
காலை 08.00 மணி. வடசென்னைப் பகுதி. ஆண்களை விட பெண்களே நீளமாக இருந்த அந்த வரிசையில் இருந்த ஒவ்வொருவரையும் வணங்கத்தோன்றியது. நான் பொதுவாக சற்று சாவகாசமாகத்தான் ஒட்டளிக்கச் செல்வது வழக்கம். இதுவரை எந்த குழப்பமும் நேர்ந்ததில்லை. ஆனால் இந்த முறை ரிஸ்க் எடுக்க வேண்டாமென்று சீக்கிரமாகவே சென்றுவிட்டேன். வடசென்னைப் பகுதிதான் என்றாலும் அங்குள்ளவர்களில் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டு மக்களே மிக ஆர்வமுடன் வாக்களிக்க காலையிலேயே வந்திருந்தார்கள். நடப்பதற்கே தள்ளாடும் முதியவர்களும் அவ்வளவு காலையில் வாக்களிக்க வந்திருப்பதைக் காண நெகிழ்வாக இருந்தது.
வாக்குச் சாவடியில், தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர், முகவரி, சின்னம் உட்பட அனைத்தும் பெரிதான எழுத்துக்களில் ஒட்டப்பட்டிருந்தது. எவ்வாறு வாக்களிக்கும் கருவியைப் பயன்படுத்துவது என்பது குறித்த போஸ்டர்களும் ஆங்காங்கே ஒட்டப்படிருந்தன. காவல்துறையினர் மிக கனிவாகவும் பொறுமையாகவும் நடந்து கொண்டனர். 'அடையாள அட்டையில் இருக்கிற முகத்திற்கும் தனக்கும் வித்தியாசம் இருக்கிற காரணத்தினால் வாக்களிக்க தன்னை அனுமதிக்கவில்லை' யென்று ஒருவர் புலம்பிக் கொண்டிருந்தார். நான் எனக்கான வாக்கை எந்தவித குழப்பமுமில்லாமல் அளித்து விட்டு வந்தேன்.
அரசியல் கட்சிகள், கூட்டணி என்றல்லாமல் என்னுடைய தொகுதியில் உள்ள வேட்பாளர்களில் சிறந்தவர் என்று நான் கருதக்கூடியவருக்கே ஓட்டளித்தேன். யாருக்கு வாக்களிப்பது என்பதை முன்பே முடிவு செய்துவிட்டதால் எவ்வித குழப்பமுமில்லை.
ஒட்டளித்துவிட்டு வெளியே வரும் பிரபலங்கள் தங்கள் ஆட்காட்டிவிரலை உயர்த்தி காண்பிக்கிற புகைப்படங்களை பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன். தேர்தல் முடிந்து பதவியில் அமர்ந்த பிறகு தங்களிடம் கோரிக்கைக்காக வரும் மக்களிடம், அரசியல்வாதிகள் நடுவிரலை உயர்த்தி காண்பிக்காமல் இருந்தால் சரி.
image courtesy: original uploader
suresh kannan
About Me
- சுரேஷ் கண்ணன்
- Chennai, Tamil Nadu, India
- மின்னஞ்சல்: sureshkannan2005@gmail.com
Blog Archive
-
▼
2009
(73)
-
►
June
(25)
- சாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்
- சாக்லேட்
- சிறுபத்திரிகை எழுத்தாளனாக ஆக 10 சிறப்பு குறுக்கு வ...
- சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூறாவளி
- 'பட்டர்மில்க்'ன்னா மோரா?
- கருணாநிதி போட்டுத் தராத ஆட்டோகிராஃப்
- தமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா? ஒரு சர்வே
- அற்புதமானதொரு ஆஸ்திரேலிய சினிமா
- கமல் தந்த அதிர்ச்சி
- கேள்வி பதிலும் சுயபுராணமும்
- சரோஜாதேவி புத்தகமாவது வேண்டும்...
- ஹிட்ச்காக்கின் அட்டகாசமானதொரு திரில்லர்
- புதுச்சட்டை
- லட்ச ரூபாய் நடிகை
- ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினது சிறந்ததா?
- கொஞ்ச நேரம் சும்மா இரேண்டா..
- நான்தான் 'தருமி' நாகேஷ்
- விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்
- குழந்தைமையை மறுக்காதீர்கள்
- சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி
- வாங்க இலவசமாக மசாலா திரைப்படங்களை பார்க்கலாம்
- "பசங்க" - இன்னுமா பார்க்கலை?
- கிழக்கு பதிப்பகம் குறித்து ஏன் அஞ்ச வேண்டும்?
