Monday, November 03, 2008

ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்



தமிழ்த்திரையுலகினர் தங்களுடைய வழக்கமான சம்பிரதாயத்தை மீண்டுமொரு முறை நிறைவேற்றியுள்ளனர் என்றுதான் தோன்றுகிறது. இன உணர்வோடு வீறுநடை போட்ட தமிழ்ச்சமூகமும் நயனதாரா வகையறாக்களை ஜொள்ளிட்டும் தங்களுடைய வருங்கால அரசியல் தலைவர்களின் உணர்சசிப் பெருக்கோடும் முழக்கங்களை கண்டு மெய்சிலிர்த்தும் திரும்பியுள்ளனர். தமிழ்ச்சினிமாக்களின் உலக சந்தையை கணக்கில் கொண்டு தங்களின் பிழைப்பிற்காவாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானதொரு பாவனையை செய்ய பல நடிகர்களுக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாட்டு பிரச்சினைக்காக இங்கே ஏன் போராட வேண்டும் என்று அஜீத், அர்ஜூன் போன்றோர் சொன்னதாக ஏற்பட்ட வதந்தியையொட்டி ஈழத்தமிழர்கள் அஜீத்தின் சமீபத்திய படத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். உடனே கருப்புச் சட்டையை மாட்டிக் கொண்டு வந்த அஜீத் 'உடல் மண்ணுக்கு - உயிர் தமிழக்கு' என்ற அரதப்பழசான இற்றுப்போன ழுழக்கத்தை செத்துப் போன குரலில் சொல்லி விட்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார். "உங்க அரசியல்ல சினிமாக்காரங்கள இழுக்காதீங்க. ப்ளீஸ்'. அவ்வளவுதான் அவர் பேசினது. இலங்கைத்தமிழர்கள் குறித்தான அவர் பார்வையை தெரிந்து கொள்ள ஏற்கெனவே அவர் கொடுத்துள்ள பேட்டிகளைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். திரும்பவும் மேடையில் சொல்லியழ அவருக்கு 'தல' எழுத்தா என்ன?. ரஜினிகாந்த்தின் நாற்காலிக்கு ஆசைப்பட்டவரல்லவா? அப்படித்தான் பேசுவார் போலிருக்கிறது. என்றாலும் வணிகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் என்று வெளிப்படையாக சொன்ன அவரின் நேர்மையை பாராட்டியாக வேண்டும்.

யாருக்கும் புரியாது என்பதால் கமல் பேசுவது பற்றி பிரச்சினையில்லை. உணர்ச்சி வேகத்தில் உளறிக் கொட்டாமல் அறிவுப்பூர்வமாக பேசுவதால் அவர் பேச்சை யாருக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அபத்தமாக இருந்தாலும் எதையும் உணர்ச்சிகரமாக பேசுவதுதான் தமிழர்களுக்குப் பிடிக்கும். ரஜினி இதை நன்றாக புரிந்து வைத்துள்ளார். ஊடகங்கள் இவரின் உளறல்களை பிடல் காஸ்ட்ரோவின் 'வரலாறு நம்மை விடுதலை செய்யும்' என்ற முழக்கம் போல பிரதான இடமளித்து பிரசுரிப்பதின் அபத்தத்தை தாங்க முடியாமல்தான் இவர் பேசுவதை நானும் முக்கியத்துவம் அளித்து மறுக்க வேண்டியிருக்கிறது.

'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'... என்று கருணாநிதி சொல்வதை ஆவலுடன் எதிர்பார்த்து விசிலடிக்கும் கழகக்கண்மணிகள் போல் 'என்னை வாழவைக்கும் அன்பு ரசிகர்களே' என்று ரஜினி சொன்னவுடன் புல்லரித்துப்போய் (அவரை வாழ வைப்பது இருக்கட்டும், நீ எப்போதடா வாழ்ந்தாய் என்று யாரும் கேட்க மாட்டார்களா) இது உணர்வு சார்ந்த போராட்டம் என்கிற உணர்ச்சி கூட இல்லாமல் விசிலடித்து கைத்தட்டி மகிழும் கூட்டத்தைக் கண்டால் வேதனையாக இருக்கிறது.

