மூடி "பத்தி¡¢கை ஆபீசில் இருந்துங்க."

"என்னவாம் எழவு?"

"சிறுகதைப் போட்டி விஷயம். அவசரமாம்."

"புதன்கிழமை வெச்சுக்கலாம்னு சொல்லு." புதன் கிழமைக்கு இன்னும் 13 நாள் இருந்தது.

"முடியாதாம். இந்த இதழில் முடிவு அடுத்த வாரம்னு வெச்சுட்டாங்களாம். ரெண்டு பாரம் மி~¢னுக்குப் போயிடுச்சாம். கொஞ்சம் தயவு பண்ணணுமாம்."

"கால்ல சுடுதண்ணிய ஊத்திட்டுதான் பத்தி¡¢கை நடத்துவானுங்க. சா¢ சா¢. இன்னும் ஒன் அவர்ல வர முடியுமான்னு கேளு. வரப்ப எல்லாக் கதைகளையும் எடுத்துட்டு வரச் சொல்லு. கையை வீசிட்டு விதவை மாதி¡¢ வெள்ளைப் புடவைல வரப் போறானுங்க."

"புறப்பட்டாச்சாம்" என்று சொல்லி வைத்து விட்டு, "லெட்டர் டைப் ஆயிட்டு இருக்குங்க."

எதி¡¢ல் உட்கார்ந்து இருந்த ஏழெட்டுப் பேரும் ஒன்று திரண்டார்கள். ஒருவர்,

"அப்போ விடை பெத்துகறோம்ங்க"

"உங்களுக்கும் கோடி ஜோலி" இது கவிஞர்.

"ஆமா" என்று ஒத்துக் கொண்டார் இலக்கியப் பித்தன்.

வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டுத் திரும்பினார். அருகே நின்று இருந்த உதவியாளனைப் பார்த்து "ஹீம், வெட்டி இலக்கியம் பேசியே விரோதம் வளர்த்துட்டு இருந்துட்டம்!" என்றார் பெருமூச்சுடன்.

"அது கூட ஆமாங்க!" என்ற அமானவென்ஸஸ், "அதோ கார் வந்துட்டு இருக்கு," என்றான். திருடன், கா¡¢யக் கண்ணன்.

கார், க்¡¢ல்லை எதிர்த்துக் கொண்டு, கான்கீ¡¢ட் தரையில் நுழைந்தது. தீபாவளி அவசரத்தில் கதவுகள் திறக்கப்பட்டு ஆறேழு பேர் உதிர்ந்தார்கள்.

"வணக்கங்க."

"வணக்கம். வாங்க வாங்க!" என்று புட்டபர்த்தி ஸாய்பாபா போல் சி¡¢த்து நமஸ்காரம் போட்டார்.உதவி ஆசி¡¢யர் ஒருவர் கக்கம் நிறையக் கதைகளை வைத்துக் கொண்டு,

"ஹிஹி. உங்களைத் தொந்தரவு பண்ணிட்டே இருக்கோம். மன்னிக்கணும். வேற வழி? உங்களை விட்டால்..."

பொ¢ய மனது பண்ணி "பரவாயில்ல. பொது வாழ்க்கையில் ஈடுபடறவன் privacyஐ விட்டுடணும். பிரபலத்துக்கு விலை அதான்!" என்றார்.

"ஸ்ட்ரோக் தூளுங்க" என்றார் இன்னொரு ஆமாஞ்சாமி.

உதவி ஆசி¡¢யர் கூட இருந்தவரைப் பார்த்து, "எழுதிக்குங்க. அடுத்த வாரம் ஒரு பாக்ஸ் மேட்டர் போட்டுருவோம்" என்றார் பதைப்புடன்.

"சா¢. இலக்கியம் பண்ண ஆரம்பிக்கலாமே?" என்றார் இ.பித்தன்.

தொடர்ந்து, "முதல்ல இருந்து விவரமாச் சொல்லுங்க. இந்தச் சிறுகதைப் போட்டி திடீர்னு எதுக்கு? ஏதாவது மலர் போடறீங்களோ?" என்றார் பற்ற வைத்துக் கொண்டே. கஞ்சா மணம் அறை முழுக்கப் பூதம் போல் பரவிற்று.
அந்த அறை பொ¢ய ஹால். தரை முழுவதும் காஷ்மீரக் கம்பளம் பரவி இருந்தது. மேலே அட்டகாஸமான கார்லோ விவா¡¢ சாண்டலியர். ஏதோ ஒரு டெலிகேஷனில் ஐரோப்பா போயிருந்த போது வாங்கி வந்தது. ஒரு மூலையில் பெடஸ்டல் ·பேன். இடது ஒரத்தில் போடி நாயக்கனூர் உயர்தரப் பஞ்சில், ஸாடின் தலையணைகள். அதில் சாய்ந்து கொண்டார். லாங் ஷாட்டில் டில்லி சுல்தான் மாதி¡¢க் காட்சி அளித்தார். பத்தி¡¢கை ஆபிஸ் ஆறேழு பேரும் செளகா¢யமாக உட்கார்ந்து கொண்டு இவர் என்ன உதிர்ப்பாரோ என்று காத்துக் கொண்டு இருந்தனர்.

கூட ஒரு துணுக்கு எழுத்தாளர், எழுத்தாளர் இலக்கியப் பித்தன் வீட்டில் இருக்கும் போது லுங்கிதான் உடுத்திக் கொள்கிறார் என்று சரம் சரமாக எழுதிக் கொண்டார்.

ஸால்வார் கமீஸீம், சரசமுமாக உள் நுழைந்தாள் அலமேலு.

"ஸார். ஸாஹித்ய அகாடமி லெட்டர். கையெழுத்துப் போட முடியமா? 10-30 மணி போஸ்டுல போயிடட்டும்." என்றாள் பவ்யமாக.

பவ்யம் ஒரு பாவனையே.இடமும் காலமும் நேரமும் மாறும் போது இந்தப் பவ்யம் ஆள் மாறும்.

"அந்த ராயல்டியை எனக்கு ஒரு பேரர் செக்காகக் கொடுத்திடுங்க. என்ன? மசமசன்னு இருக்காதீங்க. ஒரு நெக்லஸ் பண்ணிக்கணும்."

"இவ்வளவுதானே அலமேலு. செக்கைக் கொண்டா. கையெழுத்தை எங்கே போடணும்? இரு. பேனா எழுத மாட்டேங்குது. கொஞ்சம் உன்னோட மார்ல
தேச்சுக்கறேன்."

கையெழுத்து உற்சவம் முடிந்தது. அலமேலு அந்தப்புரத்துக்குள் போனாள். "ம். சொல்லுங்க." என்றார்.

"பத்தி¡¢கை ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆச்சு. அதுக்காக ஒரு ஸ்பெஷல் இஷ்யூ. அதிகப் பக்கங்கள் அதே விலை. கூடவே ஒரு இலவச இணைப்பு."

"அதில மெட்டீ¡¢யல் நாலு பக்கம். மீதி எல்லாம் விளம்பரம். அப்படித்தானே?" என்று கண்டுபிடித்த மாதி¡¢ச் சொன்னார் டில்லி சுல்தான்.

"ஹிஹி. கரெக்டாச் சொல்லீட்டீங்களே."

"மலர்னா - விளம்பரம் ஜாஸ்தி சேர்ந்துடுச்சுன்னு அர்த்தம்." என்றார் மானேஜர் சர்க்குலே~ன்.

"அதை ஏன் சபைல சொல்றீங்க?" என்று சிடுசிடுத்தார் உதவி ஆசி¡¢யர்.

"சா¢ சா¢. ஆரம்பியுங்க. சண்டை எல்லாம் அப்புறம். ஸோ, அதுல ஒரு சிறுகதைப் போட்டி. அதுவும் அறிமுக எழுத்தாளர்க்கு மட்டும். இல்லையா?"
என்று கேட்டார் சிறுகதைப் பித்தன்.

"அதேதான். முதல் பா¢சு ரூபா 3000. இரண்டாவது பா¢சு 2000 மூணாவதுக்கு ஆயிரம். பிரசுரமாவற கதை 20க்குத் தலா ரூபா 250."

"அது சா¢. அதென்ன கூடவே ஒரு வாலு. அறிமுக எழுத்தாளர்க்கு மட்டும் அப்படீன்னு."

"சிறுகதை எழுதறதுக்குத் தமிழ்ல ஆளே இல்லீங்க. எல்லாம் திருப்பித் திருப்பி மாமியார் மருமக சண்டை, வரதட்சணைக கொடுமைக கதை. ஒரு பொண்ணு குடும்பத்துக்காக உடம்பையே உருக்கிக்கறது. இல்லைன்னா சோரம் போறதுன்னு இதையே திருப்பித் திருப்பி எழுதிச் தேச்சிட்டு இருக்காங்க. அதைவிட்டா ஒரு பக்கக் கதைகள். இந்த ஒரு பக்கக் கதைகள் எழுதத் தமிழ் நாட்டில, ஐனதா கட்சிக்கு இருக்கிறதை விட அதிக ஆள் இருக்கு."

"முதல்ல, ஒரு பக்கக் கதையை ஒழிச்சுக் கட்டணும்." என்றார் இலக்கியப் பித்தன்.

"கரெக்ட் கூடுமானவரை நம்ம பத்தி¡¢கைல போடறதே இல்லை."

"நீங்க சொல்றது எல்லாம் சா¢தான். சிறுகதை நல்ல மீடியம். அதை யாரும் உபயோகப் படுத்தறது கிடையவே கிடையாது. பங்களுர்க்காரர்தான் ஸின்ஸியரா சிறுகதை மீடியத்தை ஒழுங்காச் செய்யறார்."

"பின்னே. நல்ல விஷயம் எங்க இருந்தாலும் பாராட்டணும். அதான் நம்ம பி¡¢ன்ஸிபில். ஆனால இதைப் போட்டுறாதீங்க. நமக்குள்ள."

"ஆஹா. அய்யாவுக்கு என்ன ஒரு மனசு!" என்றார் அம்பத்தூ¡¢ல் ஐஸ் பாக்டா¢ வைத்து இருக்கிற ஒரு அமெச்சூர் எழுத்தாளர்.

"சா¢. மொத்தம் எத்தன கதை வந்தது?"

"3625 கதை வந்தது. பயந்துட்டு சட் னு நிறுத்திட்டம்."

"ஸோ. தமிழ் நாட்டில வீட்டுக்கு ஒரு மரம். ஸா¡¢. எழுத்தாளர். இல்லையா?"
"அதேதான். அதில் முதல் ரவுண்டில் 3000 கதைகளை ¡¢ஜக்ட் செய்துட்டோம். போர்டுக்கே வராத குதிரைங்க. மீதி 625-ல் உயிர்த்தியாகம் செய்யற கதைகளை ஒதுக்கிட்டோம். அது நீங்க சொன்ன அபிப்ராயம்."

