
எந்தவொரு 'அரசு இயந்திரங்கள்' இயங்கும் கட்டிடத்திற்குள் நுழைய நேரும் போதெல்லாம் நான் 'எல்லாம் வல்ல இயற்கையை' பலமாக வேண்டிக் கொள்வேன், 'உலகத்தினுள்ள அனைத்து பொறுமையையும் எனக்குக் கொடு' என்று. சித்தர்கள் உபதேசம் செய்தால் கூட கேட்காத நாம் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு கண்களில் பரிதாபத்தை தேக்கிக் கொண்டு நிற்கக்கூடியது எதுவென்றால் அது அரசு அதிகாரிகளின் மேஜைகளின் முன்னால்தான். 'ஒரு கலைஞன் பிறக்கிறானா அல்லது உருவாகிறானா' என்கிற விவாதத்தைப் போல 'அரசு ஊழியர்களையும் அந்த வரிசையில் யாராவது சேர்த்துக் கொண்டால் தேவலை. 'உங்களை ஆளப்பிறந்தவர்கள் நாங்கள்' என்று பிறக்கும் போதே அந்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் போல் அவர்கள் அலட்சியமாய் நம்மை அணுகும் போது இதுதான் தோன்றுகிறது. ஒரக்கண்ணால் நம்மைப் பார்த்துவிட்டு பைலில் செயற்கையாக மூழ்கிப் போகும் 'ஆபிசரின்' முன்னால் தவம் செய்யும் ரிஷிகளைப் போல ஆடாமல் அசையாமல் நிற்க நேரும் போது நம்முடைய மனித ஜென்மத்தின் மீதே கோபம் வருகிறது. ஒரு கால்குலேட்டருக்கு இருக்கும் மூளை கூட இல்லாத அந்த ...... களுக்கு நாம் வந்திருக்கும் காரணத்தைச் சொல்லி விளக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுவது ஒருபக்கம் என்றால் நாம் எடுத்துச் சென்றிருக்கும் படிவம் முறையாக நிரப்பப்படாததற்காக அவர்கள் சொல்லும் salt பெறாத காரணங்கள் இன்னும் நம் எரிச்சலை அதிகரிக்கச் செய்கின்றன.
brandband connection ஒன்றிற்காக சலுகை விளம்பரம் ஒன்றை பத்திரிகையில் பார்த்து விண்ணப்பித்ததில் சிலபல வரலாற்று நிகழ்வுகளுக்குப் பிறகு இணைப்பு வந்தது. ஆனால் அதற்கான bill வந்த போது விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த சலுகை கட்டணச்சீட்டில் இல்லாமல் இருந்தது. (அடடா எப்படி ஒரு oxymoron... இல்லாமல் இருந்தது). துரைமார்களுக்கு தொலைபேசி கேட்டதில் நேராக வரவேண்டும் என்று உத்தரவு கொடுத்துவிட்டார்கள். இணையச் சேவை வழங்கும் அவர்கள் இந்த 'துக்கடா சமாச்சாரத்தை" மின்னஞ்சலிலேயே முடித்துவிடலாம். அப்படியெல்லாம் சுலபமாக முடித்துவிட்டால் அவர்களைப் பற்றின பிம்பம் என்னாவது? அரசு ஊழியர்களா, கொக்கா? நேராகப் போய் முரட்டுக் கணவனிடம் புலம்புகிற அப்பாவி மனைவி இறைஞ்சுகிற குரலில் இதைப் பற்றின புகாரைப் பற்றிச் சொன்ன போது அந்த மகானுபாவர் கேட்டது. "அந்த விளம்பரம் எப்ப நாங்க போட்டிருக்கோம். அதோட காப்பி வெச்சிருக்கீங்களா?" அதாவது அவர்கள் வெளியிட்ட விளம்பரத்தை அவர்களுக்கே நாம் நிரூபிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். வேறு வழியேயில்லை. அதைத் தேடிக் கண்டுபிடித்து மறுபடியும் போக வேண்டியதாயிருந்தது.
()
இது பரவாயில்லை. சில மாதங்களுக்கு முன்பு நடந்ததை உங்களிடம் 'அனத்தினால்'தான் மனசு ஆறும் போலிருக்கிறது. போதிய கல்வியறிவு அல்லாத ஒரு உறவினர் பெண்மணி (கையெழுத்து போடுவதை மாத்திரம் ஓவியம் வரைவதைப் போல கற்றுக் கொண்டிருக்கிறார்) துணைக்காக வங்கிக்கு அழைத்தார். படித்தவர்களுக்கே அதோகதி என்னும் போது அவ்வளவாக படிக்காதவர்களை ஆடுமாடுகளைப் போல விரட்டுவார்கள் என்கிற அவரின் முன்அனுபவம் காரணமாக இருந்திருக்கலாம். Fixed deposit ஒன்றை உடைத்து பணத்தை எடுக்க வேண்டும். அவசரத்தேவை. அவரது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பணம் செலுத்த வேண்டும். அதற்கு என்னையும் ஒரு 'ஆள்' என்று நினைத்து அழைத்திருந்தார்.