'இந்த விழா...' என்று ஆரம்பித்தவர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு நல்லவேளையாக 'உண்ணாவிரத போராட்டம்' என்று சுதாரித்துக் கொண்டார். அண்டை நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதரவாக நடக்கும் ஓர் கூட்டத்திற்குப் போகிறோம் என்பது அவரின் ஆழ்மனதில் பதிந்திருந்தால் ஏதோ குறுந்தகடு வெளியீடு போல் விழா என்று ஆரம்பித்திருந்தது நிகழாமல் இருந்திருக்கும்தானே? கவனக்குறைவு என்று அவரின் ரசிகர்கள் சப்பைக்கட்டு கட்டினாலும். '30 ஆண்டுகளாலும் மேலாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை, நீங்கள் ஆம்பளைகளா?" என்பது அவரின் அடுத்த உதிர்ந்த முத்து. போர் என்கிற சமாச்சாரத்தை ஏதோ தாம் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு வில்லன்களை உதைக்கிறாற் போன்றதொரு விஷயம் என்று புரிந்து கொண்டிருக்கிறார் போலிருக்கிறது.

போர் என்பதின் வலியையும் வேதனையையும் நாம் எவ்வளவுதான் படித்தாலும், பார்த்தாலும் அனுபவிக்காமல் அதன் குரூரத்தை நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது. எனவேதான் யாராவது திரியை கொளுத்திப் போட்டால் அப்போதைக்கு எரிவதும் பின்பு அடங்கிவிடுவதுமாக இந்தப் பிரச்சினை தமிழக்கதில் எதிரொலிக்கிறது.

அங்கு கூடியிருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்ச்சமூகமாகிய நமக்குமே இலங்கையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மைச்சித்திரம் தெரியுமா என்பது கேள்விக்குறி. தீராநதியில் ஷோபாசக்தியின் பேட்டியைப் படித்தால் சகோதர இயக்கங்களை கொன்று குவிக்கிற போரை நிறுத்த வாய்ப்பிருந்தும் நிறுத்தாத புலிகளை குறை கூறுகிறார். ஷோபாசக்தியின் ஆளுமையை கட்டமைக்கிற முயல்கிற அ.மார்க்ஸின் போக்கு பற்றி அடுத்த இதழில் ஒரு எதிர்வினை வருகிறது. ஒரு காலகட்டத்தில் உணர்வுபூர்வமாகவும் நேர்மையாகவும் இந்தப்பிரச்சினையை கையாண்ட கருணாநிதி இன்று அரசியல் குளிர்காய பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். புலிகளின் மீதான நிலைப்பாட்டை பா.ம.க. சட்டென்று மாற்றிக் கொள்கிறது. தமிழர்களின் பிரச்சினையை விடுதலைப்புலிகள் ஆதரவு/எதிர்ப்பு என்ற பிரச்சினையாக மாற்றிவிடாதீர்கள் என்கிற தா.பாண்டியனின் குரல் தனித்து ஒலிக்கிறது.

பகுத்தறிவாளர்கள், முற்போக்குவாதிகள், ஜனநாயகவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்கிறவர்கள் உட்பட எல்லோரும் இனம் இனம் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய ஜாதியை, மதத்தை, இனத்தை, எல்லைக்கோடுகளை கடந்துவருகிறவனே ஒரு உண்மையான முற்போக்குவாதியாய் இருக்க முடியும் என்பது என் புரிதல். தமிழர்களுக்காக மாத்திரமல்லாமல் அங்கு சாகிற சிங்களனுக்கும் சேர்த்து உலகெங்கிலும் ஆதிக்க சக்தியால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் நாம் துயரப்பட்டால்தான் உண்மையான மனிதர்களாவோம்.

suresh kannan

25 comments:

Anonymous said...

அரசியல்வாதிகளும் நடிகர்களும் சீசனுக்குகேற்பதான் செயல்படுவார்கள். இப்போதைய சீசன் இலங்கை தமிழர் பிரச்சினை. பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

Anonymous said...

rajni questioned sinhalese army i suppose

லக்கிலுக் said...

ம்ஹூம். ஏமாற்றமான பதிவு. விரிவாக எதிர்பார்த்தேன். இப்பதிவும் ரஜினி பேச்சு மாதிரி தான் இருக்கிறது. :-(

Raj said...

அவர் உளறலைன்னாதானே ஆச்சர்யம். என்ன செய்வது...இந்த ட்ராமா வெல்லாம் பார்க்கணும்ன்னு தலையெழுத்து.

Anonymous said...

ithellam sappa matter. urupadiya ethavathu podunga

Anonymous said...

THangalin Aakam arumai..erudhi pandiyil neengal kuripitadai ellorum unara veandum.....Thamilan endru sollikolbavan utpada....