"குட். ஏன்னா சாவுங்கறது பொ¢ய விஷயம். ஒரு சிறுகதைல சாவு வர்ரது ¡¢டிகுலஸ். கதை முடிவுலே காரெக்டர் செத்தா - ஒரு வெய்ட் இருக்கும்னு நினைக்கற myth-ஐ உடைக்கணும். அதனாலதான் அப்படிச் சொன்னேன்."

"அ! அதில் 300 கதை போச்சா? மீதி 325. அதில் நூறு கதை இருக்கு. ஆனால் இல்லை. ஸோ அதுவும் அவுட்."

"225-ல் 25 கதை அயல் தேசத்துக் கதை - & ·பிலிம் ·பெஸ்டிவல் சினிமாவைத் தமிழ்ப்படுத்தி இருக்காங்க. இன்னும் இருநூறு. அதில் 175 கதைகள் முடிவில, ஏ! சமூகமேன்னு கூப்பிட்டு, கடைசி பாரா பூரா ஈசாப் கதை மாதி¡¢ உபதேசம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க."

"பரவாயில்லையே. நல்லா அனலைஸ் பண்ணி இருக்காங்க. ஏன்! நீங்களே எழுதலாமே! என்று பாராட்டினார் உதவி ஆசி¡¢யரை."

"எங்கிங்க! எழுதற ஸ்பீட் வரப்ப பார்த்து எடிட்டர் பத்மப்பி¡¢யா டைவர்ஸ் கேஸ் என்னாச்சுன்னு போயப்பார்த்துட்டு வந்து ஸ்டுடியோ விஜயம் பகுதிக்கு எழுதுன்னு ஆர்டர் போடறார். சைதாப்பேட்டை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்ல பகல் முழுக்க நின்னு, மாஜிஸ்ட்ரேட் தீர்ப்புச் சொல்றதுக்கு முன்னேயே ஆபீசுக்கு வந்து தீர்ப்பை நாங்களே எழுதி ·பாரத்தை நிரப்ப வேண்டி இருக்கு."

"கொடுமை. உலகத்தில நல்ல கலைஞனுக்கு எப்பவும் இந்தத் துர்ப்பாக்கிய நிலைமைதான். சா¢. மீதி 25 கதை?"

"அதில், பிரசுரத்திற்குத் தகுதியானதுன்னு 20 கதைகளை, மீதி மூணு நடுவர்களும் தேர்ந்து எடுத்து இருக்காங்க."

"அதை விடுங்க. அவுங்க தேர்ந்து எடுத்தாச் சா¢யாத்தான் இருக்கும். அது சா¢. முதல் நடுவர் நான். மத்த மூணு யாரு?"

"ஒருத்தர் சினிமா டைரக்டர். இன்னொருத்தர் பெண் எழுத்தாளர். மூணாவது ஐகோர்ட் ஜட்ஜ்."

"ஜட்ஜ்க்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கோபித்துக் கொண்டார்.

"ரொம்ப மோசமா எழுதினவங்களை அவரை வெச்சிட்டு தண்டிக்கச் சொல்லிடலாம்!" என்றார் அம்பத்தூர் ஐஸ் பாக்டா¢. உடனே எல்லோரும் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதமர் பொலிட் பீரோ கூட்ட்தில் சொன்ன ஜோக்கிற்குச் சி¡¢த்தது போல் ஒரே மாதி¡¢ச் சி¡¢த்தார்கள்.

"ஆக, தமிழ் நாட்டில ஐந்தே சிறுகதைதான் தேறி இருக்கு?"

"ஆமாங்க."

"மற்ற நடுவர்கள் தோந்து எடுத்த முதல் பா¢சுக் கதைய மட்டும் நீங்க படிச்சிட்டுத் தோ;ந்து எடுத்துட்டிங்கன்னா, முதல் பா¢சுக் கதையோட தாவு தீர்ந்துடும். இரண்டாவது, மூணாவதை ஒருபார்வை நீங்க பார்த்துட்டு ஓகே சொல்லணும். அது போதும்."

"எவ்வளவு பக்கம் வரது?"

"இருபது பக்கம். foolscap பேப்பர்ல."

"அய்யோ. இருபதா. முடியாது போலிருக்கே."

"அதுக்குதான் ஒரு ஐடியா செஞ்சோம். கதையோட synopsis-ஐ மட்டும் ஒரு முழுப் பக்கம் வர்ர மாதி¡¢ எழுதிட்டு வந்துட்டோம். உங்க செளகா¢யத்துக் கோசரம். அஞ்சு நிமி~த்துல படிச்சிடலாம். கொஞ்சம் தயவு பண்ணுங்க. இன்னைக்கு ·பாரம் மெஷினுக்குப் போகுது."

"ஹீம். சா¢ கொடுங்க. இந்தாப்பா. அந்தக் கண்ணாடியை எடுத்துக் கொடு. அப்புறம் காரை வெளியல வை. கூட்டத்துக்குப் போகணும். இப்பவே லேட்டு."
உதவி ஆசி¡¢யர் கதையை நீட்ட -

oOo

தஞ்சாவூர் டவுன். கோயிலுக்குப் பின்னால் ஒரு அக்ரஹாரம். கிட்டத்தட்ட எல்லாமே பிராமணக் குடும்பங்கள். அக்ரஹாரம் முடிந்த உடனே உடனே ஓதுவார் தெரு. அங்கே சிற்சில வீடுகள். ராஜராஜ சோழனின் சபையில் இருந்த ஓதுவார்களுக்கு என்று கட்டப்பட்ட ஓட்டு வீடுகள். ரா.ரா. சோழனும் போய், ஓதுவார்களும் போய், இப்போது ஓடுகள் மட்டுமே. மரங்களை எல்லாம் சுற்றுப்புற மக்கள் கால கட்டத்தில் பிடுங்கிக் கொண்டு போய்விட, வீடுகளின் திண்ணைகள் மட்டும்தான் இப்போது. அந்தத் திண்ணைகள் தெருவுக்கு மறைவிடங்கள். ஒவ்வொரு திண்ணை மறைவிலும், தெருப் பிச்சைக்காரர்கள், தொழு நோய்க்காரர்கள், ¡¢க்ஷாத் தொழிலாளர்கள், என்று ஆக்ரமித்துக் கொண்டு, தடுப்புக்குக் கோணிப் படுதாவை கட்டிக் கொண்டு அவல வாழ்க்கை. தெருவின் இக்கரையில் இருந்து அக்கரை வரை விளக்கு வெளிச்சம் கிடையாது.

இருப்பதிலேயே கொஞ்சம் மறைவான திண்ணை. அதில் கனகம் என்ற ஒண்டிக் கட்டை. வயது 30க்கும் மேலே. உத்யோகம் உலகத்தின் ரொம்பப் பழைய உத்யோகம். விபச்சாரம். கூலி வேலை ஆட்கள். குறைந்த வருவாய்க்காரர்கள். உழைப்பாளிகள், ¡¢க்ஷாத் தொழிலாளிகள் ஆகியோர். இரவு பத்துக்கு மேல் இருட்டுத் தெருவில் நுழைந்து கனகத்துக்குப் போணி செய்து விட்டுப் போவார்கள். சில சமயம் நைட் டூட்டி போலீஸ்காரர்களும், தெருவின் இருட்டு அவர்களுக்கு எல்லாம் ரொம்ப செளகா¢யம்.

நகரசபைத் தேர்தல். அக்ரஹாரத் தெருவுக்கு ஓட்டு வாங்க வந்த வேட்பாளர்களிடம் (இப்போது கவுன்சிலர்) இருட்டுத் தெரு செளகா¢யமாக இருப்பதால், இரவு அந்த வழியே பஜாருக்குப் போக வேண்டி இருப்பதால், வேறு நிழலான கா¡¢யங்கள் நடப்பதால் அதை நிவர்த்தி செய்தால்தான் உமக்கு ஒட்டு. லைட்டைப் போடு. ஓட்டைப் போடுவோம். இல்லாவிட்டால் அக்ரஹாரம் தேர்தலைப் பகிஷ்கா¢க்கும் என்று மிரட்ட, கவுன்சிலர் மிரண்டு, மராமத்து மந்தி¡¢ வரை போய் உடனடி சாங்ஷன் வாங்கி, இக்கரையில் இருந்து அக்கரை வரை, சரம் சரமாக சோடியம் விளக்குகளை இரண்டே நாளில் போட்டு விடுகிறார். இருட்டுத் தெரு இப்போது வெளிச்ச வெள்ளத்தில்.
எல்லோருக்கும் சந்தோஷம். கனகத்தைத் தவிர. வெளிச்சம் வந்து விட்டதால், ஒரு வாடிக்கை கூட வருவதில்லை. முதல் நாள் பட்டினி. இரண்டாவது நாள் கொலைப் பட்டினி. மூணாவது நாள் வழக்கமாக வருகிற ஆள் வருகிறான். ஆனால் தாண்டிப் போகிறான். பசித்த மானுடம். மறைவுத் திண்ணையில் இருந்து வெளிப்பட்டு "யோவ்! இங்க வாய்யா. என்னய்யா ஆச்சு உனக்கு!" என்று வேஷ்டியைப் பிடித்து இழுக்க, "அய்யே. விடு. கசுமாலம். இவ்வளவு நாள் இருட்டு இருந்தது செளகா¢யம். இப்போ? தீப அலங்காரம் மாதி¡¢ லைட்டு வெளிச்சம். வெளிச்சத்தில் போய் இந்த வேலையைச் செய்வாங்களா என்ன? சீ. போ!" என்று தள்ளி விட்டுப் போகிறான். புழுதியில் விழுந்த கனகம், பசியுடன் எழுந்து, பசியுடன் சுதா¡¢த்து, கை நிறையத தூக்க முடியாத கற்களைத் தூக்கிக் கொண்டு, வா¢சைக்கிரமமாக, ஒவ்வொரு சோடியம் விளக்குகளாகத் துர் ஆங்காரத்துடன் உடைத்து நொறுக்க, தெரு முழுவதும்
கண்ணாடிச் சிதறல்கள். இருட்டுக் குதறல்கள்.

பத்து நிமிஷம் கழித்து, இருட்டுத் தெரு. மறைவுத் திண்ணை. அங்கே கனகம். கூடவே இயக்கத்தில் இருக்கிற ஒரு ஆணுடல். அவள் தலைமாட்டருகே கசங்கின ரூபாய்கள். பி¡¢யாணிப் பொடடலங்கள்.

oOo

தலைப்பு - மெர்கு¡¢.

"இதோட ஒ¡¢ஜினல் ஸ்கி¡¢ப்ட் இருக்காய்யா?"

"இதோ. இருக்கு. 20 பக்கங்க."

வாங்கி முழுவதும் படித்தார். அரை மணி ஆயிற்று.

ஒரு நிமிஷம் யாரும் பேசவில்லை. அதி பயங்கர மெளனம்.

"இதுதான் முதல் பா¢சுக்கா?"

"ஆமாங்க."

"வெகு லட்சணம்." என்றார் கோபமாக. கோபம் கூட அல்ல - பாம்புச் சீறல்.