சம்பந்தப்பட்ட மேஜையில் இருந்தவர் டெபாசிட் ரசீதை ஓரக்கண்ணால் பார்த்து 'ஆசி' அருளுவதற்கே அரைமணி நேரம் ஆயிற்று. ஆனால் மனிதர் சாவகாசமாக ஜ்வால்யமான புன்னகையுடன் ஜார்ஜ்புஷ் போல அந்த வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். "நீங்க பணத்தை எடுக்க முடியாது. உங்க அக்கவுண்டு inactive-வா இருக்கு".
ஏன் என்று நாங்கள் பவ்யமாக வினவியதற்கு ரிசர்வ் வங்கியின் சமீபத்திய வழிகாட்டுதலின் படி KYC (Know Your Customer) என்கிற வழிமுறை நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அதன்படி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் இருப்பை சான்றாதாரங்களுடன் நிருபித்தபின்தான் கணக்கை கையாள முடியும் என்றார். 'அதுசரி அய்யா. தற்போது இவருக்கு மிக அவசரமாக பணம் தேவைப்படுகிறது. இப்படி திடீரென நீங்கள் சொன்னால் எப்படி? ஏறக்குறைய தினமும் வங்கிக்கு வந்து போகிறவர்களுக்கு நீங்கள் சொல்வது ஒருவேளை தெரிந்திருக்கலாம். ஆனால் பிக்சட் டெபாசிட் போடுவதற்காகவே கணக்கு வைத்திருக்கும் இவர்களைப் போன்றவர்கள் எப்படி அறிவார்கள்? நீங்கள் ஒரு கடிதம் அனுப்பித் தெரிவித்திருக்கலாமே? எனில் முறையான ஆதாரங்களோடு நாங்கள் தயாராக வந்திருப்போமே?.. என்று பணம் தேவைப்படும் அவசர சூழ்நிலையையும் விளக்கி நான் கண்ணகி திரைப்படத்தில் வரும் கண்ணாம்பா மாதிரி கேள்வி கேட்டதில் ஆசாமி உயர் அதிகாரி இருந்த பக்கத்து மேஜையை காண்பித்தார். அவர் எடுக்க வேண்டிய தொகை எவ்வளவு என்பதை விசாரித்து விட்டு 20 ஆயிரத்திற்குள்தான் என்பதால் எடுத்துக் கொள்ளலாம் என்று பச்சைக் கொடி காட்டினார். ஆக.. பணத்தை எடுப்பதற்கு வழியிருந்தும் அவசர சூழ்நிலை தெரிந்திருந்தும் அதை இந்த ஆசாமி வெளிப்படுத்தாமல் நாங்கள் கெஞ்சிக் கூத்தாடிய பின்புதான் தம்முடைய மேலதிகாரியிடம் அனுப்புகிறார்.
சரி இந்த படலம் முடிந்ததே என்று சற்று நம்பிக்கையோடு அமர்ந்திருந்த போது 'ஆசி' தந்த ஆசாமி எங்களை கூப்பிட்டு பிக்சட் டிபாசிட்டை இடையில் எடுப்பதனால் வட்டியிழப்பு போக வரும் தொகையைச் சொல்லி கையெழுத்திடச் சொன்னார். அந்தச் சமயத்தில் பர்சன்டேஜ் கணக்கெல்லாம் பார்க்க விரும்பாமல் (பார்க்கத் தெரியாது என்பது வேறு சமாச்சாரம்) காண்பித்த இடத்தில் கையெழுத்திடச் சொல்லி பலியாடு போல் அமர்ந்திருந்தோம். எங்களின் காகிதங்கள் காசாளரின் வெற்று கேபினுள்ளே நீண்ட நேரமாக இருந்தது. விசாரித்ததில் அவர் சாப்பிடச் சென்றிருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது. (அப்போது மணி மதியம் 12.50). பக்கத்து கேபினுள் இருப்பவரை "நீங்கள் தரலாமே' என்று இறைஞ்சியதில் 'அமெளண்ட் சில்லறையா வருதுங்க. என்கிட்ட சில்லறை கிடையாது. வருவாரு. வெயிட் பண்ணுங்க' என்றார். 'அய்யோ, சார் சில்லறை எவ்வளவுண்ணு சொல்லுங்க. எங்கிட்ட இருந்தா தர்றேன். இல்ல.. வெளிய போய் மாத்திட்டு வர்றேன்' என்று இன்னொரு கூப்பாடு போட்டதில் முனகிக் கொண்டே சீட்டை தூக்கிப் பார்த்துவிட்டு யோசனையுடன் 'நாடி ஜோசியர்' மாதிரி என்¦ன்னவோ கணக்குகள் போட்டுப்பார்த்துவிட்டு இவர் பங்குக்கு இவர் டோனி பிளேர் மாதிரி இன்னொரு குண்டைப் போட்டார். 'இதுல போட்டிருக்கற அமெளண்ட் வர்றாது சார். தப்பா கால்குலேட் பண்ணியிருக்காங்க" என்றார். "அந்த அமெளண்ட்டுக்கு கையெழுத்துப் போட்டிருக்கோமே" என்று கேட்டதற்கு மனிதர் கேபினில் இருந்து விலகி 'அருளாசி' ஆசாமியிடம் கிசுகிசுத்தார். அவர் எங்களை அழைத்து "அவர் சொல்றது சரிதான். இவ்வளவுதான் வரும்.வாங்கிட்டுப் போங்க" என்றார், ஏதோ நாங்கள் கூலி வேலை செய்துவிட்டு 'அய்யா பாத்துக் கொடுப்பார்" என்று நிற்கிறதைப் போல.
