
புதிதாக வாங்கின டப்பர்வேர் சோற்று மூட்டை டப்பாக்களை கடந்த ஒரு மாதமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். பெரிதும் சிறிதுமாக நான்கு டப்பாக்கள். மஞ்சள் நிறத்தில் இரண்டு. பச்சை நிறத்தில் இரண்டு. அதே நிறத்தில் கச்சிதமான மூடிகள்.
ஏதோ ஒரு கணத்தில்தான் அதை உணர்ந்தேன். எப்போதுமே மஞ்சள் நிற டப்பாவிற்கு மஞ்சள் நிற மூடியையும் பச்சை நிறத்திற்கு அதே நிற மூடியையுமே மிகச் சரியாக பொருத்தி தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் நிறத்தை மாற்றிப் போட ஒரு முறை கூட தோன்றவேயில்லை? அப்படியே மாற்றிப் போட்டாலும் எலலா டப்பாக்களுக்கும் எல்லா மூடிகளும் பொருந்தும் வகையில்தான் இருக்கிறது. இருந்தும் ஏன்? சிறுவயதில் விளையாட்டு போல கல்வி கற்கும் பருவத்தில் நிறங்களைக் கலைத்துப் போட்டு அந்தந்த சரியான நிறத்துடன் பொருத்தும் பயிற்சி பெற்ற அதே குழந்தைப் பருவத்திலேயே இப்பவும் நிற்கிறேனா?. பிஞ்சில் ஆழமாக புதைக்கப்பட்ட இந்த மரபு சார்ந்த ஒழுங்குணர்ச்சியை என்னால் மீறவே முடியாதா? மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஏக்கம்தான் மூடியை மாற்றத் தோணும் புள்ளியை நோக்கி என்னை உந்தித் தள்ளுகிறதா?
குறுகுறுப்பான ஒரு தருணத்தில் வேண்டுமென்றே வேறு வேறு நிற மூடிகளை மாற்றிப் பொருத்தி வைத்தேன். ஏதோ தவறு செய்து விட்டாற் போல் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. அரை மணி நேரத்திற்கு மேல் தாங்கமுடியவில்லை. மறுபடியும் சரியான நிற மூடிகளைப் பொருத்தின பிறகுதான் மனது ஆசுவாசமடைந்தது.
இருந்தாலும் ஏன் என்னால் வேறு வேறு நிற மூடிகளைப் பொருத்தி விட்டு அமைதியாக, இயல்பாக இருக்க முடியவில்லை என்பதே எரிச்சலாகவும் குற்றவுணர்வாகவும் இருக்கிறது.
இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி மீள்வது?
மூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ? :)
suresh kannan
About Me
- சுரேஷ் கண்ணன்
- Chennai, Tamil Nadu, India
- மின்னஞ்சல்: sureshkannan2005@gmail.com
Popular Posts
-
எச்சரிக்கை: இந்தப்பதிவில், சிலர் ஒருவேளை வாசிக்க சங்கடப்படுமளவிற்கான ஆபாச வார்த்தைகள் உள்ளன. தவிர்க்க விரும்புபவர்கள் மேற்கொண்டு தொடராமல...
-
பழைய ஆனந்த விகடன் கட்டுரைத் தொடர் ஒன்றில், கிராமத்தில் ஓடும் தகர டப்பா பஸ்ஸைப் பற்றி எழுதும் போது "ஏதோ ஒர் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அது தொ...
-
என் உயிருக்கும் மேலான என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இனிய நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த வருடங்களைப் போலவே ...
-
ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடைந்துவிடக...
-
பெரும்பாலோனோரைப் போலவே எனக்கும் இந்தப் பாடலை முதன் முறை கேட்கும் போது 'என்னடா கொடுமை' என்று கொலைவெறி ஏறியது. மாறாக சில வருடங்களுக்கு...
-
ஒருக்கால், எனக்கு ஒரு கால் மாத்திரம் இருந்தால் (தற்காலிகமாகத்தான்) எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பல சுயபச்சாதாபமான சமயங்களில் தோன்றியதுண்...
-
காமராஜர் அரங்கம். மாலை சுமார் 6 மணி. அவ்வளவு பெரிய அரங்கத்தில் ஆங்காங்கே மக்கள் பரவலாக அமர்ந்திருக்க 'இச்சு இச்சு இச்சு கொடு' என்...
-
"ஏம்ப்பா இந்தாளை கூட்டினு போயி லேசா முடி இருக்கற மாதிரி செரச்சி்ட்டு பழுப்பு கலர் டை அடிச்சிடு.. அப்படியே அங்க ஆறு மாசமா தோய்க்காம வெச்ச...
-
இயக்குநர் செல்வராகவன் ஏறக்குறைய ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்ப தனது படைப்புகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. பிரத...
