தமிழ்ப் பதிவுலகம் பொதுவாக அவதூறுகளாலும் குடுமிப்பிடி சண்டைகளாலும் கற்பிதங்கள் குறித்த சச்சரவாலும் தமக்கு முன் இருக்கும் நுட்ப வளர்ச்சியை, சக்தியை வீணடித்துக் கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிகிறது. இதிலிருந்து மாறுதலாக வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் முன்னுதாரணமாக திகழும் சில பதிவர்கள் குறித்து பெருமையடையவே தோன்றுகிறது. சக பதிவரான பைத்தியக்காரன் சமீபத்திய உதாரணம். பரவலாக அறியப்படாத எழுத்தாளரான கோபி கிருஷ்ணனின் நூற்களை கவனப்படுத்தியும் சிறுகதை போட்டியை அறிவித்தும் ... என அதன் தொடர்ச்சியாக உலக திரைப்படங்கள் குறித்து தன்னுடைய செயலை தொடர்கிறார்.
வணிகச் சினிமாவின் நச்சுச் சூழலில் திணறி அதிலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கும் உலக சினிமா குறித்து கேள்விப்பட்டும் வாசித்தும் அதனைக் காண ஆவலிருந்தும் சூழல் அமையாத வலைப்பதிவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை இலவசமாக நண்பர் பைத்தியக்காரன் ஏற்படுத்தி தந்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டும் நன்றியும். இதன் மூலம் சிறந்த திரைப்படங்களை காணவும் அது குறித்து உரையாடவும் நம்மால் இயலக்கூடிய வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலதிக விவரங்களுக்கு பைத்தியக்காரனின் பதிவு:
வாங்க இலவசமாக உலகத் திரைப்படங்களைப் பார்க்கலாம்
suresh kannan
About Me
- சுரேஷ் கண்ணன்
- Chennai, Tamil Nadu, India
- மின்னஞ்சல்: sureshkannan2005@gmail.com
Blog Archive
-
▼
2009
(73)
-
►
June
(25)
- சாரு, wikipedia, imdb, திரைவிமர்சனம்
- சாக்லேட்
- சிறுபத்திரிகை எழுத்தாளனாக ஆக 10 சிறப்பு குறுக்கு வ...
- சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூறாவளி
- 'பட்டர்மில்க்'ன்னா மோரா?
- கருணாநிதி போட்டுத் தராத ஆட்டோகிராஃப்
- தமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா? ஒரு சர்வே
- அற்புதமானதொரு ஆஸ்திரேலிய சினிமா
- கமல் தந்த அதிர்ச்சி
- கேள்வி பதிலும் சுயபுராணமும்
- சரோஜாதேவி புத்தகமாவது வேண்டும்...
- ஹிட்ச்காக்கின் அட்டகாசமானதொரு திரில்லர்
- புதுச்சட்டை
- லட்ச ரூபாய் நடிகை
- ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தினது சிறந்ததா?
- கொஞ்ச நேரம் சும்மா இரேண்டா..
- நான்தான் 'தருமி' நாகேஷ்
- விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்
- குழந்தைமையை மறுக்காதீர்கள்
- சூப்பர் ஸ்டார் எனும் கண்றாவி
- வாங்க இலவசமாக மசாலா திரைப்படங்களை பார்க்கலாம்
- "பசங்க" - இன்னுமா பார்க்கலை?
- கிழக்கு பதிப்பகம் குறித்து ஏன் அஞ்ச வேண்டும்?