இனிமேலும் என்னால் பொறுக்க முடியவில்லை. என்னுள் இருந்த நாகரிகமெல்லாம் தொலைந்து போய் பதின்மத்தில் பேசின பாஷையையெல்லாம் புதுப்பித்ததில் அவர்களும் கோஷ்டி சேர்ந்து எகிற ஆரம்பித்தார்கள். நான் உச்சக்கட்ட கோபத்துடன் கிளை மேலாளரைத் தேடியதில் அவர் 'எங்கோ' போயிருப்பதாக தகவல் கிடைத்தது. "ஏதோ ஒரு அமெளண்ட்டுக்கு கையெழுத்து வாங்கிட்டு, வேற ஏதோ அமெளண்டு தர்றதா சொன்னா என்னங்கய்யா அர்த்தம். வெளையாடறீங்களா, Ombudsman-ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன்'னு சத்தமிட்டு விட்டு ஏற்கெனவே போட்டிருந்த கையெழுத்தை அடித்துவிட்டு புதிதான தொகைக்கு கையெழுத்திடச் சொன்னேன். பாவம் அந்த உறவினர் பெண்மணி. நாங்கள் மாற்றி மாற்றிக் கத்திக் கொண்டிருந்ததில் வெளிறிப் போய் குற்றவுணர்வுடன் அமர்ந்திருந்தார்.
()
'வங்கியில் பணம் போடுகிறவர்களால்தான் தங்களுடைய பிழைப்பு ஓடுகிறது' என்கிற அடிப்படையைக் கூட வசதியாக மறந்து இப்படி வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கவும் அவமதிக்கவும் செய்கிற அரசு வங்கி ஊழியர்களைக் கண்டால் எரிச்சலாக வருகிறது. தனியார் வங்கிகளோடு போட்டி போடுகிற நெருக்கடியான சூழ்நிலை கூட இவர்களின் ஏகாதிபத்திய உணர்வை அடக்கவில்லையே என்றும் ஆச்சரியமாக இருக்கிறது. ஊதிய உயர்வு கேட்டு இவர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போதும் சாலையில் கோஷம் போடும் போதும் பொதுமக்களுக்கு ஏற்படும் வயிற்று எரிச்சல் gelusil mps-ல் கூட அடங்காது. இது ஓர் உதாரணம்தான். இம்மாதிரி பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களின் அலட்சியங்களினால் தினம் தினம் அசெளகரியப்படுகிற அல்லல்படுகிற மனிதர்களின் கதைகளை தொகுத்தால் இணையமே நிரம்பி வழியும்.
அரசுப்பணியில் இணைவதற்கு முன்னால் இவர்களும் இதே மாதிரியான அலைக்கழித்தலை சந்தித்தவர்கள்தானே, அப்புறம் ஏன் டிராகுலா கடித்த மாதிரி இவர்களும் டிராகுலாவாக மாறிப் போகிறார்கள் என்பது மாத்திரம் புரியவில்லை. (மிக அபூர்வமாக மென்மையாக முறையாக தம்மை அணுகும் பொதுமக்களை எதிர்கொள்ளும் அரசு ஊழியர்களைப் பற்றியும் இங்கு சொல்லியாக வேண்டும்). ஒருவேளை நானும் அடித்துப்பிடித்து ஒரு அரசு ஊழியனாக ஆகியிருந்தால் இந்த 'ஜோதியில்'தான் கலந்திருப்பேனோ என்று என் மேலேயே சந்தேகம் வருகிறது. இதை வாசிக்க நேரும் அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் உடனே என் மீது பாயாமல் இதற்கான அவர்கள் பார்வையையும் தீர்வையும் பரிந்துரைத்தால் மகிழ்வேன்.
