Sunday, July 13, 2014

உன் சமையலறையில் - விமர்சனம்

வெள்ளை ரவை 200 கிராம்
கடுகு 1ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1ஸ்பூன்
கடலைப் பருப்பு 2 ஸ்பூன்
வரமிளகாய் 3
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
தக்காளி 1
பட்டாணி, காரட், பீன்ஸ் 100 கிராம்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 8 ஸ்பூன்

செய்முறை :
வெறும் வாணலியில் ரவையை சூடு வரும் வரை வறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். காய்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் நறுக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு , கடலைப் பருப்பு , வரமிளகாய் போடவும். தாளித்து சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், காய்களைப் போட்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூளைப் போட்டு, 3 டம்ளர் (600 மில்லி) தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். 5 நிமிடத்தில் காய்கள் சற்று வெந்ததும் உப்பு சேர்த்து, பின் வறுத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்து, கட்டி படாமல் கிளறவும். 5 நிமிடத்தில் ரவை வெந்ததும் இறக்கி, மல்லித் தழையை நறுக்கித் தூவி அலங்கரிக்கவும். (ரவை சேர்ந்ததும் அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக வைக்கவும்)

மேற்குறிப்பிட்ட திரைப்படத்தைப் பார்க்கும் நேரத்தில் மேற்குறிப்பிட்ட ரெசிப்பையையாவது முயற்சி செய்தால் பயனுள்ள முறையில் நேரத்தை செலவு செய்வதோடு மனைவியிடமும் நல்ல பெயர் பெற முயற்சி செய்யலாம்.



அன்புள்ள பிரகாஷ்ராஜ் சார், 

நீங்கள் ஓர் அற்புதமான நடிகர். அற்புதமான, வெளிப்படையான மனிதரும் கூட என்பதை உங்களின் கட்டுரைகளின் மூலம் உணர்கிறேன். அந்த அன்பிலும் உரிமையிலும் ஒரு ரசிகனாக சொல்கிறேன். டைரக்ஷன் என்கிற சமாச்சாரத்திற்கும் உங்களுக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. அதனால் அதில் செலவிடும் உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்காமல் அதிக திரைப்படங்களில் நடித்து எங்களை மகிழ்விக்குமாறு வேண்டுகிறேன்.

சமையற் குறிப்பு இந்த தளத்திலிருந்து எடுத்தது. 


suresh kannan

3 comments:

நா.கார்த்திகேயன் said...

விமர்சனம் படிக்கலாம்-னு வந்தா இப்படி ஏமாத்திட்டிங்ளே...

Muthuram Srinivasan said...

மிகவும் ரசித்தேன். தங்களின் விமர்சனத்தை தான்!!!

Anonymous said...

ஏதோ பழைய பாலச்சந்தர் படம் மாதிரி நாடகத்தனமாக இருந்தது! சுத்தமாக உயிரோட்டமே இல்லை!!!