Saturday, October 15, 2005

சுந்தரராமசாமி மறைவு

Image hosted by Photobucket.com

புகழ்பெற்ற எழுத்தாளரான சுந்தரராமசாமியின் மறைவு குறித்து திண்ணையின் அறிவிப்பை இன்று காலையில் பார்த்த போது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது, மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்பது புத்தியில் உறைத்தால் கூட. அவருக்கு என் மரியாதை கலந்த அஞ்சலி. தமிழிலக்கிய உலகிற்கு இது பெரும் இழப்புதான் என்று வழக்கமான பாசாங்கான வார்த்தைகளோடு அல்லாமல் நிஜமாகவே உணர்ந்து இந்த வார்த்தையை பயன்படுத்துகிறேன்.

3 comments:

குழலி / Kuzhali said...

வருந்துகிறேன்... சுந்தர ராமசாமி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

Chandravathanaa said...

மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்பது புத்தியில் உறைத்தால் கூட. அவருக்கு என் மரியாதை கலந்த அஞ்சலி

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்னாரின் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். அவருடன் கடுமையாக மாறுபட்டாலும் அவரற்ற தமிழறிவுலகும் தமிழ் இலக்கிய உலகும் எதையோ இழந்துவிட்டதை சோகத்துடன் உணர முடிகிறது.