"ஏங்க?" என்று பதறினார் உதவி ஆசி¡¢யர்.

"நல்ல தீம். ஒவ்வொரு பாராவுக்கும் ஒரு பவர்புல் ஸ்ட்ரோக் இருக்கு. நேடிவிடி உண்டு. வொ¢குட் ரீடபிலிட்டி. சமூகத்தில் இருக்கிற பசிப் பிரச்சினையை ழுநெந ட¨நெ one line message-ல் சொல்ற ரொம்ப நல்ல ப்ளாட். அதனாலதான்."

"நீங்க சொன்னதெல்லாம் இருக்கய்யா. ஒத்துக்கறேன். முக்கியமான ஒரு drawback-ஐ எல்லோரும் மறந்துட்டிங்களே. தொடர்ந்து வெளிச்சம் இல்லேன்னா அங்கெல்லாம் விபசாரம் நடத்த வசதி இருக்கும்னு ஒரு வழிய நாம கண்டு பிடிச்சு, அதுக்கு நாமே பா¢சு கொடுக்கற மாதி¡¢ ஆச்சு!" என்றார்.

ஒருவரும் பேசவில்லை.

"இதுக்குப் பா¢சு கொடுத்தா ப்ராஸ்டிட்யூஷனை நாம என்கரேஜ் பண்ற மாதி¡¢ ஆச்சே."

"அது கூடச் சா¢தான்." என்றான் அமானு வென்ஸஸ்.

"அப்புறம் ஊர்ல இருக்கிற லைட்டை எல்லாம் ஒடச்சு ஊரே விபசாரம் ஆக வழியாயிடுமேய்யா. ரொம்ப செளகா¢யம். தொடர்ந்து அவரே. அவளுக எல்லாம் இதைப் படிச்சா, அப்புறம் ஊர்ல, தெருவுல ஒரு விளக்குக் கூட இருக்காது. தொ¢யுமா?"

"பொதுவா, தேவிடியாளுக வாரப் பத்தி¡¢கை எல்லாம் படிக்கறதில்லீங்க!" என்றான் அனானுவென்ஸஸ்.

"யோவ் முண்டம். வாயை மூடு. ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். என்ன நான் சொல்றது, உதவி ஆசி¡¢யரே?"

அரை மனசுடன், "ஒரு விதத்துல சொல்றது சா¢தாங்க."

¨தா¢யம் வந்த மற்றவர்கள், "அய்யா சொல்றது சா¢தான்" என்று ஒப்புவித்தார்கள்.

"விபசாரத்தை ஊக்குவிக்கறதுக்கு வழி காட்டறதுக்கு ஒரு கதையைத் தோ;ந்து எடுத்து அதுக்குப் பா¢சு கொடுக்க நான்தான் கெடச்சனா? என்ன இதில மாட்ட வைக்கணும்னு. why did you choose me?"

உதவி ஆசி¡¢யர் பதறி, "அய்யா என்ன பேசறீங்க? நாங்க அப்படி நினைப்பமோ? இப்படி சபைல நிங்க சொல்லலாமா? வேணும்னா இதை ¡¢ஜக்ட் செய்துடறம்."
"செஞ்சிடுங்க"

"செஞ்சாச்சு. ஆனால் பா¢சு யாருக்குத் தர்ரது?"

"இரண்டாவதை முதல் பா¢சாவும், மூணாவதை இரண்டாவது பா¢சாவும் மாத்திடுங்க."

"ஆச்சு. ஆனால் மூணாவது பா¢சுக்கு?"

"அந்த இருபதில, சுமாரா இருக்கிறதை எடுத்து செலக்ட் செஞ்சிடுங்க."

"சா¢ங்க. இதை என்ன பண்றது?"

"எதை?"

"மெர்கு¡¢யை?"

"திருப்பி அனுப்பிடுங்க. போதிய தபால் தலை ஒட்டி இருக்கா?"


"ஒட்டி இருக்கு. அனுப்பிடறோம்."

"அப்ப ரொம்ப சந்தோஷம். பா¢சு பெற்றவர்களுக்கு என் ஆசிர்வாதங்கள்."
எழுந்தார். கூட்டமும் எழுந்தது. உதவி ஆசி¡¢யர் ஒரு கவரை நீட்டி "இதுல ஒரு செக் இருக்கு. நடுவர்க்கு நாங்க கொடுக்கறது வழக்கம்."

"இதெல்லாம் எதுக்கு? சா¢. யோவ் வாங்கிக்கய்யா!" என்றதும் அவானுவென்ஸஸ் வாங்கிக் கொண்டான்.

கும்பிடு போட்ட கும்பல் அம்பாசிடா¢ல் ஏறிற்று. தெருவில் சா¢ந்து இடதில் கண் மறைந்ததும். இலக்கியப் பித்தன் நுழைந்தார். "எங்கேய்யா செக்கு?
தொகை என்ன எழுதி இருக்கு?"

சொன்னான்.

"சைக்கிளை எடுத்துட்டு ஓடு. பாங்கில உடனே உடனே போட்டுட்டு மெதுவா வா. இப்பவே க்ளியரன்ஸீக்குப் போயிரட்டும்."

சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடினான்.

உள்ளே நுழைந்தார். அலமேலு வருகையை எதிர்பார்த்து இருந்தாள். உள்ளே வந்து எதி¡¢ல் உட்கார்ந்து கொண்டு, 'இப்படி வா', என்றார் போல்டு லெட்டா¢ல்.
வந்தவள் உடையைத் தளர்த்திக் கொண்டாள். சரீரம் சாய்ந்ததும், தகாத இடத்தைத் தொட்டு, "காலைல இருந்து ஒரே இலக்கிய ஹிம்சை. உன்னை வாசனை பார்க்கக்கூட நேரமில்லே. ஸாடின் பாவடைதானே போட்டுட்டு இருக்கே?" என்றார்.

"பாவாடை இருக்கட்டும். கதை நல்லா இல்லையா, என்ன?"

"அருமையான கதை. படு Readability. ஒரு Short Story-க்கு வேண்டிய சா¢யான ·பார்ம் இருக்கு.புதுமைப் பித்தனுக்கு அப்புறம் தவக்களைப் பாய்ச்சல் ஸ்டைலை இருபது வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் படிச்சேன். செகாவியன் டச் இருந்தது!" என்றார்.

"அப்புறம் ஏன் ஒரு ஸீன் க்¡¢யேட் பண்ணினது?"

"நான் ப்ரைஸ் கொடுத்தால் பையன் click ஆயிடுவான். Race with the devil-னு ஒரு வாசகம் இங்கிலீஷ்ல இருக்கு. அந்தத் தப்பை நான் ஏன் செய்யணும்? இல்லையா?" என்றார்.

"அதுகூடச் சர்தான்டா!" என்றாள் அலமேலு.

oOo

இரவிச்சந்திரன் - ஓர் அறிமுகம்

(மரத்தடி இணையக்குழுமத்தில் வெளியானது)

எழுத்தாளர் பெங்களுர் இரவிச்சந்திரனை பற்றி நான் முன்னம் ஒரு கட்டுரை எழுதினது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 'மன்மத ராசா'க்கும் 'அப்படி போடு'க்கும் 'லஜ்ஜாவதியே'க்கும்நடுவில் இது ஞாபகம் இருந்தால் யதேஷ்டம்.

அவருடைய சிறுகதை ஒன்றை எடுத்துப் போடுவதாய் அப்போது எழுதியிருந்தேன். ஆனால் அலுவலக உணவு இடைவேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் தட்டச்சி, நடுவில் சம்பந்தப்பட்ட கோப்பு தொலைந்து போய், 'அடியைப் புடிடா பாரத பட்டா' என்று மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்து............

இந்தக் கதைக்குள் தேடினால் இரவிச்சந்திரனின் வியர்வையுடன் என்னுடைய வியர்வையும் கொஞ்சம் கலந்திருக்கும்.

'இவ்வாறு அவர்கள் வாழ்கிறார்கள்' என்ற சிறுகதையைத்தான் முதலில் அனுப்பலாமென்றிருந்தேன். ஆனால் அதை அனுப்பினால் சில பெண் உறுப்பினர்கள் நேரடியாக என் மேல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடும் அபாயமிருப்பதால், தவிர்த்து விட்டேன். அதிர்ஷடமிருப்பவர்கள், இரவிச்சந்திரனின் 'இனி ஒரு விதி செய்வோம்' என்கிற சிறுகதை தொகுப்பை தேடிப் பார்த்து படித்துக் கொள்ளுங்கள். (கலைஞன் பதிப்பகம், முதல் பதிப்பு ஜீலை 1985, விலை ரூ.12.50) பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகமில்லை.

இரவிச்சந்திரனின் கதைகளில் வரும் பெண்கள் அவ்வளவு சிலாக்கியமானவர்களாக இல்லை. 2 பக்கத்துக்கு ஒரு முறை சோரம் போகிறார்கள். காதலால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் கட்டாயம் இருக்கிறான். பெண்கள் மீதான வெறுப்பு அப்பட்டமாக தொ¢கிறது. ஆனால் அதே சமயத்தில் அவர்களின் மீது ஒரு உயர்வான பார்வையுமாக ஒரு love & hate relationship இருக்கிறது.

oOo

இரவிச்சந்திரன் இப்போது என்ன செய்கிறார்? என்று விசா¡¢த்த போது சின்னக் கண்ணன், 'அவர் தற்கொலை செய்து கொண்டதாக என்.சொக்கன் கூறினார்' என்ற வெடிகுண்டை தூக்கிப் போடுகிற தகவலை தொ¢வித்தார். அன்று இரவெல்லாம் எனக்கு மனசு என்னமோ போல் இருந்தது என்று கூறினால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

பிறகு சொக்கனிடம் விசா¡¢த்த போது 'எனக்கும் யாரோ அப்படித்தான் சொன்னார்கள். உறுதியாகத் தொ¢யவில்லை. விசா¡¢க்கிறேன்.' என்றார். இரண்டு, மூன்று சிறுகதைத் தொகுதிகள், சில நாவல்கள் எழுதின ஒரு எழுத்தாளன், (இத்தனைக்கும் சுஜாதாவின் சிஷ்யர்) உயிருடன் இருக்கிறாரா, செத்தாரா என்று கூடத் தொ¢யாமல் இருக்கும் அநியாயம் அநேகமாக தமிழில்தான் நடக்கும் என்று நினைக்கிறேன்.

oOo

இந்த சிறுகதையை இணையத்தில் போடலாம் என்று யோசித்த போது யா¡¢டம் அனுமதி கேட்பதென்று புரியவில்லை. சா¢, ஒரு நல்ல எழுத்தை எடுத்துப் போடுவதன் மூலம் சிறை வாசம் கிடைக்குமென்றால் அதையும்தான் பார்த்து விடுவோமே என்றொரு அசட்டுத் ¨தா¢யத்துடன் இங்கே இட்டிருக்கிறேன். நீங்கள் யாராவது ஜாமீனில் எடுக்காமலா போய் விடுவீர்கள்?

