
அன்புள்ள சுந்தர்,
நண்பர்கள் சிலர் உங்களின் இந்தப் பதிவை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தனர். (இப்படி எழுதினாத்தானே ஒரு 'கெத்து' இருக்கும்.) :-) பின்னூட்டம் மிக நீண்டுவிட்டதால் இதை தனிப் பதிவாக இடுகிறேன்.
பைத்தியக்காரனின் சாரு குறித்த பதிவில் நீங்கள் இட்டிருந்த பின்னூட்டத்தையே உங்களுக்கும் சொல்லலாம் என்று முதலில் தோன்றியது. (இந்தப் பதிவு இப்போது இங்கே தேவையில்லாதது) எனவேதான் நீங்கள் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டிருந்த போதும் பதிலளிக்க ஆர்வம் தோன்றவில்லை. ஆனால் இந்தப் பதிவு அவசியம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கக்கூடிய அவசியத்தையும் மறுக்கவில்லை. மேலும் இம்மாதிரியான சர்ச்சைக்குரிய பதிவுகளிலிருந்து விலகியிருக்கலாம் என்று அலுப்பு பல சமயங்களில் ஏற்படுகிறது. (இதையேதான் பைத்தியக்காரனின் சாரு இடுகைக்கு பதிலாக நீங்கள் எழுதிய பதிவின் பின்னூட்டத்திலும் குறிப்பிட்டேன்). ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருந்த மற்றவர்களில் சிலர் பின்னூட்டமிட்டு விட்ட நிலையில் நான் மாத்திரம் அமைதி காத்தால் அது ஒருவேளை வேறு மாதிரி புரிந்து கொள்ளப்படலாம் என்று தோன்றியதால் இது.
(1) டிவிட்டரில் உரையாடின எல்லாப் பெயரையும் ஜாடியில் போட்டு ஒரே குலுக்காக குலுக்கி இட்டதை விட யார் என்ன உரையாடினார்கள் என்பதையும் உங்கள் பதிவில் அதை வாசிப்பவர்களுக்கு தெளிவாக்கியிருக்கிலாம். (அல்லது அதனுடைய சுட்டியை தந்திருந்தாலும் ஆர்வமுள்ளவர்கள் படித்திருந்திருப்பார்கள். ஆர்வமுள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதுதான் உங்கள் பதிவின் பின்னூட்டங்களை பார்த்தாலே தெரிகிறதே) :-)
(2) டிவிட்டரில் உரையாடினவர்கள் யாராவது பதிவில் இணைப்பு கொடுத்திருந்தால் உங்கள் தரப்பு விஷயங்களைச் சொல்லியிருக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பொதுவாக இணையத்தில் பல்வேறு நபர்களைப் பற்றி அவர்களின் பல்வேறு பதிவுகளைப் பற்றி வேறு வேறு இடங்களில் குழுமங்களில் உரையாடுகிறார்கள்; விமர்சிக்கிறார்கள்; அவதூறு செய்கிறார்கள். யாரும் யாருக்கும் 'உங்களைப் பற்றி இப்படிப் பேசியிருக்கிறேன்' என்று தகவல் தருவதில்லை. சம்பந்தப்பட்டவரே அதை தாமாகவோ அல்லது நண்பர்கள் மூலமோ அறிந்து விருப்பமிருந்தால் அதைப் பற்றி தன்னுடைய தளத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட பதிவிலேயே சென்றோ தங்கள் தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். எனவே இணைப்பு தந்திருக்க வேண்டும் என்கிற உங்களின் எதிர்பார்ப்பு பொதுவாக நடைமுறையில் இல்லாதது என்பதை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். (நீங்களே கூட இந்தப் பதிவில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நானாகத்தான் அதை அறிந்து உங்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி தெரிவித்திருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை).
(3) டிவிட்டரில் உரையாடியவர்கள் 'வெற்றிலை எச்சில்' தெறிக்க விவாதித்துக் கொண்டிருந்ததாக எழுதியிருந்தீர்கள். டிவிட்டரில் உரையாடினால் அது 'எச்சில்' என்றும் அதையே வலைப்பதிவுகளில் செய்தால் அது 'கங்கை நீர்' என்றும் உங்களுக்கு யார் சொன்னது என்று தெரியவில்லை. (அப்படியான நோக்கில் நான் எழுதவில்லை என்று நீங்கள் வாதிடக்கூடும் என்கிற புரிதலுடனேயே இதை எழுதுகிறேன்). வலைப்பதிவுகளில் யோசித்து நிதானமாக எழுதுவது மாதிரி அல்லாமல் டிவிட்டரில் உரையாடுவது என்பது அப்போதைக்கு அப்போது தோன்றுவதை தன்னிச்சையாக எழுதுவது. அவதூறு எங்கும் நிகழ்ந்தாலும் அது 'எச்சில்'தான். டிவிட்டரில் எழுதுவதை பொருட்படுத்தத் தேவையில்லை என்று சிலர் குறிப்பிடுவதாலேயே இதை எழுத வேண்டியிருக்கிறது.
