Saturday, June 24, 2006

இரவிச்சந்திரன் - சிறுகதை

சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே - ==============================================

-இரவிச்சந்திரன்

"இன்னும் நூறு வருஷத்துக்கு ஒரு கவிஞனும் கிடையாது. கவிதையும்
கிடையாது. 38க்கு இடைப்பட்ட வயசில் அவன் செத்தது கொடுமை. இந்த 38 வயசுங்கறதே, கலைஞனுக்கு ஒரு டேஞ்ஜர் பீ¡¢யட் போல. இவன், விவேகாநந்தர், புதுமைப்பித்தன், ஆலபர்ட் காம்யூ எல்லேர்ரும் 38தான். நல்ல வேளை நான் 54ஐத் தாண்டிட்டேன். அவன் இருந்தா இவ்வளவு காளான் முளைச்சு இருக்குமா? இன்ன தேதி வரைக்கும் ஒரு பயல் தமிழ் நாட்டில் கவிஞன்னு சொல்லிக்கிட்டுத் தி¡¢ய முடியுமா? அவனை மாதி¡¢ யாரய்யா இவ்வளவு Variety of Literature செஞ்சாங்க? குயில் பாட்டில் இருந்து ஜார் மன்னன் வீழ்ச்சி வரை பாடின Cosmopolitan minded popt அவன்தான். ஆயுதம் செய்வோம். நல்ல காகிதம் செய்வோம். கப்பல் கட்டுவோம். இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவோம்னு இண்டஸ்ட்¡¢யல் மைண்ட் அவனுக்குத்தான் இருந்தது........"

என்று உரை நிகழ்த்திவிட்டு, சோபாவில் தாக சாந்தி செய்து கொண்டார் இலக்கியப் பித்தன். ரூமில் உட்கார்ந்து இருந்த கூட்டம் ஆமா ஆமா! என்றது.

"தொடர்ச்சியா சொல்லுங்க," என்றார் ஒரு துணுக்கு எழுத்தாளர்.

"இவனை இப்படியே வளர விட்டால் ஆபத்து. கடைசியில் இவனோட பாட்டுக்குப் பயந்தே வெள்ளைக்காரன சுதந்திரம் கொடுத்திடப் போறான் அப்படின்னு பயந்து, திருவல்லிக்கேணியிலே ஒரு கூட்டம் அன்னைக்கு சாயங்காலம் அடிச்சே கொன்னானுங்களே, பாவிங்க."

"அய்யே! அப்படீங்களா?" என்றார் லோகல் கவிஞர்.

"ஆமா!" என்றார் தீர்மானமாக இலக்கியப் பித்தன்.

"அய்யா என்ன புதுசாச் சொல்றாப்பில?"

"யானை மிதிச்சுச் செத்தார்னு இல்லே சொல்லிக்கிறாங்க"

"பொய்யி. செஞ்ச தப்பை மறைக்கறதுக்கோசரம் அப்படி ஒரு வட்டார வழக்கு.
ஏன்யா, யானை மிதிச்சுச் சாகற ஆளாய்யா அவன்?"

"அதானே அதானே!" என்று ஒரு நாலைந்து அதானே.

இலக்கியப் பித்தன் ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டார். தரைக்கு மேல் ஒரடி உயரம் இருக்கிற மாதி¡¢ ஒரு நினைப்பு. தொண்டையைத் தட்டிக் கொண்டு கீழ்க் கண்டவாறு பாட ஆரம்பித்தார்.

சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு
மகளிருண்டுசூதிற் பணயமென்றே அங்கோர்
தொண்டச்சி போவதில்லைஏது கருதிப்
பணயம் வைத்தாய்? அண்ணே
யாரைப் பணயம் வைத்தாய்.
மாதர் குல விளக்கை........

"ஸார்! போஸ்ட்."

மாதர் குல விளக்கை அப்படியே விட்டு விட்டுக் கண்களைத் திறந்தார். எதி¡¢ல் சமீபத்தியப் புது யூனிபாரத்துடன் போஸ்ட் மேன்.

"இது வேறயா?" என்று முணுமுணுத்தார்.

"என்ன இது? அய்யாவைத் தொந்தரவு செஞ்சுகிட்டு" என்று முணுமுணுத்தார் ஒரு பத்தி¡¢கை ஆசி¡¢யர். தகாத செய்கை செய்தவனைப் போல - துகில் உ¡¢ந்த திரெளபதியைப் போல் சபையில் நின்ற போஸ்ட் மேன்.

"இல்லீங்க. இது ரெஜிஸ்டர் போஸ்ட். அய்யாதான் கையெழுத்துப் போடணும்னு ஐதீகம். அதனால்தான் தொந்தரவு பண்ணிட்டேன். மன்னிச்சுக்குங்க!" என்றார் பிச்சைக்காரத்தனமாக.