-
கொலம்பியானா' என்கிற பிரெஞ்ச் - அமெரிக்க திரைப்படம் பார்த்தேன். வழக்கமான பழிவாங்கும் கதை. தன் கண்ணெதிரே பெற்றோரை கொலைசெய்யும் மா...
Blog Archive
-
▼
2011
(49)
-
►
December
(11)
- சென்னை - சர்வதேச திரைவிழா - 21 டிசம்பர்
- சென்னை - சர்வதேச திரைவிழா - 20 டிசம்பர்
- சென்னை - சர்வதேச திரைவிழா - 18 டிசம்பர்
- சென்னை - சர்வதேச திரைவிழா - 17 டிசம்பர்
- சென்னை - சர்வதேச திரைவிழா - 16 டிசம்பர்
- சென்னை - சர்வதேச திரைவிழா - 15 டிசம்பர்
- சென்னை – சர்வதேச திரைவிழா – 14 டிசம்பர் 2011
- சர்வதேச திரைவிழா - ஒரு வார்ம் அப்
- சாருலதா ஊஞ்சல் ஷாட்
- சாரு - எக்ஸைல் - நூல் வெளியீட்டு விழா
- பெண்குறிமையவாத திரைப்படம்
-
►
January
(10)
- நாஞ்சிலுக்கு பாராட்டு விழா - மதுரையில்
- உறங்கும் துயரம்
- மசாலா (MIRCH) சினிமா
- நாளைய சினிமா - கருத்தரங்கம் - தமிழ்ச் சங்கமம்
- 2011 புத்தகக் காட்சி அனுபவம் (2)
- விஜய் டிவியில் 'ஒரே கடல்' மாலை 04.00 மணிக்கு
- 2011 புத்தகக் காட்சி அனுபவம் (1)
- நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (3)
- நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (2)
- நாஞ்சில் நாடன் பாராட்டு விழா (1)
-
►
December
(11)
Labels
- சினிமா (185)
- அனுபவம் (141)
- சினிமா விமர்சனம் (79)
- குறிப்புகள் (44)
- சமூகம் (44)
- புத்தகம் (43)
- அயல்சினிமா (42)
- எழுத்தாளர்கள் (36)
- பொது (34)
- பதிவர் வட்டம் (28)
- அறிவிப்பு (20)
- அரசியல் (15)
- சாரு (14)
- இசை (13)
- மொக்கை (12)
- வாசிப்பனுபவம் (12)
- சர்ச்சை (11)
- பொது (10)
- நகைச்சுவை (9)
- இந்திசினிமா (8)
- இலக்கியம் (8)
- உலக சினிமா (8)
- பதிப்பகம் (8)
- விருது (8)
- உபயோகமற்ற குறிப்புகள் (7)
- பகடி (7)
- பரிந்துரை (7)
- விழா (7)
- NFDC Weekend Classic Film (6)
- அஞ்சலி (6)
- உலகசினிமா (6)
- இளையராஜா (5)
- சுஜாதா (5)
- ஜெயமோகன் (5)
- புத்தக கண்காட்சி (5)
- வன்முறை (5)
- இரானிய சினிமா (4)
- உலகத் திரைப்பட விழா (4)
- குறும்படம் (4)
- நாஞ்சில் நாடன் (4)
- நிகழ்வு (4)
- ரஜினி (4)
- அழகர்சாமியின்குதிரை (3)
- சத்யஜித் ரே (3)
- பொதுப்புத்தி (3)
- மஜித் மஜிதி (3)
- மீள்பதிவு (3)
- விமர்சனம் (3)
- Reservoir Dogs (2)
- அருண் வைத்தியநாதன் (2)
- ஆரண்ய காண்டம் (2)
- உன்னைப் போல் ஒருவன் (2)
- ஏ.ஆர். ரஹ்மான் (2)
- காஞ்சிவரம் (2)
- ஜாக் நிக்கல்சன் (2)
- தாஸ்தாயெவ்ஸ்கி (2)
- தோப்பில் முஹம்மது மீரான் (2)
- நூலகம் (2)
- முற்போக்கு (2)
- ஹிட்ச்காக் (2)
- அஞ்சலிக் கூட்டம் (1)
- அமீர் (1)
- அம்பை (1)
- அரசு ஊழியர்கள் (1)
- அல்பசினோ (1)
- ஆட்டோகிராஃப் (1)
- ஆன்மீகம் (1)
- ஆயிரத்தில் ஒருவன் (1)
- ஆஸ்கர் விருது (1)
- இலங்கை பிரச்சினை (1)
- எண்ணம் (1)
- எஸ்கொபெர் (1)
- ஏ.ஆர்.ரகுமான் (1)
- கட்டுரை (1)
- கன்னடம் (1)
- கற்பிதம் (1)
- கிரிஷ் காசரவள்ளி (1)
- குசேலன் (1)
- கொரிய சினிமா (1)
