Wednesday, June 08, 2005

3 Indian films are listed in Time's All Time Top 100 Movies

சமீபத்தில் டைம் பத்திரிகை, உலக அளவில் சிறந்த 100 படங்களை தேர்ந்தெடுத்திருந்த பட்டியலில் மூன்று இந்தியப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதில் ஒரு தமிழ்ப் படமும் இடம் பெற்றிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவை:

(1) சத்யஜித்ரேயின் APU - A TRILOGY
(2) மணிரத்னத்தின் - நாயகன்
(3) குருதத்தின் - பியாசா

()

APU - A TRILOGY

Image hosted by Photobucket.com

அபு என்கிறவனின் மூன்று வளர்ச்சி நிலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, ரேவின் முக்கிய திரைப்படங்கள்.

1) பதேர் பாஞ்சாலி (1955)

இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு இந்தப்படம்.
இந்தியக் கிராமத்தின் ஒரு வறுமைக்குடும்பம். அபு என்கிற சிறுவனின் குடும்பம் வறுமையில் வாடுவது விஸ்தாரத்தோடும் எந்த வித பிரச்சார தொனியின்றியும் இயல்பாக சொல்லப்படுகிறது. (இந்தியாவின் வறுமையை வெளிநாட்டிற்கு விற்று பணம் சம்பாதித்து விட்டார் என்று சிலரால் ரே மீது குற்ற்ச்சாட்டு வீசப்பட்டது). அபுவின் சகோதா¢ சா¢யான மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்த சோகத்துடன் அந்தக் குடும்பம் ஒரு சிறு நகரத்திற்கு இடம் பெயர்கிறது.

2) அபராஜிதோ (1956)

அபு என்கிற அந்த வாலிபன் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டு நன்றாக படிக்கிறான். இதனால் கல்கத்தாவில் மேல்படிப்பு படிக்க உதவித் தொகை கிடைக்கிறது. கணவனை இழந்த அந்த தாய்க்கோ மகனை பி¡¢ய விருப்பமில்லையென்றாலும் அவனுடைய ஆர்வத்தினால் கல்கத்தாவிற்கு அனுப்ப சம்மதிக்கிறாள். பகுதி நேர வேலை செய்து கொண்டே கல்லூ¡¢யில் படிக்கிறான் அபு. தனிமை மற்றும் மகனின் மீது உள்ள பாசம் ஆகிய உணர்ச்சிகளால் தவிக்கிறாள் தாய். அந்த உணர்ச்சி மிகுதியில் இறந்தும் போகிறாள். வேதனைப்படும் அபு எந்த வித தளையுமின்றி கட்டற்ற மனிதராகிறான்.

3) அபு சன்சார் (1959)

கல்லூ¡¢ படிப்பை முடிக்க முடியாத இளைஞன் அபு (செளமித்ர சட்டர்ஜி) வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தனக்கேற்ற வேலையை தேடிக் கொண்டிருக்கிறான். அவன் எழுதுகிற சில சிறுகதைகளும் பிரசுரமாகிறது. அவனைத் தேடி வரும் அவன் கல்லூ¡¢ நண்பன், அவனுடைய கிராமத்தில் நடக்கவிருக்கும் ஒரு திருமணத்திற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு சந்தர்ப்ப சூழ்நிலையில் அபுவே மணமகனாக மாறி அபர்ணாவை (ஷர்மிளா தாகூர் - அறிமுகம்) திருமணம் செய்ய நோ¢டுகிறது. இன்பமாக கழியும் சில மாதங்களுக்குப் பிறகு பிரசவத்தில் ஒரு மகனை பெற்றெடுத்து இறந்து போகிறாள் அபர்ணா. அந்த துக்கத்தை ஜீரணிக்க முடியாமல், தன்னுடைய முற்றுப் பெறாத நாவலை தூக்கியெறிந்து விட்டு, மகனைப் பற்றிய எந்த உணர்வும் இல்லாமல் வேறு எங்கோ சென்று விடுகிறான். தன் மனைவி சாக அந்த சிசுவே காரணம் என்று அழுத்தமாக நம்புகிறான்.

பிறகு அவனின் நண்பனின் முயற்சியால் மனம் மாறி 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப மகனை சந்தித்து அவனுடைய பாசத்தைப் பெற முயன்று தன்னுடனே அழைத்துச் செல்கிறான்.

('பதேர் பாஞ்சாலியை பார்க்காதவர்கள், தங்கள் வாழ்வில் முழுமை பெறாதவர்கள்' என்று சுஜாதா ஒரு கட்டுரையில் கூறியிருப்பதை இங்கு நினைவு கூர்கிறேன்.