suresh kannan
About Me
- சுரேஷ் கண்ணன்
- Chennai, Tamil Nadu, India
- மின்னஞ்சல்: sureshkannan2005@gmail.com
Blog Archive
-
▼
2009
(56)
-
►
June
(25)
- சாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்
- சாக்லேட்
- சிறுபத்திரிகை எழுத்தாளனாக ஆக 10 சிறப்பு குறுக்கு வ...
- சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூறாவளி
- 'பட்டர்மில்க்'ன்னா மோரா?
- கருணாநிதி போட்டுத் தராத ஆட்டோகிராஃப்
- தமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா? ஒரு சர்வே
- அற்புதமானதொரு ஆஸ்திரேலிய சினிமா
- கமல் தந்த அதிர்ச்சி
- கேள்வி பதிலும் சுயபுராணமும்
- சரோஜாதேவி புத்தகமாவது வேண்டும்...
- ஹிட்ச்காக்கின் அட்டகாசமானதொரு திரில்லர்
- புதுச்சட்டை
- லட்ச ரூபாய் நடிகை
- ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினது சிறந்ததா?
- கொஞ்ச நேரம் சும்மா இரேண்டா..
- நான்தான் 'தருமி' நாகேஷ்
- விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்
- குழந்தைமையை மறுக்காதீர்கள்
- சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி
- வாங்க இலவசமாக மசாலா திரைப்படங்களை பார்க்கலாம்
- "பசங்க" - இன்னுமா பார்க்கலை?
- கிழக்கு பதிப்பகம் குறித்து ஏன் அஞ்ச வேண்டும்?
- என்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
- எழுத்தாளர் கமலாதாஸ் மறைவு
-
►
June
(25)
Labels
- சினிமா (60)
- குறிப்புகள் (43)
- பொது (33)
- அனுபவம் (29)
- புத்தகம் (22)
- எழுத்தாளர்கள் (13)
- அயல்சினிமா (10)
- பொது (8)
- நகைச்சுவை (7)
- மொக்கை (7)
- பகடி (6)
- அயல் சினிமா (5)
- சுஜாதா (4)
- ரஜினி (4)
- அரசியல் (3)
- இந்திசினிமா (3)
- உபயோகமற்ற குறிப்புகள் (3)
- சமூகம் (3)
- ஜெயமோகன் (3)
- நிகழ்வு (3)
- வன்முறை (3)
- அஞ்சலி (2)
- இலக்கியம் (2)
- சாரு (2)
- பதிவர் வட்டம் (2)
- மீள்பதிவு (2)
- முற்போக்கு (2)
- வாசிப்பனுபவம் (2)
- அம்பை (1)
- அரசு ஊழியர்கள் (1)
- அருண் வைத்தியநாதன் (1)
- ஆட்டோகிராஃப் (1)
- ஆஸ்கர் விருது (1)
- இரானிய சினிமா (1)
- இலங்கை பிரச்சினை (1)
- இளையராஜா (1)
- எண்ணம் (1)
- எஸ்கொபெர் (1)
- ஏ.ஆர். ரஹ்மான் (1)
- கற்பிதம் (1)
- காஞ்சிவரம் (1)
- குசேலன் (1)
- கே.பி.சுந்தராம்பாள் (1)
- கேள்விமீமீ (1)
- கோவிந்த் நிஹ்லானி (1)
- சினிமா விமர்சனம் (1)
- சிறுகதை (1)
- சுப்ரமணியபுரம் (1)
- சூப்பர் சிங்கர் (1)
- டென்சல் வாஷிங்டன் (1)
- தோப்பில் முஹம்மது மீரான் (1)
- நவீன தீண்டாமை (1)
- நாகேஷ் (1)
- நான் கடவுள் (1)
- நூலகம் (1)
- நேர்காணல் (1)
- பதிப்பகம் (1)
- பாடல் சர்வே (1)
- பியர் (1)
- பிரகாஷ்ராஜ் (1)
- பிரியாணி (1)
- பொதுப்புத்தி (1)
- மஜித் மஜிதி (1)
- ரியாலிட்டி ஷோ (1)
- வடிவேலு (1)
- வார்த்தை (1)
- விமர்சனம் (1)
- விருது (1)
- ஷகிலா (1)
- ஹிட்ச்காக் (1)