Nandri
Indrajith

Anonymous said...

rajini is the one and only super star in world. you guys are narrow minded crooks

கிரி said...

//ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்//

ரஜினி என்ன கூறினாலும் அதை திட்டி வழக்கம் போல்

விலெகா said...

ரஜினி என்ன பேசினாலும் குறை கண்டுப்பிடுத்து அதன் பின் அதை தவறென்று உணர்ந்து ,அப்புறம் பேசியது தப்பு இல்லை சரி, ஆமா,அட போங்கப்பா எனக்கு தலைவரே தேவலை.

Anonymous said...

Rajini vaayilaye vada suduvaaru :P

Asusual superaana pechuya avarkitta. idhellam sethu onna oru comedy dvd release panna evlo nalla irukum janangalukku

Bleachingpowder said...

//'என்னை வாழவைக்கும் அன்பு ரசிகர்களே' என்று ரஜினி சொன்னவுடன் //

தமிழக மக்களே என்று தான் சொன்னார். சரி ரஜினியை பத்தி தப்பா தான் எழுதனும் முடிவு பண்ணிட்டு எழுத ஆரம்பிச்ச பிறகு, இதை பத்தியெல்லாம் எதுக்கு யோசிச்சிட்டு.

//ரஜினியின் உளறல் பேச்சு வழக்கம் போல்//
இன்னுமொரு ஒரு அரைவேக்காடு பதிவு ரஜினியை பற்றி. வழக்கம் போல.

-L-L-D-a-s-u said...

மசாலா படங்களில் ஹீரோவை அடிக்கமுடியாமல் வருகின்ற அடியாடகளை பார்த்து வில்லன் கேட்கும் வசனத்தை ( நீங்க ஆம்பளைகளாடா?) , இங்கே சூப்பர ஸ்டார் , இலங்கை ராணுவத்தை பார்த்து கேட்கிரார் .

Anonymous said...

"Army to Open a Land Route to Jaffna Soon" - Commander Tells Gajaba Regiment Silver Jubilee
ON reaching the Jaffna's Kilaly lagoon, about 7 km away from the troop positions as of now, the entire western part of Kilinochchi district would be sans terrorists, enabling the troops to re-open a main supply route to Jaffna shortly, said Commander of the Army Lieutenant General Sarath Fonseka at the Gajaba Regiment Silver Jubilee commemorations," held at Saliyapura Regimental Headquarters Monday morning (3).

The Silver Jubilee commemoration of the elite Gajaba Regiment (GR), one of the most prominent and reputed Regiments in the Sri Lanka Army got underway, giving pride of place to the military ceremonials and traditions.

The ceremonies of the day commenced at 8.30 a.m. when the Chief Guest Lieutenant General Sarath Fonseka, Commander of the Army arrived at the premises of the Keterians who in turn was accorded a Guard of Honour plus the military Guard Turn-out. He was then received by senior officers of the GR who were awaiting their Chief's arrival there.

Marking the commencement of the ceremonies on the day, the Chief Guest, accompanied by Colonel of the Regiment Major General Jagath Dias and Senior GR Officers, paid floral tributes to the huge and magnificent War Hero monument at the Regimental Headquarters premises, erected in memory of all fallen GR War Heroes.

Major General Wijaya Wiamalaratne, founder of the Gajaba Regiment, now a legendary War Hero in contemporary times, exactly twenty five years ago was fondly recalled to the memory along with all other War Heroes after observing two-minute silence.

To this date about 3500 GR warriors, popularly known as Keterians, the name deriving from their unit badge, have paid the supreme sacrifice, in accomplishing their noble mission of eradicating terrorism from the soil. Giving further weight to their dedication and commitment to the cause, the GR was conferred President's Colours recently.

During the Commander's address to the occasion, he appreciated the GR contributions and summed up the gains so far made by the Army in its quest for peace and where he said that the opening of a land route between Colombo and Jaffna is going to be a reality very soon. "As the troops are now closing in on the Kilaly lagoon, depriving the terrorists of their western Pooneryn bastion, the troops have so far managed to eliminate 80% of the LTTE fighting ability after suppressing them. Thus the western sector of the A-9 highway would remain completely clear," said the Commander.

During a subsequent Press briefing, Commander further assured that capture of Mullaittivu simultaneously mobilizing many more battalions under four Divisions would form a 50 km-long frontage to the east of the A-9 road, providing full security to the area afterwards.