- என்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை
- எழுத்தாளர் கமலாதாஸ் மறைவு
-
►
June
(25)
Labels
- சினிமா (73)
- குறிப்புகள் (43)
- பொது (33)
- அனுபவம் (31)
- புத்தகம் (22)
- எழுத்தாளர்கள் (13)
- அயல்சினிமா (10)
- அயல் சினிமா (8)
- நகைச்சுவை (8)
- பொது (8)
- மொக்கை (7)
- பகடி (6)
- இந்திசினிமா (5)
- அரசியல் (4)
- சுஜாதா (4)
- பதிவர் வட்டம் (4)
- ரஜினி (4)
- உபயோகமற்ற குறிப்புகள் (3)
- சமூகம் (3)
- சாரு (3)
- ஜெயமோகன் (3)
- நிகழ்வு (3)
- வன்முறை (3)
- அஞ்சலி (2)
- இசை (2)
- இலக்கியம் (2)
- மீள்பதிவு (2)
- முற்போக்கு (2)
- வாசிப்பனுபவம் (2)
- Reservoir Dogs (1)
- அம்பை (1)
- அரசு ஊழியர்கள் (1)
- அருண் வைத்தியநாதன் (1)
- அறிவிப்பு (1)
- ஆட்டோகிராஃப் (1)
- ஆஸ்கர் விருது (1)
- இரானிய சினிமா (1)
- இலங்கை பிரச்சினை (1)
- இளையராஜா (1)
- உன்னைப் போல் ஒருவன் (1)
- உன்னைப் போல் ஒருவன் (1)
- எண்ணம் (1)
- எஸ்கொபெர் (1)
- ஏ.ஆர். ரஹ்மான் (1)
- ஏ.ஆர்.ரகுமான் (1)
- கன்னடம் (1)
- கற்பிதம் (1)
- காஞ்சிவரம் (1)
- கிரிஷ் காசரவள்ளி (1)
- குசேலன் (1)
- கே.பி.சுந்தராம்பாள் (1)
- கேள்விமீமீ (1)
- கோவிந்த் நிஹ்லானி (1)
- சசிகுமார் (1)
- சர்ச்சை (1)
- சாசனம் (1)
- சினிமா விமர்சனம் (1)
- சிறுகதை (1)
- சுப்ரமணியபுரம் (1)
- சூப்பர் சிங்கர் (1)
- சேரன் (1)
- ஜாக் நிக்கல்சன் (1)
- டென்சல் வாஷிங்டன் (1)
- தமிழ்மணம் (1)
- தேசிய விருதுகள் (1)
- தோப்பில் முஹம்மது மீரான் (1)
- நவீன தீண்டாமை (1)
- நாகேஷ் (1)
- நாடோடிகள் (1)
- நான் கடவுள் (1)
- நூலகம் (1)
- நேர்காணல் (1)
- பதிப்பகம் (1)
- பாடல் சர்வே (1)
- பியர் (1)
- பிரகாஷ்ராஜ் (1)
- பிரியாணி (1)
- பொக்கிஷம் (1)
- பொதுப்புத்தி (1)
- மகேந்திரன் (1)
- மஜித் மஜிதி (1)
- ரியாலிட்டி ஷோ (1)
- வடிவேலு (1)
- வார்த்தை (1)
- விமர்சனம் (1)
- விருது (1)
- விஷால் பரத்வாஜ் (1)
- ஷகிலா (1)
- ஸ்வர்ணலதா (1)
- ஹிட்ச்காக் (1)
9 comments:
- shabi said...
-
என்ன எல்லாரும் ஒரே ஒலக சினிமா பதிவா போடுறீங்க இதுல ஏதும் உள்குத்து இல்லியே
- shabi said...
-
ME THE FIRST
- shabi said...
-
ME THE FIRST
- பைத்தியக்காரன் said...
-
மிக்க நன்றி சுரேஷ்.
நெகிழ்ச்சியாக இருக்கிறது...
இப்படி செய்யலாமா என பேச்சுவாக்கில் சொன்னதுமே பத்ரி ஒப்புக் கொண்டு தானே செலவை ஏற்பதாகவும் உறுதியளித்தார்.
கோபி கிருஷ்ணனின் நூல்களை பரவலாக கொண்டு போய் சேர்க்க பிரியத்துக்குரிய சுந்தர் தோள் கொடுத்தார். 'தமிழினி' வசந்தகுமார் 'தன்னையே' கொடுத்துவிட்டார்.