முன்முடிவுகளின் அடிப்படையிலேயே நாம் பெரும்பான்மையான நேரங்களில் இயங்குகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நோக்கில் அனுபவம் என்பது இறக்கி வைக்க முடியாத சுமை. சில நபர்களை நமக்கு பார்த்த கணத்திலேயே பிடிக்காமற் போவதும் சிலரை பார்க்காமலேயே பிடித்துப் போவதும் முன்முடிவுகளின் அடிப்படையில்தான். ரயில் பயணத்தின் போது எதிரே அமரப் போகின்ற பயணி, சிடுமூஞ்சியாகவும் அவருடைய பெட்டிகளை வைத்துக் கொள்ள நம்முடைய இடத்தை ஆக்ரமிக்கப் போகிறவர் என்பதான கற்பனைகளுடனும் அதற்குண்டான ஜாக்கிரதை முன்னேற்பாடுகளுடனும் அமர்ந்திருக்கிறோம். வெளியே வரும் போது ஆட்டோகாரர் நிச்சயம் நம்மை ஏமாற்ற முயல்வார் என்ற முன்முடிவுடன் அவர் கேட்பதிலிருந்து ஐம்பது சதவீதத்தைக் குறைத்து பேரம் பேசுகிறோம். உறவுகளில் முன்முடிவோடு தவறாக பெரிதும் அணுகப்படுவது 'சித்தி' என்கிற உறவுமுறை. சித்தி என்றாலே அவர் தன்னுடைய கணவரின் குழந்தைகளை நிச்சயம் சரியாக வளர்க்காமல் கொடுமைப்படுத்துவார் என்பது பொதுவான எண்ணம்.
என்னுடைய மூத்த சகோதரருக்கு திருமணமாகியிருந்த சமயம். அதுவரை எங்களுக்குள் நாங்கள் அடித்துக் கொண்டும் கூடிக் கொண்டும் விரோதித்துக் கொண்டும் நட்பு பாராட்டிக் கொண்டும் இருந்தோம். அதுவரை இருந்த சூழ்நிலையைக் கலைத்துக் கொண்டு புதிதாக ஒரு அந்நியர் எங்கள் வீட்டில் நுழைகிறார். என்னுடைய பதின்மத்தில் இருந்த அந்த வயதுக்கேயுரிய அறியா வன்மத்தோடு 'அண்ணி' என்கிற அந்த உறவைப் புரிந்து கொள்ள முயலாமலேயே வெறுக்கவும் புறக்கணிக்கவும் செய்தேன். அவர் சாப்பாடு கொண்டு வந்தால் சாப்பிட மாட்டேன்; எதிரில் வந்தால் வெறுப்போடு திரும்பிச் செல்வேன். அவரின் நல்ல குணத்தைப் புரிந்து கொள்ள ஒரு மாதம் பிடித்தது. 'புதிதாக வரப்போகிறவள்' தன் மகனை பிரித்துவிடுவாளோ என்கிற வழக்கமான possessiveness குணத்தை வெளிப்படுத்தும் விதமாக என் அம்மா ஒரு முன்முடிவுடன் அண்ணனின் திருமணத்திற்கு முன்பிருந்தே எங்களிடையே உரையாடிக் கொண்டிருந்தது எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று பிறகு உணர்ந்தேன். உறவுகளை முன்முடிவுடன் அணுகக்கூடாது என்கிற படிப்பினையை இது அளித்தது.
இரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதியின் திரைப்படமான 'PEDAR' (தந்தை என்று பொருள்) இதைத்தான் பிரதானமாக சொல்வதாக எனக்குத் தோன்றுகிறது.
ஒரு விபத்தில் தன்னுடைய தந்தையை இழந்த சிறுவனான Mehrollah பொருளாதாரக் காரணங்களுக்காக கிராமத்திலிருந்து நகரத்திற்கு சம்பாதிக்கச் செல்கிறான். பணியிடத்தில் விடுமுறையைப் பெற்றுக் கொண்டு அம்மாவிற்கு, தங்கைகளுக்கு என்று ஒவ்வொரு பொருளாக தேடி வாங்கி ஊருக்குத் திரும்பும் போது தன்னுடைய பால்ய நண்பனின் மூலம் அந்த அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அவளுடைய அம்மா ஒரு போலீஸ்காரனை திருமணம் செய்து கொண்டு வேறொரு வீட்டில் வசிக்கிறார். "அந்த போலீஸ்காரன் ரொம்ப நல்லவனாம். உங்க அம்மா அதிர்ஷ்டம் செஞ்சவங்கன்னு ஊருக்குள்ள பேசிக்கறாங்க". கேட்ட மாத்திரத்திலேயே முகந் தெரியாத அந்த போலீஸ்காரனின் மீதும் அதற்குக் காரணமாகியிருக்கிற அம்மாவின் மீதும் ஆத்திரமும் வன்மமும் பெருகுகிறது மெஹ்ருல்லாவிற்கு. தான் வாங்கி வந்த பொருட்களை அவர்கள் வீட்டு வாசலில் எறிந்து விட்டு அம்மாவையும் ஆத்திரப்பார்வையுடன் முறைத்துவிட்டு தன்னுடைய பழைய வீட்டில் தங்குகிறான். எப்படியாவது அந்த போலீஸ்காரனை நிம்மதியிழக்கச் செய்ய வேண்டும் என்பதே அவனுடைய பிரதான நோக்கமாயிருக்கிறது.