"பரவாயில்லை. உங்க கடமையை நீங்க செய்யணும்," என்று சொல்லி நீட்டின இடத்தில் போட்டுவிட்டு உறையை வாங்கினார். விலாஸத்தைப் படித்து விட்டு, எதி¡¢ல் உட்கார்ந்து இருந்த குடிமக்களைப் பார்த்துப் போனால் போகிறது என்று, "டில்லி லெட்டர். ஸாஹித்ய அகாடமியில் இருந்து வந்திருக்கு," என்றார்.

"என்னவாம்?"

"இந்தாப்பா. இதைப் படிச்சுச் சொல்லு" என்று அந்த சிரமத்தைத் தன்னுடைய அமானுவென்ஸஸிடம் கொடுத்தார். விறுவிறுவென்று முடித்து விட்டு, "இந்த வருஷம் panel-ல் தமிழுக்கு உங்களைப் போட்டு இருக்காங்களாம். ஒப்புதலைப் பத்து நாளிலே தொ¢விச்சுடணும்னு மகிழ்ச்சியுடன் அறிவிச்சு இருக்காங்க அய்யா!" என்றான்.

"அதே மகிழ்ச்சியுடன் ஒப்புதலைத் தொ¢விச்சு ஒரு லெட்டர் உடனே போட்டுரு."

"ஆகட்டுங்க," என்று சொன்ன அமானுவென்ஸஸ் பக்கத்து அறைக்குப் போனான். அங்கே அலமேலு கை நகத்துக்குப் பாலிஷ் ஏற்றி அதில் முகம் தொ¢யுமா என்று முயற்சித்துக் கொண்டு இருந்தாள்.

"இந்தாம்மா அலமேலு. இதை உடனே அடிச்சிடு. அவசரம்." என்றான்.

"அவசரமா அடிச்சா சா¢யா வராதுய்யா!" என்றாள் அலமேலு.

"இப்ப போஸ்டுக்குப் போயிடணும்."

"அய்யா சொன்னாரா?"

"ஆமா. பின்னே?"

"போய்க் கேட்கவா?" என்று டைப்ரைட்டரைத் தள்ளி விட்டு எழுந்து விட, அமானுவென்ஸஸ் பதறி, "தாயே! மன்னிச்சுக்கோ. அவரு அவசரப்படலை. நான்தான் பட்டேன்."

எழுந்த வேகத்தில் அலமேலு உட்கார்ந்து, "எனக்குத் தொ¢யாதா? உன்னை மாதி¡¢ எத்தனைப் பசங்களைப் பெறப் போறேன்."

"அம்மா ஆம்பிளைக் காமாட்சி! உனக்கு ராஜாமணின்னு பேரு வெச்சு இருக்கணும். அலமேலுன்னு வெச்சது நாச்சியாருக்கே இன்ஸல்ட்டு."

"அப்ப சா¢. இனிமே எங்க அம்மா பெக்கற குழந்தைக்கெல்லாம் உன்னைக் கேட்டுட்டுப் பேரு வெக்கச் சொல்லிடறேன். இப்ப திருப்தியா?"

அதிர்ந்து போய் "இப்படி எல்லாம் பேச வெட்கமாயில்லை?" என்று கோபித்தான் அமானுவென்ஸஸ்.

"இங்க வேலைக்கு வந்து சேர்ந்ததில இருந்து வெட்கம் எல்லாம் வெட்கப்பட்டுட்டுப் போயிடுச்சுய்யா!" என்றாள்.

சட்டென்று குனிந்து "சா¢. எப்பவோ அடிச்சா சா¢" என்று போனான். போனதைப் பார்த்துக் கொண்டே "ம். குதிரை சும்மா இருக்கும். லத்திதான் உறுமுமாம்." என்று அவன் காதுக்குப் பட சுவருக்குச் சொன்னான். அப்புறம் லோயர் ரோலரை ரீலிஸ் செய்து, கார்பனில் பேப்பரைப் புகுத்தி சிலிண்டருக்குள் செலுத்தி, தேதி போட்டு என்று தீப்பொறி பறக்கத் தட்ட ஆரம்பித்ததும், வாழ்வின் அவலங்கள் எல்லாம் மறந்து போயின, தற்காலிகத்துக்கு.

"இப்ப பாருங்க, பொதுச் சொத்து மாதி¡¢ ஆயிடுச்சு. புதிப்பு பதிப்புகளாப் போட்டு தீவட்டிக் கொள்ளை அடிச்சிட்டு இருக்கானுங்க. இருந்தப்ப சோத்துக்குச் செத்தான்....... என்று தொடர்ந்து கொண்டு இருக்கையில் 3 மீட்டர் தூரம் அரை மீட்டர் உயரத்தில் இருந்த டெலிபோன் அடித்தது. அதே அமானுவென்ஸஸ் டெலிமாலையைத் தொடுத்து, "அல்லோ...." என்றான்.

இலக்கியப் பித்தன், முகத்தைத் திருப்பி, திருட்டுச் சைகை ஒன்றின் மூலம்,
"யாரு?" எனறார்.

வாய்ப் பக்கத்தை மூடி "பத்தி¡¢கை ஆபீசில் இருந்துங்க."

"என்னவாம் எழவு?"