Major General Jagath Dias, Colonel of the Regiment, as a token of memory and recognition presented the visiting Commander with a special plaque on the occasion on behalf of all War Heroes. Lieutenant General Sarath Fonseka also spoke to a cross section of GR soldiers who have turned disable during offensives, launched in the fight against terrorism and did not forget to exchange a couple of views with them.

A record 3500 GR War Heroes in their fight against division of the country have made the supreme sacrifice so far, the highest number to have laid their lives from a single wing in the Army. The GR came into being in 1983 after Rajarata Rifles was disbanded. The present Secretary Defence Mr. Gotabhaya Rajapaksa also served in this elite Regiment some time back before his retirement.

Towards the end of the ceremony, all troops present on the occasion, with their senior officers, Officers and Other Ranks posed for a group photograph with the Chief Guest

PRABHU RAJADURAI said...

"தன்னுடைய ஜாதியை, மதத்தை, இனத்தை, எல்லைக்கோடுகளை கடந்துவருகிறவனே ஒரு உண்மையான முற்போக்குவாதியாய் இருக்க முடியும் என்பது என் புரிதல்"

கவனம்! நாளை 'நாட்டை' என்று உங்களது எல்லையை நீங்கள் விரிவுபடுத்தினால், உங்களது நண்பர்கள் உங்கள் மீதும் கோபப்படக்கூடும்...

Anonymous said...

//தீராநதியில் ஷோபாசக்தியின் பேட்டியைப் படித்தால் சகோதர இயக்கங்களை கொன்று குவிக்கிற போரை நிறுத்த வாய்ப்பிருந்தும் நிறுத்தாத புலிகளை குறை கூறுகிறார்.//
சுரேஷ் கண்ணன், அது உண்மை தமிழ்நாட்டு தமிழ்ச்சமூகத்திற்கு இது பற்றி எதுவும் தெரியாது. இந்த வசனம் சகோதர இயக்கங்களை கொன்று குவிக்கிற புலிகள். போரை நிறுத்த வாய்ப்பிருந்தும் நிறுத்தாத புலிகள் என்று வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

RATHNESH said...

முரளிகண்ணன்,

//தமிழ்ச்சினிமாக்களின் உலக சந்தையை கணக்கில் கொண்டு தங்களின் பிழைப்பிற்காவாவது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானதொரு பாவனையை செய்ய பல நடிகர்களுக்கு கட்டாயம் ஏற்பட்டுள்ளது.//

இந்த வரிகளில் நேர்மை இல்லை என்றே தோன்றுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவளித்த நடிகர்கள் யார் என்றெல்லாம் பார்த்து கொண்டு யாரும் திரைப்படம் பார்க்கச் செல்வதில்லை என்றே நினைக்கிறேன். அவர்களில் சிலர் 'தனித்து விடப்பட்டுவிடக் கூடாது' என்கிற உணர்வில் மனமின்றியும் இதில் கலந்து கொண்டிருக்கலாம். (இது எந்தக் குழுவிற்கும் பொருந்தும்) ஒட்டுமொத்தமாகக் கலைஞர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்துவது நியாயமா?

RATHNESH said...

மன்னித்துக் கொள்ளுங்கள், முந்தைய பின்னூட்டத்தில், தங்கள் பெயரை சுரேஷ் கண்ணன் என்பதற்குப் பதிலாக முரளி கண்ணன் என்று எழுதி விட்டேன்.

Anonymous said...

author has some idiotic views with no substance.. the purpose is just to trash rajini

Anonymous said...

அரைகுறைப் பதிவு. take time to get full information and then analyze the FACTS

rajkumar said...

திருவாளர் சுரேஸ் கண்ணன்,

உங்கள் எழுத்துக்களும் ரஜினியை திட்டுவது, படத்துக்கு விமர்சனம் எழுதுவது. தீபாவளி மலரை பற்றி கருத்துககளை உதிர்ப்பது என குண்டுசட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது.

எப்படி ரஜினியை உங்கள் விமர்சனம் பாதிக்காதோ அதே போல் என் விமர்சனமும் உங்களை பாதிக்காது.

நாட்டில் உருப்ப்டையாக எழுதுவதற்கு பல விசயங்கள் உள்ளன. உங்களுக்கு கவனிக்கப் பட வேண்டும் என்பதில் ஆசை. அதனால்தான் அடிக்கடி ரஜினியைப் பற்றி எழுதுகிறீர்கள்.

ரஜினி என்றாலே மகிழ்ச்சிதான். சிலருக்கு வாழ்த்துவதில். சிலருக்கு திட்டுவதில். எப்படியோ உங்க பிழைப்பு நடந்தா சரி.