- கே.பி.சுந்தராம்பாள் (1)
- கேள்விமீமீ (1)
- கோவிந்த் நிஹ்லானி (1)
- சசிகுமார் (1)
- சர்வதேச திரைவிழா 2011 (1)
- சாசனம் (1)
- சாய்பாபா (1)
- சாருலதா (1)
- சிறுகதை (1)
- சீனா (1)
- சுப்ரமணியபுரம் (1)
- சூப்பர் சிங்கர் (1)
- செல்வராகவன் (1)
- சேரன் (1)
- ஜப்பான் (1)
- ஜான் ஆப்ரஹாம் (1)
- ஜெயந்தன் (1)
- டென்சல் வாஷிங்டன் (1)
- தமிழ்மணம் (1)
- திரைநுட்பம் (1)
- தேசிய விருதுகள் (1)
- தேர்தல் (1)
- நவீன தீண்டாமை (1)
- நாகேஷ் (1)
- நாடோடிகள் (1)
- நான் கடவுள் (1)
- நூல் வெளியீட்டு விழா (1)
- நேர்காணல் (1)
- பாகவதர் (1)
- பாடல் சர்வே (1)
- பாலா (1)
- பின்லாந்து (1)
- பியர் (1)
- பிரகாஷ்ராஜ் (1)
- பிரியாணி (1)
- பிரெஞ்சு (1)
- புத்தாண்டு (1)
- பொக்கிஷம் (1)
- மகேந்திரன் (1)
- மானிசி (1)
- ராபர்ட டி நீரோ (1)
- ரியாலிட்டி ஷோ (1)
- வடிவேலு (1)
- வார்த்தை (1)
- வாழ்த்து (1)
- விஷால் பரத்வாஜ் (1)
- ஷகிலா (1)
- ஸ்வர்ணலதா (1)
- ஹாலிவுட் சினிமா (1)
15 comments:
- ஜானகிராமன் said...
-
பிடிக்கல பிரதர். மனிதனின் இயல்பான ஒரு பழக்கத்தை உள்ளார்ந்து பார்க்கும் இந்த பதிவை, மொக்கை என்று லேபிள் இட்டது பிடிக்கல.
- கானகம் said...
-
எனக்கும் உண்டு இதுபோன்ற உந்துதல்கள். இதென்ன ஒரு மேட்டரா என ஒருபக்க மனசு சொல்லிக்கொண்டெ இருக்கும், மறுபக்கம் நம்மை அறியாமலேயே அதை சரியாக்கி வைத்துவிடும்.
ஆனால் இதையெல்லாம் பதிவாய்ப் போடும் உங்கள் திறமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை.. :-)) - ILA(@)இளா said...
-
செம்படம் மூடி மாறிடுச்சுன்னா எங்க அம்மாவுக்கும் இப்படி ஒரு depression வந்துரும். அன்னிக்கு முழுக்க எனக்கு திட்டு விழும்கிறதால எஸ்ஸாகிருவேன். அப்போ செம்படம் இப்போ டப்பர்வேர்
- இராஜராஜேஸ்வரி said...
-
விசித்திரமான மனச்சித்திரம்.
- வணங்காமுடி...! said...
-
\\மூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ? \\
:) :) :)
வேற யாரும் சொல்றதுக்கு முன்னாடி முந்திக்கிட்ட உங்க அப்ரோச் எனக்கு புடிச்சிருக்கு... ஹி ஹி...
@ இளா,
அது செம்படம் இல்லை ஐயா... சம்புடம்.... :) - கும்க்கி said...
-
அருமையான கேள்வி..
ஆயின் ஒழுக்கம் சார்ந்த கல்விமுறையிலும்,குடும்ப அமைப்பிலும் பதிவு செய்யப்பட்ட வாழ்வு முறைகள் பின்னாட்களிலும் பாதை மாற இயல்பு அனுமதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.
இப்படி ஒழுக்கம் சாரா மனிதர்களும், அவர்தம் வாழ்வும் கூட நாம் சகியா வண்ணம் நிகழ்ந்தவாறுதான் இருக்கின்றன்...அது சமூக சூழல் எனக்கொள்ளலாம் என தோன்றுகிறது.
அந்த மன உறுத்தலே மற்றெல்லாவற்றுக்கும் ஆரோக்கியம். - Ganpat said...
-
அதே நிற மூடி போடுவது 100 க்கு 99 பேர் வேறு நிற மூடி போடுவது 100 க்கு 0.0001 பேர்.அதே நிற மூடி போட்டுவிட்டு என் வேறு நிற மூடி போடக்கூடாது என (வெட்டியாக ) யோசிப்பவர்கள் மீதி 0.9999 பேர்.இதில் நீங்கள் எந்த ரகம் என உங்களுக்கே தெரியும்.