"சிறுகதைப் போட்டி விஷயம். அவசரமாம்."

"புதன்கிழமை வெச்சுக்கலாம்னு சொல்லு." புதன் கிழமைக்கு இன்னும் 13 நாள் இருந்தது.

"முடியாதாம். இந்த இதழில் முடிவு அடுத்த வாரம்னு வெச்சுட்டாங்களாம். ரெண்டு பாரம் மி~¢னுக்குப் போயிடுச்சாம். கொஞ்சம் தயவு பண்ணணுமாம்."

"கால்ல சுடுதண்ணிய ஊத்திட்டுதான் பத்தி¡¢கை நடத்துவானுங்க. சா¢ சா¢. இன்னும் ஒன் அவர்ல வர முடியுமான்னு கேளு. வரப்ப எல்லாக் கதைகளையும் எடுத்துட்டு வரச் சொல்லு. கையை வீசிட்டு விதவை மாதி¡¢ வெள்ளைப் புடவைல வரப் போறானுங்க."

"புறப்பட்டாச்சாம்" என்று சொல்லி வைத்து விட்டு, "லெட்டர் டைப் ஆயிட்டு இருக்குங்க."

எதி¡¢ல் உட்கார்ந்து இருந்த ஏழெட்டுப் பேரும் ஒன்று திரண்டார்கள். ஒருவர்,

"அப்போ விடை பெத்துகறோம்ங்க"

"உங்களுக்கும் கோடி ஜோலி" இது கவிஞர்.

"ஆமா" என்று ஒத்துக் கொண்டார் இலக்கியப் பித்தன்.

வாசல் வரை சென்று வழியனுப்பி விட்டுத் திரும்பினார். அருகே நின்று இருந்த உதவியாளனைப் பார்த்து "ஹீம், வெட்டி இலக்கியம் பேசியே விரோதம் வளர்த்துட்டு இருந்துட்டம்!" என்றார் பெருமூச்சுடன்.

"அது கூட ஆமாங்க!" என்ற அமானவென்ஸஸ், "அதோ கார் வந்துட்டு இருக்கு," என்றான். திருடன், கா¡¢யக் கண்ணன்.

கார், க்¡¢ல்லை எதிர்த்துக் கொண்டு, கான்கீ¡¢ட் தரையில் நுழைந்தது. தீபாவளி அவசரத்தில் கதவுகள் திறக்கப்பட்டு ஆறேழு பேர் உதிர்ந்தார்கள்.

"வணக்கங்க."

"வணக்கம். வாங்க வாங்க!" என்று புட்டபர்த்தி ஸாய்பாபா போல் சி¡¢த்து நமஸ்காரம் போட்டார்.உதவி ஆசி¡¢யர் ஒருவர் கக்கம் நிறையக் கதைகளை வைத்துக் கொண்டு,

"ஹிஹி. உங்களைத் தொந்தரவு பண்ணிட்டே இருக்கோம். மன்னிக்கணும். வேற வழி? உங்களை விட்டால்..."

பொ¢ய மனது பண்ணி "பரவாயில்ல. பொது வாழ்க்கையில் ஈடுபடறவன் privacyஐ விட்டுடணும். பிரபலத்துக்கு விலை அதான்!" என்றார்.

"ஸ்ட்ரோக் தூளுங்க" என்றார் இன்னொரு ஆமாஞ்சாமி.

உதவி ஆசி¡¢யர் கூட இருந்தவரைப் பார்த்து, "எழுதிக்குங்க. அடுத்த வாரம் ஒரு பாக்ஸ் மேட்டர் போட்டுருவோம்" என்றார் பதைப்புடன்.

"சா¢. இலக்கியம் பண்ண ஆரம்பிக்கலாமே?" என்றார் இ.பித்தன்.

தொடர்ந்து, "முதல்ல இருந்து விவரமாச் சொல்லுங்க. இந்தச் சிறுகதைப் போட்டி திடீர்னு எதுக்கு? ஏதாவது மலர் போடறீங்களோ?" என்றார் பற்ற வைத்துக் கொண்டே. கஞ்சா மணம் அறை முழுக்கப் பூதம் போல் பரவிற்று.
அந்த அறை பொ¢ய ஹால். தரை முழுவதும் காஷ்மீரக் கம்பளம் பரவி இருந்தது. மேலே அட்டகாஸமான கார்லோ விவா¡¢ சாண்டலியர். ஏதோ ஒரு டெலிகேஷனில் ஐரோப்பா போயிருந்த போது வாங்கி வந்தது. ஒரு மூலையில் பெடஸ்டல் ·பேன். இடது ஒரத்தில் போடி நாயக்கனூர் உயர்தரப் பஞ்சில், ஸாடின் தலையணைகள். அதில் சாய்ந்து கொண்டார். லாங் ஷாட்டில் டில்லி சுல்தான் மாதி¡¢க் காட்சி அளித்தார். பத்தி¡¢கை ஆபிஸ் ஆறேழு பேரும் செளகா¢யமாக உட்கார்ந்து கொண்டு இவர் என்ன உதிர்ப்பாரோ என்று காத்துக் கொண்டு இருந்தனர்.