இந்தக் கதையை பாதி பெக் விஸ்கியில் இருக்கும் போதோ, பால் குக்கரை அடுப்பில் வைத்து விட்டு அந்த இடைவெளியில் படிப்பதோ உசிதமில்லை. எல்லா லெளதீக விஷயங்களையும் முடித்துக் கொண்டு ஒரு சாவகாசமான மனநிலையில் படிக்க வேண்டுகிறேன்.

இனி கதை அடுத்த மடலில்.

Tuesday, June 20, 2006

சாகசமும் மனித நேயமும்

Set Top Box தொல்லைகள் இல்லாத காலங்களில் டிஸ்கவரி சானல் மற்றும் அனிமல் பிளானட் சானல்களில் விலங்குகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றின ஆவணப்படங்களை விரும்பிப்பார்ப்பேன். குறிப்பாக சிங்கம், புலி, யானை, பாம்பு போன்றைவகள் எப்போதும் என்னை வசீகரிக்கக்கூடியது. பிபிசி தயாரித்த ஆவணப்படம் என்று ஞாபகம். ஒரு பெண் புலியின் சில வருட வாழ்க்கையை ஆண் புலியை விட அதிக பிரேமையுடன் தொடர்ந்து நேர்த்தியாக படமாக்கியிருந்தார் அந்த இயக்குநர். ராணி என்கிற அந்த பெண்புலி தன் இணையுடன் கூடி ஒரு குட்டியைப் பெற்றெடுக்கிறது. தனது உணவிற்காகவும் ஆண் புலியின் அராஜகத்திலும் பாடாய்ப்படுகிறது. அது படுகிற பாட்டைப் பார்க்கும் போது இந்த சதிகார மான் ஓடித் தொலையாமல் அருகே வந்து மாட்டிக் கொள்ளக்கூடாதா என்று நம் மனம் ஏங்குகிறது. எதிராளியின் பார்வையிலிருந்து ஒரு விஷயத்தை அணுகினால் எவ்வளவு மாறுபாடான பார்வை கிடைக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். நம் தமிழ்ப்பட இயக்குநர்கள் 'சிம்பாலிக் டச்' என்ற பெயரில் கற்பழிப்புக் காட்சிகளை சென்சாரின் கெடுபிடிக்கு பயந்து மான் ஒன்றை வேங்கை ஆவேசத்துடன் துரத்திச் சொல்வதை காண்பித்து காண்பித்து புலி என்பதை ஒரு வில்லனாகவே நமக்கு சித்தரித்திருப்பார்கள்.

அவ்வாறின்றி இயற்கையின் நியதிப்படி புலிக்கு மான் போன்ற சாகபட்சிணிகள்தான் உணவு என்பதையும் அந்த உணவை அடைவது அத்தனை எளிதல்ல என்பதையும் மேற்சொன்ன ஆவணப்படம் காட்டியது. ஹேராம் என்கிற திரைப்படத்தில் வேட்டையைப் பற்றின விவாதத்தில் "உங்க குழந்தைய ஒரு ஓநாய் தூக்கிட்டுப் போனா, அது உணவிற்காகத்தானே எடுத்துக் கொண்டு போகிறது என்று உங்களால் சும்மாயிருக்க முடியுமா?" என்கிற கேள்விக்கு "அது அந்த ஓநாயோட பார்வையிலிருந்து பார்த்தால்தான் தெரியும்" என்று விடைவரும்.

()

புலி போன்ற விலங்கினங்கள் தமது உணவிற்காக வேட்டையாடுவது இயற்கையின் நியதிப்படி சரியானதுதான். ஆனால் மனிதன் விலங்குகளை வேட்டையாடுவதை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவது? "கொன்னா பாவம் தின்னா போச்சு" என்கிற பழமொழியின் அடிப்படையிலா? எதற்காக மனிதன் வேட்டையாடுகிறான்? உணவிற்காக என்பது எளிதான விடை என்றாலும், வேட்டையாடுவதில் அவனுக்கு கிடைக்கும் சாகச உணர்வுதான் பிரதானமாக (புலி போன்ற உணவல்லாத விலங்குகளை வேட்டையாடுவது) இருக்கக்கூடும். இவ்வாறு சில இனங்களை மட்டும் வேட்டையாடி அழிப்பதினால் ஒரு வனத்தின் இயற்கையான சுழற்சியை குலைத்து அதன் சமத்தன்மையை பாதிப்படையச் செய்கிறான்.

நான் ஒரு அசைவ உணவுக்காரன் என்றாலும், எந்த விதத்திலும் நியாயப்படுத்துபவனாக இருக்க மாட்டேன். என்றாலும் இது போன்ற வேட்டைகளைப் பற்றின நூலைப் படிப்பதிலும், ஒளிக்காட்சிகளையும் பார்ப்பதில் ஆர்வம் ஏற்படுவதற்கு அதன் பின்னணயில் உள்ள சாகச உணர்வுதான் காரணம் என்று தோன்றுகிறது.

ஜிம் கார்பெட் என்பவரை ஒரு வேட்டைக்காரராகவும் அவர் எழுதிய சில நூல்களான The Man-eating Leopard, Temple Tiger and More Man-eaters ஆகிய ஆங்கில நூல்களையும் அறிந்து வைத்திருந்தேனேயன்றி எந்தவொரு நூலையும் படித்ததில்லை. "எனது இந்தியா" என்கிற அவர் எழுதின ஆங்கில நூலின் தமிழப்பதிப்பை நூல்நிலையத்தில் கண்டவுடன் விருப்பத்துடன் வாசிக்க எடுத்து வந்தேன். ஓரு வேட்டைக்காரரின் சாகச அனுபவங்களை படிக்க வேண்டும் என்கிற ஆவலே அது. ஆனால் நான் எதிர்பார்த்ததிற்கு முற்றிலும் மாறாக, இந்த நூல் 'ஜிம் கார்பெட்' என்கிறவரின் மனித நேயத்தையும், இந்தியா மற்றும் இந்தியர்கள் (குறிப்பாக அடித்தட்டு மக்கள்) மேல் அவர் வைத்திருக்கும் அன்பு குறித்தும் விவரிக்கும் போது ஆச்சரியமாக இருந்தது. எனவேதான் இந்த நூலை அவர், "இந்தியாவின் ஏழை ஜனங்களாகிய என் நண்பர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்" என்றெழுதும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.

()

எட்வர்டு ஜேம்ஸ் (ஜிம்) கார்பெட் (1875 - 1955) இன்றைய உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள நைனிடாலில் பிறந்தவர். இடையில் தமது 42-ம் வயதில் இங்கிலாந்து சென்று திரும்பியது தவிர தன் வாழ்க்கை முழுவதையும் இங்கேயே கழித்தவர். இந்தியா விடுதலை பெற்ற பிறகு கின்யாவிற்கு குடிபெயர்ந்து அங்கேயே இறந்தார். தம்முடைய வேட்டைத் திறமையால் ஆட்கொல்லி வேங்கைகளை கொன்று ஏழை மக்களின் அன்பைப் பெறுகிறார். அவற்றை தன்னுடைய அனுபவங்களாக பல நூல்களாக பதிவு செய்து வைத்திருக்கிறார். Man-eaters of Kumaon (1944) என்கிற நூல் தி.ஜ.ர.வின் மொழிபெயர்ப்பில் பல்லாண்டுகளுக்கு முன்னர் தமிழில் வெளிவந்துள்ளது.

()

ஜிம் கார்பெட் தன் வாழ்க்கையை பெரும்பாலும் கழித்த நைனிடாலையும் அதைச் சுற்றியுள்ள மலைகளையும் ஆறுகளையும் பள்ளத்தாக்குகளையும் விஸ்தாரமாக விவரிப்பதில் இந்த நூல் துவங்குகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இந்த நூல் அவரின் வேட்டை அனுபவங்களை விட அவர் சந்தித்த அவரை பாதித்த இந்திய மனிதர்களைப் பற்றின நெகிழ்ச்சியான அனுபவங்களால் நிரம்பியிருக்கிறது. உதாரணத்திற்கு "லாலாஜீ" என்கிற கட்டுரையைப் பற்றி மாத்திரம் விஸ்தாரமாக எழுத முயற்சிக்கிறேன்.
அதி உச்சமான உஷ்ண காலமொன்றில் நீராவிப்படகிலிருந்து இறங்கி அகலப்பாதை ரயில்வண்டியில் ஏறுபவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக நிதானமாக இறங்கும் முதியவர் ஒருவருக்காக கிளம்பவிருக்க ரயில்வண்டியை காத்திருக்கச் செய்கிறார். ஆனால் அந்த மனிதரோ சாவதானமாக கங்கைக் கரையில் விரிப்பை விரித்து படுத்துவிடுகிறார். "எனக்கு ரயிலெல்லாம் வேணாம் சாஹேப். நான் சாகக் கிடக்கிறவன்".

அவர் காலராவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஜிம் யூகிக்கிறார். அவரை தன்னுடைய பணியாட்கள் தங்கியிருக்கும் அறையொன்றில் படுக்க வைத்து தனக்குத் தெரிந்த சிகிச்சை முறைகளை அவருக்கு அளிக்கிறார். என்றாலும் அந்த மனிதர் பிழைப்பார் என்று அவருக்கு நம்பிக்கையில்லை. ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவர் பிழைத்துக் கொள்கிறார். பிறகு நிதானமாக அவரைப் பற்றி விசாரிக்கும் போது அவரின் பின்னணி விவரங்கள் தெரிய வருகின்றன.

ஒரு காலத்தில் செழிப்பான வணிகராயிருந்த அவர் ஏமாற்றுக்கார கூட்டாளி ஒருவனால் அனைத்தையும் இழக்கிறார். தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் விற்று கடன்களை அடைத்து, தான் வணிகம் செய்த ஒருவரிடமே பணிக்கு அமர்கிறார். இடையில் மனைவியும் இறந்து போகிறார். வணிக சம்பந்தமாக முஸா·பர்பூரிலிருந்து கயாவுக்குச் செல்லும் வழியில் தீவிரமான காலரா நோய்க்கு ஆளாகிறார்.

நடக்கும் அளவிற்கு தெம்பு பெற்றவுடன் "இனி என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று ஜிம் விசாரிக்கிறார். நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் அவரின் முதலாளி வேறு ஆளை பணிக்கு வைத்திருப்பார் என்று அவருக்கு தெரிவிக்கப்படுகிறது.

"திரும்பவும் வியாபாரி ஆகிடணும். என் மகனெப் படிக்க வைக்கணும் என்கிற நினைப்பெல்லாம் ராப் பகலா இருந்துகிட்டுதான் இருக்கு ஸாஹேப். புதுசாத் தொழிலை ஆரம்பிக்கணும்னா ஐநூறு ரூபா வேணும். நானோ மாசம் ஏழு ரூபா சம்பளம் வாங்கற வேலைக்காரன். அடமானக் கொடுக்கறதுக்கு எதுவுமே இல்லாதவன். இந்த உலகத்துல யாரு என்னை நம்பிக் கடன் குடுப்பாங்க?"

