Wednesday, February 02, 2005

எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ்ச் சினிமாவில் நுழைகிறார்?

இரண்டு நாட்களுக்கு முன்பான ஒரு மாலை செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்த போது அதில் ஒரு செய்தி என்னை வசீகரித்தது. அதன் சுருக்கம்:

பிரபல மலையாள டைரக்டர் லோகிதாஸ் தயாரித்த 'கஸ்தூரி மான்' என்கிற மலையாள திரைப்படம் பெரும்வெற்றி பெற்று பல விருதுகளை பெற்றது. அதன் நாயகியான மீரா ஜாஸ்மினுக்கும் பல விருதுகள் கிடைத்தன. அதே திரைப்படத்தை லோகிதாஸ் தமிழில் திரைக்கதை, இயக்கத்தில் தயாரிக்க முடிவு செய்திருக்கிறாராம். பைவ் ஸ்டார் மற்றும் அழகிய தீயே படங்களின் நாயகன் பிரசன்னா கதாநாயகனாக நடிக்க மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம். இசை - இளையராஜா.

இந்தப் படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதவிருப்பதாக அந்தச் செய்தி சொல்கிறது.

O

இந்தச் செய்தியின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் இருந்தாலும், இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் நல்ல செய்திதான். இலக்கிய எழுத்தாளர்களுக்கும் தமிழ்ச்சினிமாவிற்கும் பாலம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் எழுத்தாளர்கள் சினிமாவிற்கு வர வேண்டும் சினிமாவில் உள்ள அறிவுஜீவிகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இது நல்ல சகுனம்தான். முன்னர் ஜெயகாந்தன் சில நல்ல முயற்சிகளை செய்து வைத்து விட்டு போயிருந்தாலும் சுஜாதாவும் பாலகுமாரனும் வணிக ரீதியிலான படங்களிலேயே பங்கேற்பதால் மலையாள சினிமா பட உலகில் வெற்றிகரமாக விளங்கிய எம்.டி. வாசுதேவன் நாயரை போல் தமிழில் நம்மால் யாரையும் பார்க்க முடியவில்லை.

இன்னொரு நவீன இலக்கியவாதியான எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற பாபாவும், பாப்கார்னும் வணிக ரீதியாக தோல்வியைத் தழுவியிருப்பதால், கதாநாயகியின் தொப்புளுக்கு குளோசப் ஷாட் வைக்கக்கூட சகுனம் பார்க்கிற நம் தமிழ்ச்சினிமாக்காரர்கள் அவரை உபயோகப்படுத்த தயங்கலாம். மற்றபடி சிறந்த எழுத்தாளர் தமிழ்ச்சினிமாவில் சம்பந்தப்பட்டிருப்பது மிக சொற்பமான அளவிலேயே இருக்கும் இந்தச் சூழ்நிலையில்...

வாங்க ஜெயமோகன்.

suresh kannan

1 comment:

Anonymous said...

º¢É¢Á¡×ìÌô §À¡É º¢òò¼¡Ùí¸ º¡Ã¢ ±Øò¾¡Ùí¸ Å⨺¢ø þô§À¡ ¦ƒÂ §Á¡¸Ûõ §º÷óРŢð¼¡Ã¡. Á¨Ä¡Çò¾¢ø þÕóÐ þÈìÌÁ¾¢Â¡Ìõ ¸¨¾Â¡¨¸Â¡ø, ¦ƒ §Á¡¨Åò §¾÷ó¦¾Îò¾¢Õì¸Ä¡õ. Á¨Ä¡Çò¾¢ø ÀÄ ¿øÄ À¼í¸û ÅóÐ ±ý¨Éô ÀÄ ¸¡Äõ ¦ÀÕãîÍ Å¢¼ ¨ÅòÐûÇÉ. ¦ƒ §Á¡¨ÅÔõ, þá Ó¨ÅÔõ ¦¸¡ïºõ ¯ÕôÀÊ¡¸ ¾Á¢úô À¼ ¯Ä¸õ ÀÂýÀÎò¾¢, «Ð §À¡ýÈ ¿øÄ À¼í¸¨Ç ¾Á¢Æ¢ø ¦¸¡½ÃÄ¡õ.

«ýÒ¼ý
º.¾¢ÕÁ¨Ä


By: S.Thirumalai