கூட ஒரு துணுக்கு எழுத்தாளர், எழுத்தாளர் இலக்கியப் பித்தன் வீட்டில் இருக்கும் போது லுங்கிதான் உடுத்திக் கொள்கிறார் என்று சரம் சரமாக எழுதிக் கொண்டார்.

ஸால்வார் கமீஸீம், சரசமுமாக உள் நுழைந்தாள் அலமேலு.

"ஸார். ஸாஹித்ய அகாடமி லெட்டர். கையெழுத்துப் போட முடியமா? 10-30 மணி போஸ்டுல போயிடட்டும்." என்றாள் பவ்யமாக.

பவ்யம் ஒரு பாவனையே.இடமும் காலமும் நேரமும் மாறும் போது இந்தப் பவ்யம் ஆள் மாறும்.

"அந்த ராயல்டியை எனக்கு ஒரு பேரர் செக்காகக் கொடுத்திடுங்க. என்ன? மசமசன்னு இருக்காதீங்க. ஒரு நெக்லஸ் பண்ணிக்கணும்."

"இவ்வளவுதானே அலமேலு. செக்கைக் கொண்டா. கையெழுத்தை எங்கே போடணும்? இரு. பேனா எழுத மாட்டேங்குது. கொஞ்சம் உன்னோட மார்ல
தேச்சுக்கறேன்."

கையெழுத்து உற்சவம் முடிந்தது. அலமேலு அந்தப்புரத்துக்குள் போனாள். "ம். சொல்லுங்க." என்றார்.

"பத்தி¡¢கை ஆரம்பிச்சு பத்து வருஷம் ஆச்சு. அதுக்காக ஒரு ஸ்பெஷல் இஷ்யூ. அதிகப் பக்கங்கள் அதே விலை. கூடவே ஒரு இலவச இணைப்பு."

"அதில மெட்டீ¡¢யல் நாலு பக்கம். மீதி எல்லாம் விளம்பரம். அப்படித்தானே?" என்று கண்டுபிடித்த மாதி¡¢ச் சொன்னார் டில்லி சுல்தான்.

"ஹிஹி. கரெக்டாச் சொல்லீட்டீங்களே."

"மலர்னா - விளம்பரம் ஜாஸ்தி சேர்ந்துடுச்சுன்னு அர்த்தம்." என்றார் மானேஜர் சர்க்குலே~ன்.

"அதை ஏன் சபைல சொல்றீங்க?" என்று சிடுசிடுத்தார் உதவி ஆசி¡¢யர்.

"சா¢ சா¢. ஆரம்பியுங்க. சண்டை எல்லாம் அப்புறம். ஸோ, அதுல ஒரு சிறுகதைப் போட்டி. அதுவும் அறிமுக எழுத்தாளர்க்கு மட்டும். இல்லையா?"
என்று கேட்டார் சிறுகதைப் பித்தன்.

"அதேதான். முதல் பா¢சு ரூபா 3000. இரண்டாவது பா¢சு 2000 மூணாவதுக்கு ஆயிரம். பிரசுரமாவற கதை 20க்குத் தலா ரூபா 250."

"அது சா¢. அதென்ன கூடவே ஒரு வாலு. அறிமுக எழுத்தாளர்க்கு மட்டும் அப்படீன்னு."

"சிறுகதை எழுதறதுக்குத் தமிழ்ல ஆளே இல்லீங்க. எல்லாம் திருப்பித் திருப்பி மாமியார் மருமக சண்டை, வரதட்சணைக கொடுமைக கதை. ஒரு பொண்ணு குடும்பத்துக்காக உடம்பையே உருக்கிக்கறது. இல்லைன்னா சோரம் போறதுன்னு இதையே திருப்பித் திருப்பி எழுதிச் தேச்சிட்டு இருக்காங்க. அதைவிட்டா ஒரு பக்கக் கதைகள். இந்த ஒரு பக்கக் கதைகள் எழுதத் தமிழ் நாட்டில, ஐனதா கட்சிக்கு இருக்கிறதை விட அதிக ஆள் இருக்கு."

"முதல்ல, ஒரு பக்கக் கதையை ஒழிச்சுக் கட்டணும்." என்றார் இலக்கியப் பித்தன்.

"கரெக்ட் கூடுமானவரை நம்ம பத்தி¡¢கைல போடறதே இல்லை."

"நீங்க சொல்றது எல்லாம் சா¢தான். சிறுகதை நல்ல மீடியம். அதை யாரும் உபயோகப் படுத்தறது கிடையவே கிடையாது. பங்களுர்க்காரர்தான் ஸின்ஸியரா சிறுகதை மீடியத்தை ஒழுங்காச் செய்யறார்."

"பின்னே. நல்ல விஷயம் எங்க இருந்தாலும் பாராட்டணும். அதான் நம்ம பி¡¢ன்ஸிபில். ஆனால இதைப் போட்டுறாதீங்க. நமக்குள்ள."