- இந்திரா said...
-
//மூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ? :)//
அதுதான் பதில் தெரியுதுல.. அப்புறம் என்ன கேள்வி வேண்டியிருக்கு?? -
its ocd. obsessive compulsive dosorder
-
"எந்த ஒரு புதிய விஷயத்தையும் உண்மையையும் தெரிந்து கொண்டால் அதை negativeவ்வாகவும் தந்திரமாகவும் யோசித்து அதை தனக்கு சதாகமாய் மட்டுமே மனிதன் உபயோகிப்பான்" என்று என் நண்பன் சில மாதங்கள் முன் சொன்னான். அது நிஜம் என்று தெரியும். இப்போது அதை நான் ஒரு அனுபவத்தில் உணர்ந்தேன். உங்களுக்கும் இன்னும் பிளாகில் உலக சினிமா கட்டுரைகள் எழுதும் பலருக்கும் உலக சினிமா feed urlகளை அனுப்பி வைத்தேன். அதில் கீழ்காணும் பிளாக் ஆசிரியருக்கும் அனுப்பி வைத்தேன்.
http://umajee.blogspot.com/
அவர் பிளாகில் உலக சினிமாக்களை எழுதுகிறார்.அவற்றை நான் கூகிள் ரீடரில் முழுதாய் படித்து வந்தேன். அவற்றை கூகிள் ரீடரில் நான் பாட்டுக்கு நான் மட்டும் படித்துக் கொண்டிருந்திருக்கலாம். அவருக்கு feed urlகளை நான் அனுப்பி வைக்க அவருக்கு ஒரு யோசனை தோன்றி விட்டது. நம் கட்டுரைகளை கூகிள் ரீடரில் முழுதாய் படிக்கின்றார்களா? அப்படியென்றால் எவனும் நம் பிளாகிற்கு வர மாட்டானே என யோசித்து feed settings சென்று feedஐ full என்பதிலிருந்து மாற்றி short என்பதற்கு set செய்து விட்டார்.
இப்போது அவரது உலக சினிமா கட்டுரைகளை நான் என் கூகிள் ரீடரில் முழுதாய் படிக்க முடியாமல் போய் விட்டது. என்ன ஒரு அல்பத்தனம்?
"எந்த ஒரு புதிய விஷயத்தையும் உண்மையையும் தெரிந்து கொண்டால் அதை negativeவ்வாகவும் தந்திரமாகவும் யோசித்து அதை தனக்கு சதாகமாய் மட்டுமே மனிதன் உபயோகிப்பான்" -
என்னங்க, நீங்க எதை எழுதினாலு ஒரு பத்து பேர் கமெண்ட் போட்டுர்ராங்க?
- schools said...
-
you people are great in thinking and writing a article.
- மாயன் said...
-
வழக்கத்திலிருந்து மாறாக நடக்க (ஏன் எண்ண ஆரம்பித்தாலே) பழக்கப்பட்ட மனம் பதட்டம் காண ஆரம்பித்து விடும்...அதென்ன பழக்கப்பட்ட மனம்...கேட்வாசல், நடு சென்ட்டர் என்கிற மாதிரி...மனம் என்பதே 'bundle of habits' தானே...ஒரு சினிமா காமிரா புத்தகம் படித்தேன்...ஹீரோ இடது பக்கத்திலிருந்து ஓடி வலது பக்கம் போவதை விட...வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் ஓடுவது creates more tension in the screenplay...இதை ரசிகன் 'அறியாமல் உணர்ந்தாலும்'. கலைஞன் இரண்டு விதமான செயல்களையும் செய்து பார்த்து அதன் உணர்வுகளை ரசிகனும் உணரச்செய்ய முயற்சிக்கிறான்...இரண்டிலும் ஒட்டுதல் இல்லாமல் வெறும் கவனித்தல் மட்டும் நிகழ்த்துகிறவன் 'தியானிக்கிறான்'....
- SiSulthan said...
-
முதலில் உங்க பிச்சைபாத்திரம் போட்டோவுக்கு நன்றி.
அடுத்து உங்க கவலை எனக்கு புறியுது.அதிகமாககூகிள் குழுமங்கள்ள உலாவினா இதுபோல சிம்டம்ஸ் வர அதிகசான்ஸ் இருக்கு.
எனக்கு உங்க கையை பிடித்துக்கொண்டு வசூல்ராஜா படத்துல கமல் அட்மிசனுக்காக கியூல நிற்கும்போது ஸ்ட்ரச்சர தள்ளிவரும் அட்டெண்டர் சொல்லும் அதேவசணத்த சொல்லணும் போல தோணுது. - கையேடு said...
-
ஏதோவொரு அவசர நாளில், ஏதோவொரு மூடி தேவைப்படும்போது நிறங்கள் இயல்பாக மாறிப்போகலாம்..