நடுஇரவில் அவர்கள் வீட்டின் ஜன்னலை கல்லெறிந்து உடைக்கிறான். தன்னுடைய தங்கைகளை யாருக்கும் தெரியாமல் கூட்டி அழைத்து வந்து அம்மாவை பதைக்கச் செய்கிறான். தன்னுடைய புது தகப்பனை வழியில் முறைத்து 'தாயின் மருத்துச் செலவிற்கான' பணத்தை விட்டெறிகிறான். அவனுடைய அம்மா தன்னுடைய ஆதரவற்ற நிலையை எடுத்துச் சொல்லிக் கதறுவதை ஏற்காமல் புறக்கணிக்கிறான். "குடும்பத்திற்கு வேண்டிய பணத்தைத்தான் நான் சம்பாதிக்கப் போயிருந்தேன். நீ எதுக்காக இந்த ஆள கல்யாணம் செஞ்சிக்கிட்ட" என்று ஆணில்லாமல் ஒரு பெண் எதிர்கொள்ள சங்கடங்களையெல்லாம் அறிந்திருக்க முடியாத பால்யத்த்தின் அறியாமையுடன் எதிர்க்கேள்வி கேட்கிறான்.
ஒரு விபத்தில் சுவற்றின் மேலேயிருந்து கீழே விழுந்து சுவாதீனமின்றி கிடக்கும் மெஹ்ருல்லாவை தங்களுடைய பராமரிப்பில் வைத்து கவனிக்கின்றனர் அவனுடைய அம்மாவும் புதுதகப்பனும். தன்னுடைய இருப்பு அவனுக்கு சங்கடத்தை தரக்கூடாது என்பதற்காகவே பணியிடத்திலேயே தற்காலிமாக தங்கிக் கொள்கிறார் புதுதகப்பன். இவை எதுவும் மெஹ்ருல்லாவின் வன்மத்தை தேயச் செய்யவில்லை. போலீஸ்கார புதுதகப்பனின் துப்பாக்கியை களவாடிக் கொண்டு தன்னுடைய பால்ய நண்பனுடன் நகரத்திற்கு பறக்கிறான். அவனைத் தேடி கோபத்துடன் போலீஸ்காரரும் நகரத்திற்குச் செல்கிறார். நகரத்தில் ஜாலியாக சுற்றித்திரியும் அவர்களை பெருமுயற்சிக்குப் பின் துரத்திப்பிடித்து நண்பனை பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு மெஹ்ருல்லாவை கைவிலங்கிட்டு தன்னுடைய பைக்கிலேயே அழைத்து வருகிறார். வழியெங்கும் பிடிவாதமான மெளனத்துடன் பயணிக்கிறான் மெஹ்ருல்லா. "எத்தன திருட்டுப் பசங்கள பாத்திருப்பேன். எங்கிட்டயே உன் போக்கிரித்தனத்தை காட்டறியா" என்று அவனைத் திட்டிக் கொண்டே வருகிறார் போலீஸ்காரர்.