"ஆஹா. அய்யாவுக்கு என்ன ஒரு மனசு!" என்றார் அம்பத்தூ¡¢ல் ஐஸ் பாக்டா¢ வைத்து இருக்கிற ஒரு அமெச்சூர் எழுத்தாளர்.

"சா¢. மொத்தம் எத்தன கதை வந்தது?"

"3625 கதை வந்தது. பயந்துட்டு சட் னு நிறுத்திட்டம்."

"ஸோ. தமிழ் நாட்டில வீட்டுக்கு ஒரு மரம். ஸா¡¢. எழுத்தாளர். இல்லையா?"
"அதேதான். அதில் முதல் ரவுண்டில் 3000 கதைகளை ¡¢ஜக்ட் செய்துட்டோம். போர்டுக்கே வராத குதிரைங்க. மீதி 625-ல் உயிர்த்தியாகம் செய்யற கதைகளை ஒதுக்கிட்டோம். அது நீங்க சொன்ன அபிப்ராயம்."

"குட். ஏன்னா சாவுங்கறது பொ¢ய விஷயம். ஒரு சிறுகதைல சாவு வர்ரது ¡¢டிகுலஸ். கதை முடிவுலே காரெக்டர் செத்தா - ஒரு வெய்ட் இருக்கும்னு நினைக்கற myth-ஐ உடைக்கணும். அதனாலதான் அப்படிச் சொன்னேன்."

"அ! அதில் 300 கதை போச்சா? மீதி 325. அதில் நூறு கதை இருக்கு. ஆனால் இல்லை. ஸோ அதுவும் அவுட்."

"225-ல் 25 கதை அயல் தேசத்துக் கதை - & ·பிலிம் ·பெஸ்டிவல் சினிமாவைத் தமிழ்ப்படுத்தி இருக்காங்க. இன்னும் இருநூறு. அதில் 175 கதைகள் முடிவில, ஏ! சமூகமேன்னு கூப்பிட்டு, கடைசி பாரா பூரா ஈசாப் கதை மாதி¡¢ உபதேசம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க."

"பரவாயில்லையே. நல்லா அனலைஸ் பண்ணி இருக்காங்க. ஏன்! நீங்களே எழுதலாமே! என்று பாராட்டினார் உதவி ஆசி¡¢யரை."

"எங்கிங்க! எழுதற ஸ்பீட் வரப்ப பார்த்து எடிட்டர் பத்மப்பி¡¢யா டைவர்ஸ் கேஸ் என்னாச்சுன்னு போயப்பார்த்துட்டு வந்து ஸ்டுடியோ விஜயம் பகுதிக்கு எழுதுன்னு ஆர்டர் போடறார். சைதாப்பேட்டை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்ல பகல் முழுக்க நின்னு, மாஜிஸ்ட்ரேட் தீர்ப்புச் சொல்றதுக்கு முன்னேயே ஆபீசுக்கு வந்து தீர்ப்பை நாங்களே எழுதி ·பாரத்தை நிரப்ப வேண்டி இருக்கு."

"கொடுமை. உலகத்தில நல்ல கலைஞனுக்கு எப்பவும் இந்தத் துர்ப்பாக்கிய நிலைமைதான். சா¢. மீதி 25 கதை?"

"அதில், பிரசுரத்திற்குத் தகுதியானதுன்னு 20 கதைகளை, மீதி மூணு நடுவர்களும் தேர்ந்து எடுத்து இருக்காங்க."

"அதை விடுங்க. அவுங்க தேர்ந்து எடுத்தாச் சா¢யாத்தான் இருக்கும். அது சா¢. முதல் நடுவர் நான். மத்த மூணு யாரு?"

"ஒருத்தர் சினிமா டைரக்டர். இன்னொருத்தர் பெண் எழுத்தாளர். மூணாவது ஐகோர்ட் ஜட்ஜ்."

"ஜட்ஜ்க்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கோபித்துக் கொண்டார்.

"ரொம்ப மோசமா எழுதினவங்களை அவரை வெச்சிட்டு தண்டிக்கச் சொல்லிடலாம்!" என்றார் அம்பத்தூர் ஐஸ் பாக்டா¢. உடனே எல்லோரும் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதமர் பொலிட் பீரோ கூட்ட்தில் சொன்ன ஜோக்கிற்குச் சி¡¢த்தது போல் ஒரே மாதி¡¢ச் சி¡¢த்தார்கள்.

"ஆக, தமிழ் நாட்டில ஐந்தே சிறுகதைதான் தேறி இருக்கு?"

"ஆமாங்க."

"மற்ற நடுவர்கள் தோந்து எடுத்த முதல் பா¢சுக் கதைய மட்டும் நீங்க படிச்சிட்டுத் தோ;ந்து எடுத்துட்டிங்கன்னா, முதல் பா¢சுக் கதையோட தாவு தீர்ந்துடும். இரண்டாவது, மூணாவதை ஒருபார்வை நீங்க பார்த்துட்டு ஓகே சொல்லணும். அது போதும்."

"எவ்வளவு பக்கம் வரது?"