- என்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
- எழுத்தாளர் கமலாதாஸ் மறைவு
-
►
June
(25)
Labels
- சினிமா (73)
- குறிப்புகள் (43)
- பொது (33)
- அனுபவம் (31)
- புத்தகம் (22)
- எழுத்தாளர்கள் (13)
- அயல்சினிமா (10)
- அயல் சினிமா (8)
- நகைச்சுவை (8)
- பொது (8)
- மொக்கை (7)
- பகடி (6)
- இந்திசினிமா (5)
- அரசியல் (4)
- சுஜாதா (4)
- பதிவர் வட்டம் (4)
- ரஜினி (4)
- உபயோகமற்ற குறிப்புகள் (3)
- சமூகம் (3)
- சாரு (3)
- ஜெயமோகன் (3)
- நிகழ்வு (3)
- வன்முறை (3)
- அஞ்சலி (2)
- இசை (2)
- இலக்கியம் (2)
- மீள்பதிவு (2)
- முற்போக்கு (2)
- வாசிப்பனுபவம் (2)
- Reservoir Dogs (1)
- அம்பை (1)
- அரசு ஊழியர்கள் (1)
- அருண் வைத்தியநாதன் (1)
- அறிவிப்பு (1)
- ஆட்டோகிராஃப் (1)
- ஆஸ்கர் விருது (1)
- இரானிய சினிமா (1)
- இலங்கை பிரச்சினை (1)
- இளையராஜா (1)
- உன்னைப் போல் ஒருவன் (1)
- உன்னைப் போல் ஒருவன் (1)
- எண்ணம் (1)
- எஸ்கொபெர் (1)
- ஏ.ஆர். ரஹ்மான் (1)
- ஏ.ஆர்.ரகுமான் (1)
- கன்னடம் (1)
- கற்பிதம் (1)
- காஞ்சிவரம் (1)
- கிரிஷ் காசரவள்ளி (1)
- குசேலன் (1)
- கே.பி.சுந்தராம்பாள் (1)
- கேள்விமீமீ (1)
- கோவிந்த் நிஹ்லானி (1)
- சசிகுமார் (1)
- சர்ச்சை (1)
- சாசனம் (1)
- சினிமா விமர்சனம் (1)
- சிறுகதை (1)
- சுப்ரமணியபுரம் (1)
- சூப்பர் சிங்கர் (1)
- சேரன் (1)
- ஜாக் நிக்கல்சன் (1)
- டென்சல் வாஷிங்டன் (1)
- தமிழ்மணம் (1)
- தேசிய விருதுகள் (1)
- தோப்பில் முஹம்மது மீரான் (1)
- நவீன தீண்டாமை (1)
- நாகேஷ் (1)
- நாடோடிகள் (1)
- நான் கடவுள் (1)
- நூலகம் (1)
- நேர்காணல் (1)
- பதிப்பகம் (1)
- பாடல் சர்வே (1)
- பியர் (1)
- பிரகாஷ்ராஜ் (1)
- பிரியாணி (1)
- பொக்கிஷம் (1)
- பொதுப்புத்தி (1)
- மகேந்திரன் (1)
- மஜித் மஜிதி (1)
- ரியாலிட்டி ஷோ (1)
- வடிவேலு (1)
- வார்த்தை (1)
- விமர்சனம் (1)
- விருது (1)
- விஷால் பரத்வாஜ் (1)
- ஷகிலா (1)
- ஸ்வர்ணலதா (1)
- ஹிட்ச்காக் (1)
Posted by
சுரேஷ் கண்ணன்
Wednesday, May 13, 2009
Labels:
அனுபவம்
7 comments:
- கோவி.கண்ணன் said...
-
//அரசியல்வாதிகள் நடுவிரலை உயர்த்தி காண்பிக்காமல் இருந்தால் சரி. //
:))) - முகவை மைந்தன் said...
-
வாழ்த்துகள்.
- தமிழ்நதி said...
-
பணம் விளையாடுகிறது. போகிற போக்கைப் பார்த்தால் நடுவிரலை உயர்த்திக் காட்டுவார்கள் போலத்ததான் தோன்றுகிறது.
- ஷண்முகப்ரியன் said...
-
கோவி.கண்ணன் said...
//அரசியல்வாதிகள் நடுவிரலை உயர்த்தி காண்பிக்காமல் இருந்தால் சரி. //
:)))//
:))):))):))) - லக்கிலுக் said...
-
உதயசூரியனுக்கு வாக்களித்ததற்காக நன்றி! :-)))))
- ராஜ நடராஜன் said...
-
ஓட்டுப் போட்ட அனைவருக்கும் ஓட்டுப் போடாத என்னைப் போன்றோரின் சார்பாக வாழ்த்துக்கள்.
(லக்கி என்னமோ கிசு கிசுக்கிறாரே!சரக்கு,சைடு டிஷ்க்கு தேறுமா:))) - வண்ணத்துபூச்சியார் said...
-
//அரசியல்வாதிகள் நடுவிரலை உயர்த்தி காண்பிக்காமல் இருந்தால் சரி. //
:)))//
hahaha super..
Subscribe to:
Post Comments (Atom)