சிறுகதைப் போட்டியிலும், உலக திரைப்பட இயக்க முயற்சியிலும் சுந்தரின் பங்கு கணிசமானது.
சிறுகதை போட்டிக்கான லோகோவை லக்கிலுக் தயாரித்தார் என்றால், பாலபாரதியும், அவருமாக அனைத்து திரட்டிகளுக்கும் மெயில் அனுப்பி அறிவிக்க செய்தார்கள்.
அனைத்து திரட்டிகளும் இதற்கு அளிக்கும் ஆதரவு கணிசமானது.
நர்சிம் உட்பட பல நண்பர்கள் தொடர்ந்து தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு என்ன உதவி வேண்டும் என கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.
நிர்வாக ரீதியாக போட்டிக்கான கதைகளை ஒழுங்குப்படுத்தி தரட்டுமா என 'வடிகால்' கிருத்திகா கேட்டிருக்கிறார். மு. வி. நந்தினி, நான் வேண்டுமானால் ஸ்பான்சர் பிடித்து தரவா என்று அன்புடன் நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.
எத்தனை நண்பர்கள் போட்டி குறித்த அறிவிப்பை கேட்காமலேயே தங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு, லோகோவையும் இணைத்திருக்கிறார்கள் தெரியுமா?
நெகிழ்ச்சியாக இருக்கிறது சுரேஷ்...
இப்படி நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது.
நெகிழ்ச்சியாக இருக்கிறது சுரேஷ்.
மொத்தத்தில் அனைத்துமே கூட்டு முயற்சிகள்தான்.. நமக்காக நாமே செய்து கொள்வதுதான்...
தோழமையுடன்
பைத்தியக்காரன் - வண்ணத்துபூச்சியார் said...
-
பகிர்விற்கு நன்றி முரளிகண்ணன்.
உலக சினிமா பதிவுகளை மட்டுமே எழுதி வரும் என் வலையும் ஒரு முறையாவது பாருங்கள்..
வாழ்த்துகள். - கார்க்கி said...
-
/வணிகச் சினிமாவின் நச்சுச் சூழலில் திணறி அதிலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கும்//
சிரிப்பு வருகிறது. அதை விரும்பாதவ்ர்களால் எளிதில் அதை புறந்தள்ள முடியாதா?அந்த அளவிற்கு கூட பக்குவமில்லாமல், பார்த்துவிட்டு துரை வாயில் நுரை என்று பதிவு போடும் மேதாவிகள் தான் அவர்கள். உலக சினிமா பார்க்கும் அறிவு பெற்றவர்கள் தமிழ் வணிக சினிமாவை அடையாளங்கண்டு ஒதுக்குவதில் என்ன சிரமம் இருக்க முடியும்? -
கதை போட்டி நல்ல விசயம்தான்.
பாராட்டலாம்.
ஆனால் பூயுகோ....உரையாடல் என்று
அடிவயிற்றில் கிலி ஏற்படுத்து-
கிறார்களே.
எதற்கோ மாஸ்டர் பிளானோ? - "அகநாழிகை" said...
-
ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்த கட்ட நகர்வுகள் அவசியம், அதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்டு வரும் பைத்தியக்காரன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன் - Dr.Rudhran said...
-
பதிவர் கூட்டம் நடக்கும் அதே இடத்தில், தமிழ்நாட்டின் சிறந்த ஓவியர்களின் ( இதில் பிரபலமான மணியம்செல்வன் மற்றும் மருதுவும் உண்டு) கண்காட்சியும் நடக்கிறது, சீக்கிரமே வந்தால் ஒவியங்களையும் ரசிக்க நேரம் இருக்கும். இதை உங்கள் நண்பர்களுக்கும் பதிவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு பார்வதி கூடத்தின் உரிமையாளர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.