ஒரு சூழ்நிலையில் அவரிடமிருந்து வண்டியுடன் தப்பித்துவிடுகிறான் மெஹ்ருல்லா. ஆனால் இது போல் பல திருடர்களை பார்த்து அனுபவமுள்ள அந்த போலீஸ்காரர் மலையை சுற்றிவந்து பாதையில் தடையை ஏற்படுத்தி வைக்கிறார். இதை எதிர்பார்க்காத மெஹ்ருல்லா வண்டியுடன் கீழே விழுந்து திரும்பவும் மாட்டிக் கொள்கிறான். திரும்பவும் கைவிலங்கு மாட்டி அழைத்து வருகிறார். இரவு ஒரிடத்தில் தங்குகிறார்கள். அவர் தரும் உணவைப் புறக்கணிக்கிறான் மெஹ்ருல்லா. உறக்கத்தின் இடையில் தப்பிக்க முடியுமா என்று பார்க்கிறான். ஆனால் பயங்கர இருட்டில் ஓநாய்களின் ஊளையோசை அவனைத் தடுக்கிறது. இதை நன்றாக அறியும் போலீஸ்காரர் நிம்மதியாக உறங்குகிறார். திரும்பவுமான பயணத்தில் வண்டி பழுதாகி பாலைவனத்தின் நடுவிலேயே நின்றுவிடுகிறது. பழுதைச்சரிசெய்யும் எந்த முயற்சியும் பலனளிக்க வில்லை. எரிச்சலின் உச்சியில் மெஹ்ருல்லாவை போட்டுச் சாத்தியெடுக்கிறார். பின்பு அவனை கைவிலங்கிட்டு கால்நடையாகவே அந்த பாலைவனத்தை கடக்க முயற்சிக்கிறார். தீடீரென்று ஏற்படும் பாலைவனப் புயல் இருவரையும் அலைக்கழிக்கிறது. தன்னையும் மெஹ்ருல்லாவையும் பாதுகாத்துக் கொள்ள பெருமுயற்சியெடுகிறார். புயல் ஓய்ந்து மறுபடியும் நடக்க ஆரம்பிக்கும் போது வயதான அந்த போலீஸ்காரரால் ஒரு நிலைக்கு மேல் நடக்க முடியவில்லை. அதீதமான தாகமும் களைப்பும் கண்தெரியுமளவிற்கு நீளும் மணற்பரப்பும் உயிர்பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. கண்ணீருடன் தன்னை அங்கேயே விட்டுவிட்டு மெஹ்ருல்லாவை போகச் சொல்கிறார்.
கடுமையானவராக தெரிந்தாலும் அவரிடமிருந்து அவ்வப்போது கசியும் அன்பை ஓரளவிற்கு புரிந்து கொண்டிருக்கும் மெஹ்ருல்லா இந்த உச்சநிலையில் அவரின் அன்பை முழுமையாக தெரிந்து கொள்கிறான். நினைவின்றிக் கிடக்கும் அவரை மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அருகிலிருக்கும் ஒரு எதிர்பாராத ஓடையின் குளிர்ச்சியில் வந்து கிடத்துவதுடன் நிறைகிறது திரைப்படம்.
()
பொதுவாக இரானியத் திரைப்படங்களின் உருவாக்கமும் கதை சொல்லும் விதமும் அதன் நிலப்பரப்பும் என் மனதிற்கு மிக நெருக்கமாக இருப்பதைப் பார்க்கிறேன். இதுவும் அவ்வாறே. மஜித் மஜிதி இந்தத் திரைப்படத்தின் மூலம் எந்தவித கோணங்கித்தனமான உத்திகளுமில்லாமல் நேரடியாக பார்வையாளனிடம் உரையாடுகிறார். இந்தப் படத்தின் இரண்டே இரண்டு பிரதான பாத்திரங்களான போலீஸ்காரர் மற்றும் அந்த பதின்ம வயதுச்சிறுவன் ஆகிய இரண்டு பாத்திரங்களும் மிகத் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளன. போலீஸ்காரர் மெஹ்ருல்லாவை கருணையோடு அணுகினாலும் திரும்பத் திரும்ப அவனின் வன்மமான செயல்கள் வெளிப்படும் போது ஆத்திரமும் கோபமும் அடைந்து அதே வன்மம் அவருக்குள்ளும் பரவுவது இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
நம்முடைய தமிழ்த் திரைப்படங்களின் பாத்திரங்கள் நீண்ட காலமாகவே கருப்பு-வெள்ளைத்தனத்துடனே உருவாக்கப்படுகின்றன. நாயகன் எலலா விதக் கல்யாண குணங்களுடன அதீத நல்லவனாகவும் சித்தரிக்கப்படும் வேளையில், வில்லன் குடும்பம் குட்டி என்ற எந்தக் கருமாந்திரங்களுமில்லாமல் எப்போதும் மது, மங்கைகளுடன் உல்லாசபுரி நாயகனாகவும் அதீத கொடுமைக்காரனாகவுமே சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். (தங்கத்தையோ, போதைப்பொருளையோ கைமாற்றின 'டீல்' வெற்றிகரமாக முடிந்தவுடன் 'என்ன வெறும் தண்ணிதானா என்பார் விருந்தாளி. வில்லன் புன்னகையுடன் கையைத் தட்டினவுடன் இதற்காகவே காத்திருந்த, எந்தெந்த பாகங்கள் தெரியவேண்டுமோ அதற்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட விநோதமான உடையுடன் இரட்டை அர்த்தப்பாடலுடன் வருவார் கவர்ச்சி நடிகை). அவ்வாறில்லாமல் பயபக்தியாக சாமி கும்பிடுகிற ஒரு முதியவரை காட்டும் அறிமுகக் காட்சியுடன் இயல்பான வில்லனை காட்டிய படம் மணிரத்னத்தின் 'பகல் நிலவு' என்று நினைக்கிறேன்.