"இருபது பக்கம். foolscap பேப்பர்ல."

"அய்யோ. இருபதா. முடியாது போலிருக்கே."

"அதுக்குதான் ஒரு ஐடியா செஞ்சோம். கதையோட synopsis-ஐ மட்டும் ஒரு முழுப் பக்கம் வர்ர மாதி¡¢ எழுதிட்டு வந்துட்டோம். உங்க செளகா¢யத்துக் கோசரம். அஞ்சு நிமி~த்துல படிச்சிடலாம். கொஞ்சம் தயவு பண்ணுங்க. இன்னைக்கு ·பாரம் மெஷினுக்குப் போகுது."

"ஹீம். சா¢ கொடுங்க. இந்தாப்பா. அந்தக் கண்ணாடியை எடுத்துக் கொடு. அப்புறம் காரை வெளியல வை. கூட்டத்துக்குப் போகணும். இப்பவே லேட்டு."
உதவி ஆசி¡¢யர் கதையை நீட்ட -

oOo

தஞ்சாவூர் டவுன். கோயிலுக்குப் பின்னால் ஒரு அக்ரஹாரம். கிட்டத்தட்ட எல்லாமே பிராமணக் குடும்பங்கள். அக்ரஹாரம் முடிந்த உடனே உடனே ஓதுவார் தெரு. அங்கே சிற்சில வீடுகள். ராஜராஜ சோழனின் சபையில் இருந்த ஓதுவார்களுக்கு என்று கட்டப்பட்ட ஓட்டு வீடுகள். ரா.ரா. சோழனும் போய், ஓதுவார்களும் போய், இப்போது ஓடுகள் மட்டுமே. மரங்களை எல்லாம் சுற்றுப்புற மக்கள் கால கட்டத்தில் பிடுங்கிக் கொண்டு போய்விட, வீடுகளின் திண்ணைகள் மட்டும்தான் இப்போது. அந்தத் திண்ணைகள் தெருவுக்கு மறைவிடங்கள். ஒவ்வொரு திண்ணை மறைவிலும், தெருப் பிச்சைக்காரர்கள், தொழு நோய்க்காரர்கள், ¡¢க்ஷாத் தொழிலாளர்கள், என்று ஆக்ரமித்துக் கொண்டு, தடுப்புக்குக் கோணிப் படுதாவை கட்டிக் கொண்டு அவல வாழ்க்கை. தெருவின் இக்கரையில் இருந்து அக்கரை வரை விளக்கு வெளிச்சம் கிடையாது.

இருப்பதிலேயே கொஞ்சம் மறைவான திண்ணை. அதில் கனகம் என்ற ஒண்டிக் கட்டை. வயது 30க்கும் மேலே. உத்யோகம் உலகத்தின் ரொம்பப் பழைய உத்யோகம். விபச்சாரம். கூலி வேலை ஆட்கள். குறைந்த வருவாய்க்காரர்கள். உழைப்பாளிகள், ¡¢க்ஷாத் தொழிலாளிகள் ஆகியோர். இரவு பத்துக்கு மேல் இருட்டுத் தெருவில் நுழைந்து கனகத்துக்குப் போணி செய்து விட்டுப் போவார்கள். சில சமயம் நைட் டூட்டி போலீஸ்காரர்களும், தெருவின் இருட்டு அவர்களுக்கு எல்லாம் ரொம்ப செளகா¢யம்.

நகரசபைத் தேர்தல். அக்ரஹாரத் தெருவுக்கு ஓட்டு வாங்க வந்த வேட்பாளர்களிடம் (இப்போது கவுன்சிலர்) இருட்டுத் தெரு செளகா¢யமாக இருப்பதால், இரவு அந்த வழியே பஜாருக்குப் போக வேண்டி இருப்பதால், வேறு நிழலான கா¡¢யங்கள் நடப்பதால் அதை நிவர்த்தி செய்தால்தான் உமக்கு ஒட்டு. லைட்டைப் போடு. ஓட்டைப் போடுவோம். இல்லாவிட்டால் அக்ரஹாரம் தேர்தலைப் பகிஷ்கா¢க்கும் என்று மிரட்ட, கவுன்சிலர் மிரண்டு, மராமத்து மந்தி¡¢ வரை போய் உடனடி சாங்ஷன் வாங்கி, இக்கரையில் இருந்து அக்கரை வரை, சரம் சரமாக சோடியம் விளக்குகளை இரண்டே நாளில் போட்டு விடுகிறார். இருட்டுத் தெரு இப்போது வெளிச்ச வெள்ளத்தில்.
எல்லோருக்கும் சந்தோஷம். கனகத்தைத் தவிர. வெளிச்சம் வந்து விட்டதால், ஒரு வாடிக்கை கூட வருவதில்லை. முதல் நாள் பட்டினி. இரண்டாவது நாள் கொலைப் பட்டினி. மூணாவது நாள் வழக்கமாக வருகிற ஆள் வருகிறான். ஆனால் தாண்டிப் போகிறான். பசித்த மானுடம். மறைவுத் திண்ணையில் இருந்து வெளிப்பட்டு "யோவ்! இங்க வாய்யா. என்னய்யா ஆச்சு உனக்கு!" என்று வேஷ்டியைப் பிடித்து இழுக்க, "அய்யே. விடு. கசுமாலம். இவ்வளவு நாள் இருட்டு இருந்தது செளகா¢யம். இப்போ? தீப அலங்காரம் மாதி¡¢ லைட்டு வெளிச்சம். வெளிச்சத்தில் போய் இந்த வேலையைச் செய்வாங்களா என்ன? சீ. போ!" என்று தள்ளி விட்டுப் போகிறான். புழுதியில் விழுந்த கனகம், பசியுடன் எழுந்து, பசியுடன் சுதா¡¢த்து, கை நிறையத தூக்க முடியாத கற்களைத் தூக்கிக் கொண்டு, வா¢சைக்கிரமமாக, ஒவ்வொரு சோடியம் விளக்குகளாகத் துர் ஆங்காரத்துடன் உடைத்து நொறுக்க, தெரு முழுவதும்
கண்ணாடிச் சிதறல்கள். இருட்டுக் குதறல்கள்.