முன்பின் தெரியாத அந்த மனிதருக்கு உதவ ஜிம் முடிவு செய்கிறார். அவர் எழுதுகிறார் : ...... ஆக என் சேமிப்பின் பெரும்பகுதியைத் தம்முடன் எடுத்துக் கொண்டு லாலாஜீ கிளம்பிப் போனார். அவரை நான் மீண்டும் சந்திப்பேன் எனபதில் எனக்குச் சந்தேகமேயில்லை. ஏனெனில் இந்தியாவின் ஏழை ஜனங்கள் தமக்குக் காட்டப்பட்ட பரிவை மறப்பதே இல்லை. ஆனால் லாலாஜீ என்னிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அவரது சக்திக்கு அப்பாற்பட்ட காரியம் என்று நான் நிச்சயமாக நம்பினேன்....

ஓரு மாலை வேளையில் ஜிம் வேலை முடிந்து திரும்பும் போது அந்த எளிய மனிதர் லாலாஜீ கடனாக வாங்கிய பணத்தை வட்டியுடன் வைத்துக் கொண்டு திருப்பியளிக்க காத்திருக்கிறார். ஐநூறு ரூபாயைக் கொண்டு தனக்குத் தெரிந்த வணிகத்தை எளிய முறையில் ஆரம்பித்து நன்றாக முன்னேறியிருப்பதாக தெரிவிக்கிறார். 'நண்பர்களிடம் வட்டி வாங்குவது எங்களுக்கு வழக்கமில்லை' என்று மறுக்கிறார் ஜிம்.

லாலாஜீ புறப்படும் போது ஜிம்மிடம் சொல்கிறார்:

"ஒங்களோட தங்கியிருந்த ஒரு மாச காலத்தில, ஒங்க தொழிலாளிகள்ட்டேயும் ஒங்க வேலைக்காரங்ககிட்டேயும் பேசினப்போ, ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஒரு நாளைக்கு ஒரே ஒரு சப்பாத்தியும் கொஞ்சம் பருப்பும் மட்டும் சாப்பிட வேண்டிய கஷ்ட நிலைமை ஒரு சமயம் ஒங்களுக்கு வந்துச்சாமே. அப்படி ஒரு நிலைமை இனிமே வராமே அந்தப் பரமேஸ்வரன் பாத்துக்கிருவான். ஒருவேளை அப்பிடி ஒரு நிலை வந்துச்சுன்னா, அடியேன் என்கிட்டே இருக்கிற சகலத்தையும் ஒங்க காலடியிலே வந்து கொட்டுவேன்."

()

எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. யுத்தம் காரணமாக ஹைதராபாத்திலிருந்து ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நடத்துவதற்காக சென்னை வந்து சேரும் அந்த குடும்பம், தலையில் மூட்டையாக சுமந்து வரும் துணிக்கடைக்காரரிடம் பணம் கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறது. நிலைமையை அறிந்து கொண்ட அந்த துணிக்கடைக்காரர், முன்பின் அறிந்திராத ஊருக்குப் புதியவர்களான அவர்களுக்கு பெரும் தொகை மதிக்கத்தக்க துணிவகைகளை கடனாகத் தருகிறார். அவர் தற்போது சென்னையில் பட்டுப்புடவை வியாபாரத்தில் புகழ் பெற்றும் "நல்லி" நிறுவனத்தின் ஸ்தாபகர். ஆக.... நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் அந்தக் காலத்தில் நிறைய இருந்திருக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்திலும் தேடிப்பார்த்தால் அவ்வாறானவர்கள் அகப்படக்கூடும்.

இவ்வாறான பல எளிய மனிதர்களைப் பற்றின கட்டுரைகள் ஜிம் கார்பெட்டின் வேட்டை அனுபவங்களூடே இந்த நூலில் நிரம்பியுள்ளன. ரயில்வே ஒப்பந்தக்காரனான பொறுப்பேற்று ஜிம் படும் கடினமான வறுமை சார்ந்த அனுபவங்களும் எளிய ஜனங்களைக் கொண்டு அதை அவர் வென்றெடுப்பது குறித்தான சுயஅனுபவங்களும் இதில் அடக்கம். "எங்கள் இந்தியா" என்றும் "எங்கள் ஜனங்கள்" என்று கட்டுரை முழுதும் அவர் குறிப்பிட்டுச் செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏனெனில் இது இந்தியாவைப் பற்றி அதிகம் அறிந்திராத மேற்கத்தியர்கள் படிப்பதற்காக எழுதப்பட்ட ஆங்கில நூல்.

கவிஞராக அறியப்பட்டு பின்னர் சிறுகதை ஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் பரிணாமம் பெற்ற யுவன் சந்திரசேகரின் நேர்த்தியான எளிமையான மொழியுடனான பணி, இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதை மறக்கடிக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் தம்முடைய முன்னுரையில் காட்டுயிர்களைப் பற்றின பொதுவான கவனமின்மையை குறிப்பிடும் போது ..... நகரச் சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ஒரு தலைமுறை எழுத ஆரம்பித்த பின் நம் இலக்கியமும் இயற்கை உலகினுன்று அந்நியப்பட்டு விட்டது என்று எண்ணுகிறேன். புறவுலகைப் பற்றிய சொல்லாடல் உருவாகவில்லை. 'ஒரு மரத்தடியில்..' என்றும் 'ஒரு சிறு பறவை' என்றும் பலர் எழுதுவதைக் காணலாம். என்ன மரம்? என்ன பறவை? இந்த விவரங்க¨ள் குறிப்பிட்டால் அந்தச் சொல்லோவியம் உயிர் பெற்று விளங்கும்"........... என்று எழுதும் போது குற்ற உணர்ச்சியுடன் பலமாக ஆமோதிக்கவே தோன்றுகிறது.

()

எனது இந்தியா - கட்டுரைகள் - ஜிம் கார்பெட் - (தமிழில் யுவன் சந்திரசேகர்) - காலச்சுவடு பதிப்பகம் - 232 பக்கங்கள் - ரூ.125/-

Friday, June 16, 2006

ஒரு முன்னாள் விடலையின் நினைவுக் குறிப்புகள்

வளர்சிதை மாற்றம் - தேன்கூடு போட்டி பதிவு

எச்சரிக்கை 1: இது சற்றே நீளமான கட்டுரை. படிக்க விசாரணைக் கமிஷன் தலைவர் போல நிறைய பொறுமை தேவை.

எச்சரிக்கை 2: இது ஒரு 20 வயது இளைஞனின் அமெச்சூர்த்தனமான தற்கொலை முயற்சி பற்றிய அனுபவங்களையும் இன்னும் சில சுவாரசியமில்லாத அந்தரங்கங்களையும் உள்ளடக்கியது. படிக்க விருப்பமில்லாதவர்கள் இங்கேயே விலகிக் கொள்ளலாம்.

()

நமது வாழ்க்கையை ஒவ்வொரு நிலையிலும் ஒரு கட்டத்தை தாண்டுவதின் மூலமே கடந்து கொண்டிருக்கிறோம். இது இயல்பாகவோ, திணிக்கப்பட்டதாகவோ, வலியுடனோ, சுகமான கனவுகளுடனோ.. எப்படியோ நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. இந்த வளர்சிதை மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருந்தால்தான் வாழ்க்கை இயல்பாக இருக்கும். எல்.கே.ஜி. படிக்கப் போன மாதிரியே இப்பவும் விரல் சூப்பிக் கொண்டே பேருந்தில் அமர்ந்துக்கொண்டிருக்க முடியாது. எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கும் பேரிளம்பெண், ஆபாச சமிக்ஞை செய்து அப்பா, அம்மா விளையாட்டுக்கு அழைப்பதாக நினைத்து காவல் நிலையம் செல்லக்கூடும்.

இந்த வகையில் என்னுடைய பதின்ம வயதுப் பருவத்திலிருந்து பெரியவர்கள் உலகத்திற்கு எப்போது நுழைந்தேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். இது, இந்தக் கணத்தில்தான் நிகழ்ந்தது என்று தீர்மானமாக யாராலும் சொல்ல முடியாதுதான் என்றாலும் ஏதாவதொரு முக்கியமான நிகழ்வு இந்த லாங் ஜம்ப்பிங்கை ஏற்படுத்துகிறது என்பது என் தாழ்மையான கருத்து. அப்படியாக நான் "bye-bye adolocense" என்று சொன்னதற்கு ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது என் தற்கொலை முயற்சி.

"சொல்வதற்கு எல்லோரிடமும் ஒரு சிறந்த கதை இருக்கிறது" என்பார் சுஜாதா. இதோ ரத்தமும் சதையும் கண்ணீருமாக என்னுடையது. "அந்தரங்கம் புனிதமானது" என்கிற உணர்வில்லாமல் எல்லாவற்றையும் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்வது முறையானதா என்றும் இணையம் தருகிற சுதந்திரத்தை இவ்வாறாக தவறாக பயன்படுத்தலாமா சிலர் கேள்வி எழுப்பக்கூடும். "என் வாழ்க்கையே என் செய்தி" என்று தன் வாழ்க்கையை வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட மகாத்மா காந்தியிலிருந்து, பாலகுமா¡ரன், சாருநிவேதிதா, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போன்றவர்களே இதை எழுதும் துணிவை எனக்குத் தருகிறார்கள். (பில்டப் ஓவராத்தான் போகுது!) இதனாலேயே அந்த சிறந்த படைப்பாளிகளோடு இந்த சுயபுலம்பலை ஒரே அளவுகோலில் நிறுத்தும் எண்ணம் கிஞ்சித்தும் எனக்குக் கிடையாது. இதை முழுமையாக படிக்கும் பொறுமையைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

()

காலையில் எழுந்து கதவைத் திறந்து பால் பாக்கெட்டை எடுத்து ப்ரிட்ஜில் வைத்து விட்டு (முன்ன வீட்ல ப்ரிட்ஜ் இல்லாதப்ப, அடையார் பிரிட்ஜ்ல வெக்கவான்னு கேப்பேன்) டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடப்பவனைப் போல அலங்கோலமான கோலத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் மகளை, சாம, தான, பேத, தண்டம் என்று அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி எழுப்ப வைத்து, சமையலறையில் தீவிரமாக சமையல் என்கிற பெயரில் விநோத ரசாயனக்கலவைகளை தயாரித்து எங்களை பரிசோதனை எலிகளாக நடத்திக் கொண்டிருக்கும் மனைவிக்கு வெங்காயம் அரிந்து கொடுத்து, படிச்ச நாயே கிட்ட வராதே........... என்கிற பாட்டை எப்.எம்மில் கேட்டுக் கொண்டே ஹிண்டுவை படித்து முடித்து, உள்ளே வெஜிடபிள் பிரியாணியா, பழைய சாதமா என்னவென்று வெளியே காட்டிக் கொடுக்காத நாகரிகமான ஹாட்பாக்சில் மதிய உணவை எடுத்துக் கொண்டு சமர்த்தாக அலுவலகத்திற்கு கொண்டிருக்கும் நான்..................