நாயகன்

Image hosted by Photobucket.com

கமல் ஏற்கெனவே 'ராஜபார்வை' போன்ற சில மாற்றுப்படங்களை நடுநடுவே முயன்றிருந்தாலும், இந்தப் படத்திற்கு பிறகு அவருடைய பயணம் வேறுதிசையில் திரும்பியது என்று நினைக்கிறேன். வணிகப்படங்களின் நாயகன் என்ற பட்டத்தையும் வசூலையும் இழக்க விரும்பாமல் அதே சமயம் வித்தியாசமான படங்களையும் முயன்று கொண்டு தமிழ்ச்சினிமாவின் தரத்தை அங்குலம் அங்குலமாக உயர்த்திக் கொண்டு சென்றதில் கமலுக்கு முக்கிய பங்குண்டு.
அப்போது எனக்கு 20 வயதிருக்கலாம். நான் வசிக்கின்ற வடசென்னையின் மின்ட் என்று குறிப்பிடப்படுகிற தங்கசாலை மணிக்கூண்டு அருகில் கிரெளன், கிருஷ்ணா (கிருஷ்ணா இப்போது மூடப்பட்டுவிட்டது) என்று இரண்டு தியேட்டர்கள் அருகருகே இருக்கும். சென்னையில் இதுமாதிரி அருகருகே இருக்கும் தியேட்டர்களுக்கு பல உதாரணங்கள் சொல்லலாம். பிரபாத், பிராட்வே - சாந்தி - தேவி என்று. இதில் எம்.ஜி.ஆர் படம் வெளியானது என்றால் மற்றொன்றில் சிவாஜி படம். இதில் கமலென்றால் அதில் ரஜினி.

இதில் கிரெளன் தியேட்டரில் 'நாயகன்' வெளியானது. ஒரு காலகட்டம் வரைக்கும் சிகரெட்டை தூக்கிப்பிடித்த ரஜினி என்னைக் கவர்ந்தாரென்றாலும், இந்த gimmicks-ஐ எல்லாம் தவிர்த்து இயல்பாக ('அவர்கள்' படத்தில் ஆய் போன குழந்தையை முகம் சுளிக்காமல் தூக்கி வைத்திருப்பாரே) நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசனின் நடிப்பை இயல்பாக விரும்ப ஆரம்பித்தேன்.

இந்தப்படம் என்னுள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். ஒரு மழைநேர மாலைக்காட்சியில் இந்தப்படத்தை பார்த்துவிட்டு திரும்பும் போது என்னையே வேலு நாயக்கராக உருவகித்துக் கொண்டு விறைப்பாக வீடு திரும்பியது நினைவில் இருக்கிறது. என் வழக்கத்திற்கு மாறாக, அப்போதே கிட்டத்தட்ட 20 முறையாவது இந்தப்படத்தை பார்த்திருப்பேன். பிறகு Sun Movies சானலில் இந்தப்படத்தை தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்த போதும், குறுந்தகடாக வெளிவந்த போது வாங்கி வைத்துக் கொண்டு சமயம் கிடைக்கும் போதெல்லாம் பார்த்து ரசிப்பதுண்டு.

Mario Puzo-வின் God Father ஸ்கிரிப்டை அடிப்படையாக வைத்துக் கொண்டு பம்பாயில் வாழ்ந்த தமிழரான வரதராஜ நாயக்கர் (தாதா) என்கிறவரின் வாழ்க்கையை சொன்ன படம். தமிழ்த்திரைப்படத்தில் ஒரு Trend setter-ஆன இந்தப்படம் மணிரத்னம், இளையராஜா, P.C. Sriram, கமல்ஹாசன், லெனின்-விஜயன் ஆகியோரின் திறமைகளைக் கூட்டுக்கலவையாகக் கொண்டு மிகத்திறமையாகவும் வித்தியாசமாகவும் உருவாக்கப்பட்டபடம்.

இன்ஸ்பெக்டரிடம் மரணஅடி வாங்குகிற, ஒரு விபச்சாரியை திருமணம் செய்து கொள்கிற, ரவுடித்தனம் செய்கிற ஒரு கதாநாயகனை தன் திறமையான திரைக்கதை மூலம் மக்களை ஏற்றுக் கொள்ள வைத்த பெருமை மணிரத்னத்தைச் சாரும்.

பியாசா

Image hosted by Photobucket.com

இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்காததால் இதைப் பற்றிய விவரங்களை தர இயலவில்லை. இந்தப் படத்தை பார்த்த நண்பர்கள் இதைப் பற்றிய விவரங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.