பத்து நிமிஷம் கழித்து, இருட்டுத் தெரு. மறைவுத் திண்ணை. அங்கே கனகம். கூடவே இயக்கத்தில் இருக்கிற ஒரு ஆணுடல். அவள் தலைமாட்டருகே கசங்கின ரூபாய்கள். பி¡¢யாணிப் பொடடலங்கள்.

oOo

தலைப்பு - மெர்கு¡¢.

"இதோட ஒ¡¢ஜினல் ஸ்கி¡¢ப்ட் இருக்காய்யா?"

"இதோ. இருக்கு. 20 பக்கங்க."

வாங்கி முழுவதும் படித்தார். அரை மணி ஆயிற்று.

ஒரு நிமிஷம் யாரும் பேசவில்லை. அதி பயங்கர மெளனம்.

"இதுதான் முதல் பா¢சுக்கா?"

"ஆமாங்க."

"வெகு லட்சணம்." என்றார் கோபமாக. கோபம் கூட அல்ல - பாம்புச் சீறல்.

"ஏங்க?" என்று பதறினார் உதவி ஆசி¡¢யர்.

"நல்ல தீம். ஒவ்வொரு பாராவுக்கும் ஒரு பவர்புல் ஸ்ட்ரோக் இருக்கு. நேடிவிடி உண்டு. வொ¢குட் ரீடபிலிட்டி. சமூகத்தில் இருக்கிற பசிப் பிரச்சினையை ழுநெந ட¨நெ one line message-ல் சொல்ற ரொம்ப நல்ல ப்ளாட். அதனாலதான்."

"நீங்க சொன்னதெல்லாம் இருக்கய்யா. ஒத்துக்கறேன். முக்கியமான ஒரு drawback-ஐ எல்லோரும் மறந்துட்டிங்களே. தொடர்ந்து வெளிச்சம் இல்லேன்னா அங்கெல்லாம் விபசாரம் நடத்த வசதி இருக்கும்னு ஒரு வழிய நாம கண்டு பிடிச்சு, அதுக்கு நாமே பா¢சு கொடுக்கற மாதி¡¢ ஆச்சு!" என்றார்.

ஒருவரும் பேசவில்லை.

"இதுக்குப் பா¢சு கொடுத்தா ப்ராஸ்டிட்யூஷனை நாம என்கரேஜ் பண்ற மாதி¡¢ ஆச்சே."

"அது கூடச் சா¢தான்." என்றான் அமானு வென்ஸஸ்.

"அப்புறம் ஊர்ல இருக்கிற லைட்டை எல்லாம் ஒடச்சு ஊரே விபசாரம் ஆக வழியாயிடுமேய்யா. ரொம்ப செளகா¢யம். தொடர்ந்து அவரே. அவளுக எல்லாம் இதைப் படிச்சா, அப்புறம் ஊர்ல, தெருவுல ஒரு விளக்குக் கூட இருக்காது. தொ¢யுமா?"

"பொதுவா, தேவிடியாளுக வாரப் பத்தி¡¢கை எல்லாம் படிக்கறதில்லீங்க!" என்றான் அனானுவென்ஸஸ்.

"யோவ் முண்டம். வாயை மூடு. ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். என்ன நான் சொல்றது, உதவி ஆசி¡¢யரே?"

அரை மனசுடன், "ஒரு விதத்துல சொல்றது சா¢தாங்க."

¨தா¢யம் வந்த மற்றவர்கள், "அய்யா சொல்றது சா¢தான்" என்று ஒப்புவித்தார்கள்.

"விபசாரத்தை ஊக்குவிக்கறதுக்கு வழி காட்டறதுக்கு ஒரு கதையைத் தோ;ந்து எடுத்து அதுக்குப் பா¢சு கொடுக்க நான்தான் கெடச்சனா? என்ன இதில மாட்ட வைக்கணும்னு. why did you choose me?"