சற்றேழக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என்னவெல்லாம் அட்டகாசம் செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? 7ஜி ரெயின்போ காலனியில் வரும் அந்த நாயக பாத்திரத்திற்கும் எனக்கும் அதிக வித்தியாசமில்லை. ஓ..... வில் தொடங்கும் அந்த "அகர முதல" சென்னையின் பிரபல வார்த்தையை உச்சரிக்காமல் என்னால் எந்த வாக்கியத்தையும் ஆரம்பிக்கத் தெரியாது. "மச்சான்.. இப்டி பின்னால கறியே இல்லாம ஒல்லியா எந்த பிகரும் பாக்காது" என்று நண்பர்கள் உசுப்பேற்றி குண்டாகும் உபாயமாக பியரை உபதேசித்ததில், மெல்ல மெல்ல ஏறும் அதன் போதை பிடித்துப் போய் ஒரு முறை வீம்பாக 5 பியர் பாட்டில்களை ஒரே அமர்வில் சாப்பிட்டு, ஒரு காலை ராயபுரத்திலும் இன்னொரு காலை வண்ணாரப் பேட்டையிலுமாக வைத்து வீட்டிற்கு நடந்து போய் வாசலிலேயே அத்தனையையும் நாற்றத்துடன் வாந்தியெடுத்து... அன்றைக்குத்தானா என் அப்பாவின் தெவச நாளாக இருக்க வேண்டும்? இன்றைய பான்பராக்குக்குகளுக்கெல்லாம் முன்னோடியான "மாவா" என்கிற திடபோதை தரும் வஸ்துவை வகுப்பறையிலேயே உபயோகித்து ஆசிரியரால் பிடிபட்டு டி.சி. தரும் நிலையில்.. தலைமை ஆசிரியரின் முன்னால் என் அம்மாவின் அழுகையில் அது மன்னிப்புடன் தடுத்து நிறுத்தப்பட்டது.

character establishment போதும் என நினைக்கிறேன்.

()

சுமார் 12-ல் இருந்து 19 வயது வரையான இந்த பதின்ம வயதை உளவியலில் "புயலும் காற்றும் சுழன்றடிக்கிற பருவம்" என்று வர்ணிக்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். இந்த வயதில் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளான நம்முடைய வளர்ப்பு, சூழ்நிலை, போக்கு, கல்வி, பழக்க வழக்கங்கள் ஆகியவையே நம் எஞ்சிய வாழ்க்கையை பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. பெற்றோர்கள் மிகவும் தங்கள் வாரிசுகளை மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டிய பருவமாக இதைப் பார்க்கிறேன். உலகிலேயே முழுக்க இலவசமாக தரப்படும் ஆனால் தேவைப்படும் நேரத்தில் கிடைக்காத "உபதேசம்" என்கிற விஷயம் மட்டும் இந்த வயதுக்காரர்களுக்கு பயங்கர ஒவ்வாமையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. மரியாதையை எதிர்பார்க்கும் வயசு. யாராவது தெரியாமல் "சார்" என்றால் புளகாங்கிதமடையும் அதே வேளையில் "டேய் தம்பி" என்பவரை பதினெட்டு தலைமுறை விரோதி போல் பாவித்து முறைக்கும் வயசு.

எல்லா மனிதர்களும் இடையறாது தேடிக் கொண்டிருக்கும் தன்னுடைய சுய அடையாளத்தை தீவிரமாய் தேட ஆரம்பிக்கும் வயசு. ஏதாவது ஒன்றை இறுகப்பற்றிக் கொள்ளும் பேராசையில் கண் முன்னே ஜொலிப்பான அடையாளங்களாக திகழும் நடிகர்களை தங்கள் ஆதர்சமாக ஏற்றுக் கொண்டு, சில சமயம் அதிலேயே மூழ்கிப் போகும் வயசு. சாப்பிடும் போது அப்பன் திட்டின "தண்டச் சோறுவை" மறக்க போதைப் பொருட்களை நாடச் செல்லும் ஆவேசமான வயது. காமம் உடலெங்கும் நிறைந்து வழிய மலையாளப் படங்களும், குளியலறையை நிழலாக கடப்பதும், சுயமைதுனமாகவும் கிடந்து அலையும் வயசு. சில மத்திம வயதுக்காரர்கள் மாதிரி பெண்களை வெறும் உடம்பாய்ப் பார்க்காமல், தேவதையாக, சகியாக பார்த்து கவிதை எழுதச்
சொல்லும் வயசு.

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே இந்த பருவத்தை மிகுந்த சிரமங்களின்றி கடக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக நான் பெரும் சிரமத்தோடுதான் கடந்தேன். மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அளவுக்கு அதிகமான கட்டுப்பாடே என்னை வெறுப்பேற்றி எல்லையை மீறச் செய்தது. வீட்டின் அருகாமையில் வாய்த்த சேரி நண்பர்கள் இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் எதுவுமின்று திரிந்ததை வியப்புடன் பார்த்ததில் அவர்களே என் ஆதர்சமாகி நெருக்கமானவர்களாகவும் ஆகிப் போனார்கள். "போடா வெளில. இனிமே எங்க வீட்ல டி.வி. பாக்க வா.. சொல்றேன்" என்று அல்பமாக அலட்டுகிற கீழ் நடுத்தர நண்பர்களைப் போலல்லாமல், மிகுந்த சிரமத்திற்கிடையில் தனக்கு கிடைக்கும் எளிய உணவைக்கூட அலட்டலின்றி மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிற அவர்களின் இயல்பான தன்மை எனக்கு பிடித்துப் போனதில் நல்லவையுடன் கூட தீயவையையும் கற்றுக் கொண்டேன். ஆனால் ஒன்று, தீய பழக்கங்களோ, நல்ல பழக்கங்களோ, நடுத்தர வர்க்கத்தினருக்கே உரிய எந்த பாசாங்குகளுமின்றி எதையும் இயல்பாகவும், வெளிப்படையாகவும் செய்தது குறித்து இன்றும் எனக்கு திருப்தியுண்டு.

()

இந்த வயதில் பெரும்பாலும் எல்லோரும் தானாகவே தேடிப் போய் எதிர்கொள்ளும் விபத்து - காதல். இது ஹார்மோன்களின் கபடி விளையாட்டு, இயற்கையின் ஆதாரவிதிப்படி மனித சுழற்சியை உருவாக்க உடல் செய்யும் மாயம் என்பதெல்லாம் வழக்கம் போலவே அந்த நிலையைக் கடந்த பின்தான் புரிகிறது. "கடலை போடக்கூடக்கூட பிகர் இல்லாதவன் ஆம்பளையே கிடையாது" என்கிற நண்பர்கள் வட்டாரத்தின் குரூர விதிமுறைகள் ஆவேசத்தை கிளப்ப "எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா" என்று ஏக்கத்துடன் சுற்றினேன். இந்த இடத்தில் என்னுடைய விநோதமான ஈகோவைப் பற்றி சொல்லியேயாக வேண்டும். சைட் அடிப்பதில் கூட ரொம்பவும் சுயமரியாதை உள்ளவன் நான். பேருந்தில் பயணிப்பவள், என்னைப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாளேயானால், மறந்து போய் கூட அவளை மறுபடி பார்க்க மாட்டேன். பெண்கள் கடந்து செல்லும் போது காக்காய் பிடிப்பது போல் புகழ்ச்சியான வார்த்தைகளை கூறுவது, வீடு வரைக்கும் எஸ்கார்ட் வேலை பார்ப்பது, பார்வையாலேயே பிச்சை எடுப்பது ... காதல் செய்வதற்கு அடிப்படை தகுதியான இவைகளையெல்லாம் மிகுந்த தன்மானத்துடன் செய்யாமலிருந்தேன். இப்படியாக பாரம்பரிய மறத்தமிழனாக சுற்றி வந்த என்னையும் அசடுவழிய வைத்தாள் ஒருத்தி.

டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலமது. asdfg அடிப்பதற்கு பதிலாக love அடிக்கவாரம்பித்தேன். "கண்டுகொண்டேன்"2 படத்தில் வரும் ஐஸ்வர்ராராயின் மினியேச்சர் போலிருந்த (நெஜமாங்காத்தாங்க) அவளை பார்த்ததும் எனக்குள் ஏதோ செய்ய ஆரம்பித்தது. அந்த வயதிற்கேயுரிய விடலைத்தனங்களுடன் எப்படியோ அவளைக் கவர்ந்து தினமும் பேச ஆரம்பித்துவிட்டேன். "டைப் அடிச்சதுல நெறைய தப்பு வந்துச்சா" என்று அவள் இயல்பாக கேட்ட சில நிமிட உரையாடலைக்கூட "மச்சி! ஒரு மணி நேரம் பேசினதுல டைம் போனதே தெரியலைடா" என்று நண்பர்களிடம் அளக்க ஆரம்பித்தேன். வளர்த்துவானேன்....இப்படியாக எல்லாவிதமான அமெச்சூர்தனங்களுடன் வளர்ந்து கொண்டிருந்த எங்கள் காதல் ஒரு அதிகாலை சண்டையில் முடிவிற்கு வந்தது.

அதிசயா அதிசயமாக நான் தாய் சொல்லை தட்டாமல் மளிகைச் சாமான்கள் வாங்க போய்க் கொண்டிருக்கும் போது ஒருவன் ரொம்ப தெனாவட்டாக வந்து "நீதானே ......." என்றான் சுருக்கமாக, மணிரத்னம் பட பாணியில். "ஆமாம்" என்றேன் புரியாமல். "டைப் அடிக்கப் போனா கைய கால வெச்சுகினு ஒயுங்கா இருக்காம, ..த்தா இன்னாடா பொண்ணுங்களாண்ட சில்மிசம்? என்றவுடனேயே விஷயத்தை புரிந்து கொண்டேன். நான் அந்த வயதில் பார்க்க சற்று ஒல்லிப்பிச்சானாக இருந்தாலும், என்னுடன் இருக்கும் நண்ப பரிவாரங்களின் பின்னணி குறித்து அந்த ஏரியாவில் எல்லோருக்கும் தெரியுமாதலால் என்னிடம் யாரும் எதுவும் வைத்துக் கொள்வதில்லை. "யார்ரா இவன் புதுசா இருக்கானே" என்று யோசித்துக் கொண்டே "........................ நீ யார்ரா......................... அதைக் கேட்கறதுக்கு" என்று விடுபட்ட இடங்களில் சென்னைக்கே உரித்தான அதிபயங்கர வசவு வார்த்தைகளை உதிர்த்தேன். பிறகு நானும் அவனும் காமா சோமா என்று அடித்துக் கொண்டோம். அதை சண்டை என்று வர்ணித்தால் அந்த வார்த்தைக்கே மிகுந்த அவமரியாதை வந்து சேரும் என்பதால் கட்டுப்படுத்திக் கொள்கிறேன். பிறகுதான் தெரிந்தது, என்"ஆளின்" அண்ணன்காரன் சொல்லி இவன் வந்து விசாரித்திருக்கிறான் என்று. "பசங்களுக்கு" தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் யாருக்கும் நான் சொல்லிக்கொள்ளவில்லை.