(4) உங்கள் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையில் தொடங்கின 'டிவிட்டர்' விவாதம் ஒரு நிலையில் பொதுவானதொரு திசையை நோக்கிப் பயணித்தது என்றுதான் நான் கருதுகிறேன். இம்மாதிரியான சர்ச்சைக்குரிய வார்த்தைகளை நாம் பேச்சு மொழியில் பயன்படுத்தும் போது யதார்த்த நோக்கில் அதையே எழுத்திலும் குறிப்பிடுவது தவறில்லை என்றுதான் நான் விவாதித்துக் கொண்டிருந்தேன். மேலும் நம்முடைய சங்க இலக்கியங்களிலேயே (நவீன இலக்கியத்திலும் கூட) இந்த வார்த்தை வேறு வேறு பெயர்களில் குறிப்பிடப்படும் போது அவை பெரிதும் சர்ச்சைக்குள்ளாவதில்லை;மாறாக இலக்கிய மதிப்பும் பெற்றுவிடுகிறது என்பதுதான் நான் குறிப்பிட்டது. சில நண்பர்கள் (பிகே சிவகுமார், டைனோபாய் உள்ளிட்டவர்கள்) அது குறித்தான தங்களின் மாற்றுக் கருத்துக்களை வைத்துக் கொண்டிருந்தனர். நடிகையின் பெயருக்கு பதிலாக குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தியிருக்கலாமே என்றதற்கும் அங்கேயே பதிலளித்திருக்கிறேன்.
வேறு ஏதாவது ஒரு பதிவைப் பற்றி விவாதித்திருக்கலாம் என்று நீங்களே அங்கலாய்த்திருக்கிறீர்கள். எனில் உங்களுடைய நோக்கில் சம்பந்தப்பட்ட பதிவு உங்களினாலேயே முக்கியமற்றதாய் நினைக்கப்படும் பட்சத்தில் அதை எழுதியதின் காரணம்தான் என்ன? வெறும் பரபரப்பை ஏற்படுத்துவதுதானா?
(5) உங்களுடைய இந்தப்பதிவில் கீழ்குறிப்பிட்டவாறு நான் பின்னூட்டமிட்ட போது மிக ஆபாசமான மொழியடங்கிய பின்னூட்டம் ஒன்று அழுகிப் போன வக்கிர மனம் ஒன்றிடமிருந்து என் பதிவிற்கு வந்தது.
சுந்தர்,
அப்படியே... பத்தாம் வகுப்பு,பன்னிரெண்டாம் வகுப்பு.. என்று ph.d வரைக்கும் போயிருக்கலாம். :-))
பொதுவாக நம்ம ஆட்களின் பாசாங்கை நினைத்தால் சிப்பு சிப்பாக வருகிறது. புண்டை என்ற வார்த்தையை கேட்டதில்லையா அல்லது சொன்னதில்லையா. எழுத்தில் பார்த்தால் ஏன் இப்படி பதறுகிறார்கள் என்று தெரியவில்லை.
நான் அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை ஆதரித்து எழுதியதற்காக அந்த அழுகிய மனம் என்னை கண்டபடி திட்டியிருந்தது. இதிலுள்ள நகைமுரண் என்னவெனில் எந்த ஆபாச (?!) வார்த்தையை நான் ஆதரித்ததற்காக அந்த வசவுகள் எழுதப்பட்டிருந்ததோ, அந்தப் பின்னூட்டத்திலேயே அதைவிட அளவிற்கும் அதிகமான ஆபாசமும் வக்கிரமும் இருந்தது. இவ்வளவு வக்கிரத்தை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும் அந்த நபர், எப்படி ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தை பொதுத்தளத்தில் எழுதப்பட்டதற்காக ஆத்திரம் கொள்கிறார் என்கிற உளவியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. (இது பொதுவான தகவலுக்காக).
(இந்தப் பதிவை எந்தக் காரணத்தைக் கொண்டும் நீக்க மாட்டேன் என உறுதி தருகிறேன்) இது குசும்பருக்காக. :-)
என்னுடைய டிவிட்டர் முகவரி்: http://twitter.com/sureshkannan70
suresh kannan