உதவி ஆசி¡¢யர் பதறி, "அய்யா என்ன பேசறீங்க? நாங்க அப்படி நினைப்பமோ? இப்படி சபைல நிங்க சொல்லலாமா? வேணும்னா இதை ¡¢ஜக்ட் செய்துடறம்."
"செஞ்சிடுங்க"

"செஞ்சாச்சு. ஆனால் பா¢சு யாருக்குத் தர்ரது?"

"இரண்டாவதை முதல் பா¢சாவும், மூணாவதை இரண்டாவது பா¢சாவும் மாத்திடுங்க."

"ஆச்சு. ஆனால் மூணாவது பா¢சுக்கு?"

"அந்த இருபதில, சுமாரா இருக்கிறதை எடுத்து செலக்ட் செஞ்சிடுங்க."

"சா¢ங்க. இதை என்ன பண்றது?"

"எதை?"

"மெர்கு¡¢யை?"

"திருப்பி அனுப்பிடுங்க. போதிய தபால் தலை ஒட்டி இருக்கா?"


"ஒட்டி இருக்கு. அனுப்பிடறோம்."

"அப்ப ரொம்ப சந்தோஷம். பா¢சு பெற்றவர்களுக்கு என் ஆசிர்வாதங்கள்."
எழுந்தார். கூட்டமும் எழுந்தது. உதவி ஆசி¡¢யர் ஒரு கவரை நீட்டி "இதுல ஒரு செக் இருக்கு. நடுவர்க்கு நாங்க கொடுக்கறது வழக்கம்."

"இதெல்லாம் எதுக்கு? சா¢. யோவ் வாங்கிக்கய்யா!" என்றதும் அவானுவென்ஸஸ் வாங்கிக் கொண்டான்.

கும்பிடு போட்ட கும்பல் அம்பாசிடா¢ல் ஏறிற்று. தெருவில் சா¢ந்து இடதில் கண் மறைந்ததும். இலக்கியப் பித்தன் நுழைந்தார். "எங்கேய்யா செக்கு?
தொகை என்ன எழுதி இருக்கு?"

சொன்னான்.

"சைக்கிளை எடுத்துட்டு ஓடு. பாங்கில உடனே உடனே போட்டுட்டு மெதுவா வா. இப்பவே க்ளியரன்ஸீக்குப் போயிரட்டும்."

சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடினான்.

உள்ளே நுழைந்தார். அலமேலு வருகையை எதிர்பார்த்து இருந்தாள். உள்ளே வந்து எதி¡¢ல் உட்கார்ந்து கொண்டு, 'இப்படி வா', என்றார் போல்டு லெட்டா¢ல்.
வந்தவள் உடையைத் தளர்த்திக் கொண்டாள். சரீரம் சாய்ந்ததும், தகாத இடத்தைத் தொட்டு, "காலைல இருந்து ஒரே இலக்கிய ஹிம்சை. உன்னை வாசனை பார்க்கக்கூட நேரமில்லே. ஸாடின் பாவடைதானே போட்டுட்டு இருக்கே?" என்றார்.

"பாவாடை இருக்கட்டும். கதை நல்லா இல்லையா, என்ன?"

"அருமையான கதை. படு Readability. ஒரு Short Story-க்கு வேண்டிய சா¢யான ·பார்ம் இருக்கு.புதுமைப் பித்தனுக்கு அப்புறம் தவக்களைப் பாய்ச்சல் ஸ்டைலை இருபது வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் படிச்சேன். செகாவியன் டச் இருந்தது!" என்றார்.

"அப்புறம் ஏன் ஒரு ஸீன் க்¡¢யேட் பண்ணினது?"

"நான் ப்ரைஸ் கொடுத்தால் பையன் click ஆயிடுவான். Race with the devil-னு ஒரு வாசகம் இங்கிலீஷ்ல இருக்கு. அந்தத் தப்பை நான் ஏன் செய்யணும்? இல்லையா?" என்றார்.

"அதுகூடச் சர்தான்டா!" என்றாள் அலமேலு.

oOo

4 comments:

bogan said...

கடவுளே!என்ன ஒரு அங்கதம்!அலர்மேலு அவள் அந்தப் புரத்துக்குப் போவதும் ஒரு பக்க கதை எழுத ஜனதா கட்சியை விடஅதிக ஆள் இருப்பதும் ... இப்படி ஒரு எழுத்தாளனை புறக்கணித்திருக்கிறோம் என்று நினைக்க நினைக்க ஆறவே இல்லை

Anonymous said...

NICE STORY.WILL YOU PLEASE WRITE ABOUT MR.RAVICHANDRAN A LITTLE MORE?
I MEAN WHAT MR.SUJATHA SAYS ABOUT RAVICHANDRAN IN DETAILED MANNER.

கார்த்தி said...

இந்த கதையில் வரும் சிறுகதை போல தஞ்சை ப்ரகாஷ் ஒரு கதை எழுதி உள்ளார்..is it coincendence or delibrate?

Sivakumar said...

ஜெயகாந்தனை வாரியிருப்பது போலப் படுகிறது!