பிறகு என்னாச்சோ என்று தெரியவில்லை, அந்தப் பெண் என்னைக் கண்டவுடனேயே, திமுக எம்.எல்.ஏக்களை கண்ட அதிமுக எம்.எம்.எல்.ஏக்கள் போல் சங்கடத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டது. "என்னாச்சு" என்று ஒரு நாள் இருட்டு சந்தின் முனையில் வலுக்கட்டாயமாக விசாரிக்க, அந்தப் பெண் அழுதுக் கொண்டே ஓடிப்போனதில் வில்லன் பொன்னம்பலம் போல் உணர்ந்தேன். என்னுடைய ஈகோ, "கர்மத்த விட்டுத் தொலைடா மச்சான்" என்று பிரித்தெறிய முயன்றாலும் என்னவோ எனக்குள் உடைந்து போய் இரண்டு நாட்கள் சரியாக சாப்பிடாமல் எழவு வீட்டில் உட்கார்ந்திருந்தவன் போலிருந்தேன். மேலும் வேலையில்லாமல் வீட்டில் அமர்ந்திருந்ததில், மிதமான வறுமையுடன் போரடிக் கொண்டிருந்த என் கீழ்நடுத்தர குடும்பத்திலிருந்து மனஅழுத்தத்தை அதிகரிக்கும் எதிர்ப்புகள் வர... விரக்தியின் உச்சத்திற்கே போய்...... முடிவெடுத்துவிட்டேன் தற்கொலைக்கு.

()

வெயிலுக்கு பயந்து ஊட்டி, பெங்களூர் செல்பவர்களை பார்த்திருப்பீர்கள். பிரச்சினைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதற்கு பெங்களூரை தேர்வு செய்தேன். காரணம் இருக்கிறது. தற்கொலையிலும் எனக்கு முன்அனுபவம் இருந்தது. எட்டாவது வகுப்பை முடித்துவிட்டு விடுமுறையில் ஒரு மருந்துக் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, ஏதோ பிரச்சினை நேர, விஷய ஞானத்தில் compose 10mg பத்து மாத்திரைகள் விழுங்கியதில் சில நிமிடங்களிலேயே சொர்க்கத்திற்கு பயணித்து வண்டி பிரேக்டவுனாகி திரும்பிய இடத்திற்கே வந்து சேர்ந்தேன். மாலை 7 மணிக்கே மாத்திரைகளை விழுங்கி வீட்டில் படுத்திருந்தததால் பிறகு வந்தவர்கள் புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உப்புக்கரைசல் கொடுத்து காப்பாற்றி விட்டனர்.

இந்த முறை அந்த மாதிரியான தவறொன்றும் நிகழக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மேலும் நான் என்ன ஆனேன் என்றே என் வீட்டாருக்கு தெரியக்கூடாது என்று தீர்மானித்து இதன் மூலம் அவர்களை பழிவாங்குவதாகவும் திருப்தி பட்டுக் கொண்டேன். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போல என் மரணமும் எந்தவித தடயமுமின்றி நிகழ வேண்டும் என்பதற்காக (அடப்பாவி! என்ன ஒரு அநியாய ஒப்பீடு) துப்பறியும் நாவல்களில் படித்திருந்ததை நினைவுப்படுத்திக் கொண்டு சட்டை காலரில் உள்ள தையல்கடையின் பெயரை கிழித்தெறிந்தேன். பணத்தை தவிர வேறெந்த அடையாளங்களும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டேன்.
பெங்களூரின் கெம்ப கவுடா ரோடு "தற்கொலை செய்ய இனிதே வருக" என்று வரவேற்றது. அங்கேயிருந்த சற்றே உயர்தரமான ஹோட்டலில் பொய் முகவரி கொடுத்து அறை எடுத்தேன். கணிசமான பணம் கையில் இருந்ததால், இரண்டு நாட்களை விருப்பம் போல் வாழ்ந்துவிட்டு பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். ரயில் தண்டவாளம், கட்டிட உச்சி, கடல், தூக்கு ... என்று மிகுந்த வலியுடன் சாவதற்கு விருப்பமில்லாததால் பழைய முறையையே பின்பற்றி tik20 என்கிற பூச்சி மருந்தை வாங்கிக் கொண்டேன். (சில தற்கொலை சம்பந்தமான உரையாடல்களில் இந்தப் பெயரை கேட்ட அனுபவம்) இதுவும் போதுமா என்று சந்தேகத்தோடு மருத்துவரிடம் சென்று "தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும், இரவில் தூங்க சிரமப்படுவதாகவும் சொல்லி restin என்கிற மாத்திரைகளை நிறைய வாங்கிக் கொண்டேன்.

இனி கொண்டாட்ட நேரம்.

()

ஒரு மாதிரி சுஜாதாவின் கதாபாத்திரம் போல் விநோதமாகத்தான் அலைந்தேன். பிளாட்பாரக்கடையில் ரெடிமேட் சட்டை வாங்கி அணிந்து கொண்டேன். கோன்பனா க்ரோர்பதியில் அமிதாப்பச்சன் எளிதாக அமர்ந்து போட்டியாளர் அமர சிரமப்படும் உயரமான நாற்காலி போல அமைந்துள்ள பாரில் அவ்வப்போது பியர் சாப்பிட்டு போதையிலேயே இருந்தேன். ஒரு அசைவக் கடையில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் விருட்டென்று வெளியேறினேன். ஒரு மூன்றாந்தர செக்ஸ் படத்தை கன்னட மொழியின் பின்னணியில் தலைவலியுடன் பார்த்தேன். ஊரைச் சுற்றிப்பார்க்க முடிவு செய்து டூரிஸம் அலுவலகத்திற்கு சென்று பின்பு முடிவை மாற்றிக் கொண்டு திரும்பினேன். ரூம் சர்வீஸிடம் காப்பி ஆர்டர் செய்துவிட்டு டீதானே எடுத்து வரச்சொன்னேன் என்று சண்டை போட்டேன். அறையிலிருந்த தொலைக்காட்சி பெட்டியை கன்னாபின்னாவென்று இயக்கி அது அழும் படி செய்தேன். இவ்வளவு செய்தேனே ஒழிய, ஒரு முறையாவது, தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு ஊர் போய்விடலாமென்று மாத்திரம் யோசிக்கவேயில்லை. மிக உறுதியான தீர்மானம். 'தற்கொலை என்பது அந்த கண நேர பைத்தியக்காரத்தனம். அதைக் கடந்து விட்டால் போதும்' என்கிற 'புன்னகை மன்னன்' வசனமெல்லாம் என்னிடம் செல்லுபடியாகவில்லை.

முதல் நாள் இன்பமாக கழிந்து கணிசமான பணம் செலவழிந்திருந்தது. இன்னும் கூட இருந்தது. அப்போதுதான் தீடீரென்று அந்த எண்ணம் என்னுள் மின்னலடித்தது. எப்படியும் சாகப் போகிறோம், அதையும் பார்த்துவிட்டாலென்ன? அந்த வயதிற்கேயுரிய இயல்பான வெளிப்படான காமம் என்கிற உணர்வு என்னுள்ளே வழிந்து என்னை படாத பாடு படுத்திக் கொண்டிருந்தது. மலையாளப்படங்களும், சுயமைதுனமும் ஒரளவிற்கே வடிகாலாக அமைய, நிஜ அனுபவம் எப்படியிருக்கும் என்பது மிகுந்த ஆவலை என்னுள் ஏற்படுத்தியிருந்து. ஒரு பெண்ணின் உதட்டில் அழுந்த முத்தமிட்டால் எப்படியிருக்கும் என்று கற்பனையை ஓடவிட்டு ஈரமான பல இரவுகளை கழித்திருக்கிறேன். என்றாலும் இதை விலைமாதர்களுடன் சாத்தியமாக்கிக் கொள்ளும் தைரியம் மட்டும் -வாய்ப்புகள் இருந்தாலும் - வரவில்லை. அழுகிச் சொட்டும், விகாரமாக வீங்கியிருக்கும் ஆண்குறிகளின் புகைப்படங்களை பயங்காட்டி மருந்துகளை விற்கும் பிளாட்பார லேகிய வைத்தியர்களிடம் கூட்டத்தில் நின்று பார்த்திருந்ததில் இது (குறி)த்தான பயம் மிகுதியாக இருந்தது.

எப்படியும் சாகப் போகிற நிலையில் பெண்சுகம் எப்படியிருக்குமென்று பார்த்துவிட வேண்டுமென்கிற ஆவல் பயத்தையும் மீறி என்னுள் பற்றிக் கொண்டது. செத்துப் போய் விறைத்து நிற்கிற ஆண்குறியைப் பற்றிக் கொண்டு ஆவியாக அலைய எனக்கு விருப்பமில்லை. ஆனால் இதை எப்படி சாத்தியமாக்கிக் கொள்வது என்கிற யோசனையும் எழுந்தது. நான் இருந்த ஹோட்டலோ நாகரிகமான ஆனால் கட்டுப்பெட்டித்தனமாக இந்த மாதிரியான சமாச்சாரங்கள் எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை. பகல் முழுவதும் சுற்றி விட்டு அறைக்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டு இதே நினைவாக அலைந்ததில் .... "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்" என்கிற வாக்கிற்கேற்ப (அடப்பாவி!) பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அவர்களைப் பார்த்துவிட்டேன். "செக்ஸ் தொழிலாளிகள்" என்று முகத்தில் மட்டுமல்ல எல்லா இடத்திலும் எழுதி ஒட்டியிருந்தது. "எப்படி அணுகுவது?" என்று தயக்கமாக இருந்தது. தற்கொலையில் கூட முன்அனுபவம் கொண்ட எனக்கு இது புதிதாக இருந்ததால் தயக்கமாக இருந்தது. எவளாவது "என்னா தம்பி வோணும்" என்று கேட்டுவிடுவார்களோ என்று கூட பயமாக இருந்தது.

மனஅழுத்தத்ததால் பாதிக்கப்பட்டு முடிவைத்தேடி ஊர்பெயர் தெரியாத ஊரில் விபச்சாரியைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு குழப்பமான 20 வயது இளைஞனின் பார்வையில் இதை அணுக வேண்டுகிறேன். இப்படியாக தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு போலீஸ் ஜீப் ரோந்து வர, அத்தனை பேரும் விநோதமாக கத்திக் கொண்டு பக்கத்திலிருந்த இருட்டுச் சந்தில் ஓடி மறைந்தார்கள். எனக்கிருந்த குழப்பமான பயமும், உள்ளே ஆவேசமான காமமும் கலந்த விநோதமாக மனநிலையில் ஏதோவொன்று 'பட்'டென்று உடைந்து எல்லாம் வடிந்து போனது. ஏதோ நல்லதிற்குத்தான் (?!) இது நிகழ்ந்திருக்கிறது என்று என்னை தேற்றிக் கொண்டு ஹோட்டலை நோக்கி நடந்தேன். (இந்த இடத்தில் சுயஎச்சரிக்கையுடன் மற்ற நிகழ்வுகளை மாற்றியமைத்து தணிக்கை செய்திருக்கிறேன் என்று தவறாக யூகிப்பவர்களுக்கு ... என்னை நம்புங்கள். நிச்சயம் இதுதான் நடந்தது. அப்படி ஏதும் விவகாரமான விஷயம் நிகழந்திருந்தால் நிச்சயம் அதை தனிக்கட்டுரையாக எழுதியிருப்பேன்)

இனி விடைபெறும் நேரம்.