இந்தப் படம் எனக்கு உணர்த்திய இன்னொரு செய்தி, ஒரே சூழ்நிலையில் திரும்பத் திரும்ப வாழ நேரும் மனிதர்களுக்குள் நீடிக்கும் முரண்கள், நீண்ட பயணங்களின் போது அது தரும் இனிய அனுபவங்களால் புகையாய் மறைந்து போவது. 'காப்பி போட்டாச்சா' என்பது போன்றவற்றிற்கு மாத்திரம் வீட்டில் வாயைத் திறக்கும் சிடுமூஞ்சி அப்பா, ரயில் பயணத்தின் போது கொய்யாப் பழம் விற்கும் சிறுமியின் விற்பனை சாதுர்யத்தை நினைத்து வாய்விட்டு சிரிப்பதை பார்க்கும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். சமையலறையையும் அம்மாவையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அங்கேயே புழங்கிக் கொண்டிருக்கும் எரிச்சலுடன் பதிலளிக்கும் அந்த ஜீவன் அடக்க மாட்டாத மகிழ்ச்சியுடன் தன் உறவினர் தோழியுடன் திருமண வீட்டில் உரையாடிக் கொண்டிருப்பதைக் காணும் போது இன்னும் ஆச்சரியம் நீளும். பயணங்களை நம்முடைய தொன்மையான சம்பிரதாயங்களுடன் பின்னிப் பிணைக்க வைத்திருப்பதின் காரணம் இதுவாகத்தானிருக்க வேண்டும். அதுவரை தன்னுடைய புதுதகப்பனிடம் முரண் கொண்டிருக்கும் மெஹ்ருல்லா பயணங்களின் இடையில் ஏற்படும் உயிர்போகும் சிக்கலான தருணத்தில் அவரின் அன்பைப் புரிந்து கொள்கிறான்.
போலீஸ்காரராக நடித்திருக்கும் Mohammad Kasebi தொழில்முறை நாடக நடிகர் மாத்திரமல்லாது இயக்குநரும் ஆவார். Hassan Sadeghi மெஹ்ருல்லா என்கிற சிறுவனாக மிகத்திறமையான முகபாவங்களுடன் தன்னுடைய பங்களிப்பை அளித்திருக்கிறான். மெஹ்ருல்லாவின் நண்பனாக வரும் சிறுவனின் துணைப்பாத்திரமும் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் வறுமையில் உழன்று கொண்டிருக்கும் அவனுக்கு 2000 டோமன் (ரியால்) பணத்தை சம்பாதிப்பதே கனவெல்லையாக இருக்கிறது. இதற்காக மெஹ்ருல்லாவை தன்னையும் நகரத்திற்கு அழைத்துப் போகச் சொல்லி நச்சரித்துக் கொண்டேயிருக்கிறான். இதற்காகவே மெஹ்ருல்லாவிற்கு ஒரு விசுவாசமான அடிமை போல இருக்கிறான். நகரத்தின் செளகரியங்களை அனுபவிக்கும் போது அவனுடைய கனவு நிறைவேறி விட்டதாகவே தோன்றுகிறது. ஆனால் போலீஸ்காரரால் பிடிபட்டு திருப்பியனுப்பப்படும் போது ஆற்றாமையால் அழுகிறான். பொருளாதாரக் காரணங்களுக்காக நகரத்திற்கு புலம்பெயரும் கனவுகளுடன் இருக்கும் பல சிறுவர்களை இந்தப் பாத்திரம் நினைவுப்படுத்துகிறது.
இந்தத் திரைப்படம் நிறைவடையும் காட்சி மிக முக்கியமானது. சற்றும் நாடகத்தனமில்லாமல் இயல்பான நிகழ்வுடன் தன்னுடைய புதுதகப்பனின் அன்பை அந்தச் சிறுவன் முழுக்கவும் புரிந்து கொள்வதான காட்சியுடன் படம் நிறைகிறது. நினைவின்றி கிடக்கும் போலீஸ்காரனின் சட்டையிலிருந்து மெஹ்ருல்லாவின் குடும்பம் சந்தோஷமாகச் சிரிக்கும் புகைப்படமொன்று மிதந்து சிறுவனின் கையில் படருவதோடு திரை இருளடைகிறது. மாறாக இருவரும் கட்டிப்பிடித்து கதறியழுதிருந்தால் அது கேவலமானதொரு காட்சியாக அமைந்திருக்கும். இந்தப் புள்ளியில்தான் உலக சினிமாவிற்கும் மற்ற சினிமாவிற்கான வித்தியாசம் பொதிருந்திருக்கிறது எனக் கருதுகிறேன்.
suresh kannan