Sunday, April 12, 2020

வணக்கம் - வலம்புரிஜான்





வலம்புரிஜான் எழுதிய ‘வணக்கம்’ என்றொரு நூலை மிகச் சிரமப்பட்டு வாசித்து முடித்தேன். நக்கீரன் இதழில் தொடராக வந்தததின் தொகுப்பு இது. நக்கீரனில் வந்தது.. என்பதில் இருந்தே இந்த நூலின் உள்ளடக்க தரத்தை அறிந்து கொள்ள முடியும்.

கலை, எழுத்து, அறிவியக்கம் போன்வற்றுடன் சிறிதாவது தொடர்புள்ளவர்கள்,  அதிகார வேட்டை அரசியலுக்குள் சென்று வீழ்ந்தால் எத்தனை கேவலங்களுக்கு உள்ளாவார்கள்.. அவர்களுக்குள் இருக்கும் கலைத்தன்மையும் அவரது அடையாளமும் எத்தனை சிதைந்து போகும் என்பதை உறுதிப்படுத்தும் நூல் இது.

வலம்புரிஜான் அடிப்படையில் சிறந்த வாசிப்பாளர். நிறைய அறிய முற்பட்டிருந்தவர். ஆனால் அதிகார அரசியல் என்னும் நெருப்பில் குளிர்காய முனைந்து நிறைய காயங்களுடன் பெற்றும் இழந்தும் செயல்பட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு பிம்பங்களுக்கும் அணுக்கமானவராக இருக்க ஜான் மிகவும் முயற்சித்திருக்கிறார். அவர்களுக்கு இடையேயான பந்தாட்டத்தில் மிகவும் அல்லல்பட்டிருக்கிறார். மிக குறிப்பாக ஜெயலலிதாவால் மிகவும் அவமதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு நீண்ட கால கட்டத்திற்குப் பிறகு அவருக்குள் இருந்த தன்மான உணர்வு விழித்தெழிந்திருக்கிறது. எனவே இந்த நூல்.

அரசாங்க அலுவலகத்தில் தன் பணிக்காலம் பூராவும் லஞ்ச சூழலில் மாட்டிக் கொண்டு, சந்தர்ப்பம் கிடைத்தால் அவனும் வாங்கிக் கொண்டு… பிறகு ஓய்வுக் காலத்தில் மிக செளகரியமான உணர்வில் ‘எல்லாம் பிராடு பசங்க சார்..’ என்று ஒரு அதிகாரி ‘பிறரை குற்றம்சாட்டி’ புலம்புவார் அல்லவா. அப்படியொரு சந்தர்ப்பவாத புலம்பல்தான் இந்த நூல். 

மிக குறிப்பாக ஜெயலலிதாவின் சில ஆதாரமான எதிர்மறை குணாதிசயங்களை துணிச்சலுடன் அம்பலப்படுத்துகிறார் ஜான். அதே துணிச்சலுடன் எம்.ஜி.ஆரை அம்பலப்படுத்துவதில் ஜானுக்கு தயக்கம் இருந்ததைப் போல உணர முடிகிறது. எம்.ஜி.ஆர் மீதுள்ள உள்ளார்ந்த மதிப்பு மனத்தடையை ஏற்படுத்தியதோ என்னமோ. ஆர்.எம். வீரப்பன், நடராசன், சசிகலா, திருநாவுக்கரசு போன்ற பல சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள், தரகர்கள் போன்றவர்கள் இடையிடையே வந்து போகிறார்கள்.

**

நல்ல தமிழ் கொண்ட எழுத்தை கேட்க, வாசிக்க எனக்கு எப்போதும் பிடிக்கும். ஆனால் அதுவே மிகையான அலங்காரமாக, செயற்கையான ஜோடனைகளுடன் வெளி வரும் போது குமட்டி விடுகிறது. திராவிட கலாசாரத்தின் சில நல்ல பண்புகளைத் தாண்டி, அவர்களிடம் வெறுக்கக்கூடிய அம்சங்களுள் ஒன்றாக இருந்தது அவர்கள் மொழியை மிகையாக ஜோடனை செய்த விளையாட்டுத்தான்.

வலம்புரி ஜானின் மொழி நடையும் இவ்வாறே இருக்கிறது. ‘கருவாடு மீனாகாது.. கறந்த பால் மடிபுகாது’ என்று அமைச்சர் காளிமுத்து பேசினார் அல்லவா.. அப்படியொரு செயற்கையான நெடி கொண்ட மொழி நூல் பூராவும் வீசிக் கொண்டிருக்கிறது. அதுவே ஓர் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. சொல்ல வரும் விஷயத்தை இப்படி இழுத்து இழுத்து எழுதி சலிப்பூட்டுகிறார் ஜான்.

இந்த நூலை கிசுகிசு வரலாறு என்று மதிப்பிடுகிறார் ஜெயமோகன். இது தொடர்பாக ஒரு நீண்ட கட்டுரையை தன் தளத்தில் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். ஒருவகையில் இந்த நூலை நான் வாசிக்க முற்பட அந்தக் கட்டுரையே காரணம்.

இது போன்ற கிசுகிசு வரலாற்றின் ஏராளமான வரிகளுக்கிடையே சிந்திக் கிடக்கும் உண்மையான வரலாற்றின் துளிகளை தொகுத்தெடுத்துக் கொள்ள முடியும் என்கிறார் ஜெயமோகன்.

உண்மைதான். ஆனால் கல்லில் இருந்து அரிசியைப் பொறுக்கும் சலிப்பான உணர்வைத் தந்தது இந்த நூல்.

எவராவது விரும்பினால் தேடிப் படிக்கலாம். ஆனால் நான் பரிந்துரை செய்ய மாட்டேன்.


suresh kannan

1 comment:

சிகரம் பாரதி said...

சிறப்பு. தொடருங்கள், தொடர்வோம்.

தமிழ் வலையுலகை மீண்டும் மணக்கச் செய்யும் ஒரு எண்ணம்...!

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி...!!

தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய நடவடிக்கை...!!!

உருவாகியது புதிய வலைத்திரட்டி: வலை ஓலை

நமது, வலை ஓலை வலைத்திரட்டியில் பரீட்சார்த்தமாக 31 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

30ஆவது வலைத்தளம்: நினைத்துப் பார்க்கிறேன்

அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம்.

இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

தமிழில் புதிய சொற்களை அறிமுகப்படுத்த ஓர் வலை அகராதி: சொல்

ஒரே பார்வையில் எமது தளங்கள்:
1. வலை ஓலை
2. எழுத்தாணி
3. சொல்

முக்கிய அறிவித்தல் : தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். காரணம், பதிவுகள் தானாக இணையும் வகையில், வலை ஓலை வலைத்திரட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தந்த பதிவுகள் உரிய மெனுவில் இணையும் வகையிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

நீங்கள் சரியான மெனுவுக்கான குறிச்சொல்லை தங்கள் பதிவில் இணைத்தால் மட்டுமே தங்கள் பதிவைத் தேடி, எமது வலைத் திரட்டிக்கு வரும் வாசகர்களுக்கு அதனை அடையாளம் காட்டும். ஆகவே, தங்களுக்குப் பிடித்த குறிச்சொற்களை இணைத்துக் கொள்வதோடு நின்று விடாமல், சிரமம் பாராது, எமது மெனுவில் உள்ள குறிச் சொற்களை அவதானித்து அதனையும் உங்கள் பதிவில் இணைத்துக் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் நன்றி!

-வலை ஓலை