சங்கணேசன் said...

அவர் பேசினாலும் தப்பு பேசாட்டாலும் தப்பு!!

அப்படி உளறிட்டாரு இப்படி உளறிட்டாருன்னு சொல்றீங்க..அவர் மட்டும் கலந்துக்காம இருந்தா தமிழ்நாடே இந்நேரம் உளறிட்டு இருந்திருக்கும் புரிஞ்சிட்டு பேசுங்க..

உண்ணாவிரதத்தின் உண்மையான சாரம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு.. அதை அவரவர் புரிதலுக்கு ஏத்த மாதிரி பேசியிருக்கங்க..

இதைவிட்டுட்டு, லக்கிலுக் மாதிரி பதிவெழுதி புலம்பிட்டு இருக்கிற உங்களையெல்லாம்...காமடி பதிவர்கள் ஆக்கினால் என்ன?

Anonymous said...

எந்த ஒரு விசயமும் நமக்குப் பிடிக்கும் அல்லது எரிச்சலாக இருக்கும்..
ஆனால் இந்தப் பிரச்சனையைப் பொருத்த வரையில், ஒரு விசயம்
நடந்திருக்கிறது.. இலங்கையில் அப்பாவி சனங்களை சிங்கள ராணுவம்
கொன்று குவிக்கிறது.. என்ற செய்திதான் அது.. நயம்தாரா அப்படி ஒக்காந்தா
கமல் கண்ணாடி போடல, ரஜினி உளறாரு அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்..
இந்த விசயம் அன்று நடிகர்களால்
நாடு முழுவதும் போயிருக்கிறதா இல்லையா..? என்ற ஒற்றைக் கேள்விக்கு
அனைத்து அறிவுஜீவிகளும் பதில் சொல்லட்டும்.. அப்படிப் போகவில்லை
என்றால் நிருபிக்கட்டும்.. நாமும் அவர்களைத் திட்டுவோம்..

கந்தசாமி

enRenRum-anbudan.BALA said...

சுரேஷ்கண்ணன்70,

உங்கள் ஆதங்கத்தில் உள்ள நேர்மையை மதிக்கிறேன்...

ஆனால் ராஜ்குமார் சொன்னது போல
//நாட்டில் உருப்படியாக எழுதுவதற்கு பல விசயங்கள் உள்ளன. உங்களுக்கு கவனிக்கப் பட வேண்டும் என்பதில் ஆசை. அதனால்தான் அடிக்கடி ரஜினியைப் பற்றி எழுதுகிறீர்கள்.
//

நீங்கள் "கவன ஈர்ப்பு தீர்மானம்" போட்டிருப்பது போல எனக்கும் தோன்றுகிறது !!! நீங்கள் வைத்திருக்கும் தலைப்பே அதை பறைசாற்றுகிறது...

//இலங்கைத்தமிழர்கள் குறித்தான அவர் பார்வையை தெரிந்து கொள்ள ஏற்கெனவே அவர் கொடுத்துள்ள பேட்டிகளைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
//

ஏதாவது உருப்படியாக செய்யக்கூடிய நிலைமையில் உள்ள அரசியல்வாதிகளே நாடகமாடும்போது, "நடிகர்கள்" வேறென்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?? அனைத்து தரப்பினருக்கும் இலங்கைப் பிரச்சினை / இலங்கைத் தமிழர்கள் குறித்த ஒரு 'வெளிப்படையான' பார்வை இருந்தே ஆக வேண்டும் என்று ஏன் ஒரு கட்டாயம் இங்கு ஏற்பட்டுள்ளது ?

உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் !

எ.அ.பாலா

பி.கு: ஏன் டிவிட்டர் பக்கம் வருவதில்லை ???

ஊர்க்காரன் said...

அஜித் ஒரு மலையாளி. ரஜினி கன்னடக்கர்ரர். ஏ.ஆர்.ரகுமான் ஒரு மலையாளி. அர்ஜுன் கன்னடக்காரர். பாலுமகேந்திரா மலையாளி. நடிகர் பரத் மலையாளி.

Anonymous said...

ரஜினியின் பேச்சைப் பற்றி நான் பேச எதுவும் இல்லை. ஆனால் உண்மையான மனிதனின் உணர்வுகள் என்பவை எப்படி இருக்க வேண்டும் என்கின்ற உங்களது கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன்.. ஆனால் அதை நாம் உரக்க சொன்னோமானால் நாமும் தமிழீழ எதிரி ஆகிவிடுவோமே...? என்ன செய்வது..?