Saturday, December 04, 2004

நண்பர்களுக்கு வணக்கம்

நண்பர்களுக்கு வணக்கம்
நண்பர்களின் நீண்ட நாள் கேள்வி "நீங்க இன்னும் பிளாக் ஆரம்பிக்கலயா?"
எனவே நானும் இன்று முதல் களத்தில் குதித்துவிடலாம் என்றுதான் மடற்குழுக்களிலிருந்து தற்காலிக விடைபெற்று இங்கே வந்திருக்கிறேன். பிச்சைப்பாத்திரம் என்கிற பெயர் சிலருக்கு வியப்பாயிருக்கலாம். பிச்சைக்காரனின் பாத்திரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்கள் உடனே சென்று பார்க்கவும். முந்தா நாள் பழைய சாதத்திலிருந்து பாப்பா சாப்பிடாமல் தூக்கிப்போட்ட பாதி ரொட்டி வரை எல்லாமிருக்கும். இங்கும் அப்படித்தான். எல்லாவகையான தலைப்புகளில் இருந்தும் எழுதலாமென்றிருக்கிறேன்,
உங்கள் ஒத்துழைப்புடன்.
நன்றி.


சுரேஷ் கண்ணன்


1 comment:

writerpara said...

வாழ்த்துகள் சுரேஷ்.