()

ஏதோ ஒரு 'எழவு' கோப்பைக்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முட்டிக் கொள்கிற இறுதி கிரிக்கெட் போட்டி. ஊரே அந்த ஜீரத்தில் ஆழந்திருக்க நான் என்னுடைய last supper-ஐ நிறைவு செய்தேன். ரூம் சர்வீசில் ஒரு குளிர்பானம் வாங்கிக் கொண்டு, தூங்கப்போவதாக சொல்லி தொந்தரவு செய்யாமலிருக்க கேட்டுக் கொண்டேன். குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து விட்டு, ஏற்கெனவே பொடி செய்து வைத்திருந்த மாத்திரைகளையும் அதில் கலந்து எதிரே வைத்தேன். சுயபச்சாதாபத்தில் இயல்பாக கண்ணீர் வழிந்தோடியது. ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் தனித்தனியாக நினைத்துக் கொண்டு மானசீகமாக உரையாடினேன். ஏதாவது கடிதம் எழுதி வைக்கலாமா என்று எழுந்த எண்ணத்தை உடனடியாக அழித்தேன். குடிக்கத் தொடங்கினேன்.

மண்ணைண்ணைய் வாடையுடன் குமட்டிக் கொண்டு வந்த அந்த திரவத்தின் விசித்திர சுவை (?!) இன்னும் கூட என் மூளையின் நீயூரான்களில் பதிந்திருந்து .. இதோ இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ... பசுமையாக என்னுள் எழுகிறது. கால்வாசி குடித்திருந்த நிலையில் குமட்டிக் கொண்டு வந்ததை நாக்கை கடித்துக் கொண்டு அறையில் உலாவி அடக்கிக் கொண்டேன். மிச்சத்தை எப்படி குடிக்கப் போகிறேன் என்று பயமாக இருந்தது. எப்படியோ எல்லாவற்றையும் குடித்து விட்டு சிறிது நேரம் கிரிக்கெட்டை வேடிக்கை பார்த்துவிட்டு ............ எப்போது உறங்கி அல்லது மயங்கிப் போனேன் என்று தெரியாது.

விடியற்காலை சுமார் ஐந்து மணியளவில் தானாகவே விழிப்பு வந்தது. நான் போர்த்தியிருந்த போர்வை முதற்கொண்டு படுக்கையில் ஆங்காங்கே விகாரமான சிவப்பு நிற கறைகளுடன் அந்த இடமே பிரசவ அறை போல் இருந்தது. நடுவில் என்னையும் அறியாமலேயே அத்தனையையும் வாந்தி எடுத்திருக்கிறேன். நான் செத்துப் பிழைத்ததை கூட உணர முடியாமல், ஹோட்டல்காரன் இதைப் பார்த்தால் என்ன நிகழுமோ என்று நடுக்கமாயிற்று. எப்படியோ சமாளித்துக் கொண்டு தலையணையின் அடியில் வைத்திருந்த மிச்சமிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அவசரம் அவசரமாக check-out செய்தேன்.

நம்பினால் நம்புங்கள். எப்படி பிழைத்தேன் என்று எனக்குத் தெரியாது. நான் வாங்கின restin என்கிற மாத்திரைகள் காம்போஸ் போல் வீர்யமானது அல்ல என்பதையும் அவை வெறும் டிராங்குவலைசர்கள்தான் என்பதையும் பின்னால்தான் தெரிந்து கொண்டேன். இருந்தாலும் tik20 சாப்பிட்டும் எப்படி பிழைத்துக் கொண்டேன் என்பது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உடனே வாந்தியெடுத்துவிட்டதால்தான் பிழைத்துக் கொண்டேன் என்று நம்புகிறேன். வேகமாக வந்து மோத இருந்த ரயிலிடமிருந்து தப்பியவன் போல் வெளிறிப் போய் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன்.

()

முக்கியமான இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம். சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஏதோ ஒரு தேவதை காதருகில் அமர்ந்து கொண்டு நல்ல புத்தியாக சொல்லிக் கொண்டு வந்தது. இயற்கை ஏதோ ஒரு காரணத்திற்காக உன்னை படைத்திருக்கிறது. எப்படி உன் விருப்பமில்லாமல் நீ பிறந்தாயே அப்படி உன் விருப்பமில்லாமல் நீ இறக்க முடியாது. இல்லையென்றால் சாக முயன்ற இரண்டு முறையும் நீ பிழைத்திருப்பாயா? இனிமேலாவது இந்த மாதிரியான பைத்தியக்காரத்தனங்களை விட்டு உருப்படிகிற வழியைப்பார். கஷ்டப்படுகிற உன் குடும்பத்திற்கு உன்னால் இயன்ற வரையில் உதவி செய். எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உன்னை வளர்த்தவர்களை ஒரு கணமேனும் சிரிக்கச் செய்; நிம்மதி அடையச் செய். காதல் என்பதெல்லாம் அந்த நேர அபத்தம்தான்.
குழப்பமெல்லாம் விலகி தெளிவான மனநிலையுடன் சென்ட்ரலில் வந்திறங்கினேன்.
புத்தருக்கு ஒரு போதிமரம் போல் எனக்கொரு பெங்களுர்.

இதோ.....இந்தக் கணத்திலிருந்துதான் என் விடலைத்தனத்தையெல்லாம் உதறியெறிந்தேன் என்று தீவிரமாகவே நம்புகிறேன்.

()

இதற்குப்பிறகு ஒரு சுமாரான நல்ல வேலையைத் தேடிக் கொண்டேன். நல்ல நண்பர்களின் உதவியால் தமிழ் இலக்கியங்களின் பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொண்டேன். பெண் என்பவளை உடலைத்தாண்டி மனசு என்கிற விஷயத்துடன் அணுகக்கற்றுக் கொண்டேன். எந்தவொரு துன்பத்தையும் அல்லது இன்பத்தையும் சற்றே விலகியிருந்து அனுபவிக்க கற்றுக் கொண்டேன். எதையும் தத்துவார்த்தமாக கற்கத் தொடங்கினேன். ஜக்கிவாசுதேவோ, யாரோ சொன்ன "இதுவும் கடந்து போகும்" என்கிற வாக்கியம் என்னுள் ஆழப் பதிந்து போனது. ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால் வாழ்க்கையோ முடிந்து போனது போல் அழுது அரற்றுகிறோம், புலம்புகிறோம். அதையே சிறிது காலம் கழித்து நினைவு கூர்கையில் எதற்கு அப்படி துன்பப்பட்டோம் என்று நம்மையே நாம் நகைத்துக் கொள்கிறோம். ஆனால் மறுபடி ஒரு துன்பம் வரும் போது.. இது மறந்து போய் மறுபடி அழுகைதான். "இதுவும் கடந்து போகும்."

எனக்கு மகள் பிறந்த பிறகுதான் என் வாழ்க்கையின் அர்த்தம் கிடைத்தாற் போலிருந்தது. குழந்தையிலிருந்து அவள் வளர்ச்சியை உன்னிப்பாக ஒரு தகப்பனாக ஆனந்தமாக கவனிக்கையில், இந்த சந்தோஷத்தையெல்லாம் இழந்து விட்டிருப்பேனே என்கிற உணர்வு தோன்றியது. அவளுடன் ஒரு குழந்தையாக மாறி கதவுக்குப் பின்னால் ஒளிந்து விளையாடுகிறேன். குடும்பத்தின் முக்கியமான பிரச்சினைகள் உள்பட அவளுக்கும் அவளுடைய மொழியில் விளங்க வைக்கிறேன். அவளுடைய மழலைத்தனமான ஆலோசனைகளை கவனமாக கேட்டுக் கொள்கிறேன். (சில சமயங்களில் இதுவே பயனுள்ளதாக இருக்கிறது.) அவள் தன்னுடைய குறும்புகளால் என்னை கோபப்படுத்தும் போது என்னுள் விழித்துக் கொள்கிற மூர்க்கத்தை கவனமாக கட்டுப்படுத்திக் கொள்கிறேன். என்றாலும் அவ்வப்போது கண்டிப்புடன் சிறிய தண்டனைகளும் உண்டு. அவளின் எந்தவொரு சிறிய பிரச்சனையையும் தேவையையும் கவனமாக கேட்டு அவள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். நான் அனுபவித்த எந்தவொரு சிறு வலியையும் அவள் அனுபவிக்க கூடாது என்பதில் விழிப்பாக இருக்கிறேன்.

()

எந்தவித கோர்வையுமில்லாமல் நான் விடலைப் பருவத்தை தாண்டின கதையை - உங்களுக்கு கொட்டாவி வரும் வகையில் - எந்தவித ஒப்பனையுமின்றி சொல்லி முடித்திருக்கிறேன். இதை எழுதி முடித்தவுடன் என்னுள்ளே ஏதோ ஒன்று கழன்று கொண்ட மாதிரி உணர்கிறேன். இதை எழுதியதின் மூலம் உங்களுக்கொரு செய்தி சொல்லியிருக்கிறேன் என்றெல்லாம் எழுதினால் அது எனக்கே அருவருப்பாகயிருக்கும். ஆனாலும் இந்தப் பதிவு மறைமுகமாகவாவது - குறிப்பாக பெற்றோர்களுக்கு - எதையாவது உணர்த்தினால் அதுவே என் வெற்றி. (குழந்தைகளுக்கு புத்தி சொல்லும் அளவிற்கு நாம் இன்னும் பெரியவர்களாகவில்லை)

இது பரிசிற்கு தேர்வாகும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் என்னிடம் இல்லை. இது தேர்வானால் ஆனந்தப் படவோ அல்லது தேர்வாகாவிட்டால் வருத்தப்படவோ என்னிடம் ஏதுமில்லை. ஏனெனில் -

இதுவும் கடந்து போகும்.

Friday, June 09, 2006

உள்ளேன் ஐயா!

எனது இருப்பு குறித்து சில நண்பர்களுக்கு வில்லங்கமான சந்தேகங்கள் வந்திருப்பதை அறிய நேர்ந்ததால் இந்நாள் முதல்வரின் கடந்த வருடங்கள் பாணியில் வருகைப்பதிவில் ஒரு கையெழுத்து போட்டுவிட்டு உடனே ஓடிப்போய் விடலாமென்று உத்தேசம்.