இணையமே இந்தப்படத்தை "வேட்டையாடி" முடிந்திருந்த தருணத்தில் நானும் கொஞ்சம் "விளையாடிப்" பார்க்கலாமே என்று தோன்றியதில் இந்தப் பதிவு.
உள்ளடக்கத்திலோ, கதை சொல்லும் உத்திகளிலோ, தொழில்நுட்ப சமாச்சாரங்களிலோ பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டு தமிழச்சினிமா தேக்கமடையாமல் ஒரு அடியேனும் முன்னேற்றி அழைத்துச் செல்லக்கூடிய சொற்ப படைப்பாளிகளில் கமல்ஹாசன் பிரதானமானவர். பொதுவாக ஆங்கிலப்படங்கள் Action, Drama, Romance, Thriller என்று ஏதாவது ஒன்றில் வகைப்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கும். இந்த வகைப் படங்களில் திரைக்கதை அதிகம் அலையாமல் நூல்பிடித்தாற் போல் ஒரே கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும். தமிழ்ப்படங்களை இவ்வாறு வகைப்படுத்துதல் பொதுவாக அரிதான விஷயம். சாதம், சாம்பார், குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயாசம் என்று குழைத்து அடித்தால்தான் நம்மவர்களுக்கு சாப்பிட்ட திருப்தியே இருக்கும். ஒரு சராசரி தமிழ்த் திரைப்பட பார்வையாளனும் இந்த வகையிலேதான் தனக்கு கேளிக்கையாக அமைகிற திரைப்பட ஊடகத்தின் உள்ளடக்கத்தையும் எதிர்பார்க்கிறான். படத்தின் நடுவே சம்பந்தமில்லாமல் வணிக நோக்கத்திற்காக நுழைக்கப்படுகிற 'ஐட்டம்' பாட்டுக்களின் லாஜிக் பற்றியெல்லாம் அவனுக்கு கவலையில்லை. குதித்தாடும் செழிப்பான மார்பகங்கள் தரும் மனக்கிளர்ச்சியே அவனுக்கு போதுமானதாக இருக்கிறது.
மேற்சொன்ன சம்பிரதாயங்களை பெருமளவிற்கு யோக்கியமாக தவிர்க்க முயன்று எடுக்கப்பட்டிருக்கிற படம் வே.வி. அசட்டுத்தனமான நகைச்சுவைகளோ, காதைக் கிழிக்கும் வசனங்களோ, கேமராவை நோக்கி பேசப்படும் "பஞ்ச்" டயலாக்குகளோ, (எனக்கு இதுதான் நகைச்சுவைக் காட்சிகளாக தோன்றுகிறது) நாயகன் அந்தரத்தில் பறக்கும் நகைச்சுவைகளோ இல்லாமல் குற்றங்களின் புலனாய்வு நோக்கில் திசைமாறாமல் செய்யப்பட்டிருக்கும் திரைக்கதை (சிக்கிமுக்கி நெருப்பே போன்ற அபத்தங்களை தவிர்த்து) 'சபாஷ்' சொல்ல வைக்கிறது.
()
சுஜாதா ஒரு கட்டுரையில் ராணுவ வீரர்கள் களத்தில் போரிடுவதின் அடிப்படையைப் பற்றி எழுதியிருந்தார். நாட்டுப்பற்று, தேசியக்கொடி போன்ற மாய்மாலங்கள் ஒரு புறமிருந்தாலும், தன்னுடன் பழகிய தோழன் எதிரணியினரால் சுடப்பட்டு இறந்ததில் ஏற்படும் கோபமும், ஆவேசமும்தான் அவர்களை போரிட வைப்பதின் ஆதாரமான விஷயமாக விளங்குகிறது என்று. இதிலும் அந்த விஷயம் சுட்டிக் காட்டப்படுகிறது. நண்பர் ஆரோக்கியராஜின் மகள் கற்பழித்து கொலை செய்யப்படும் சோகம் ஆறுவதற்குள் நண்பரும் அவர் மனைவியும் கூட கொலை செய்யப்படுவது ராகவனை இந்த வழக்கில் ஒரு காவல்துறையின் அதிகாரியின் வழக்கமான கடமைகளை மீறி ஆவேசமாக செயல்பட வைக்கிறது எனலாம்.
கமல் இந்தப்படத்தில் இயல்பாக நடிக்க முயன்றிருக்கிறார். என்றாலும் சில வணிக கட்டாயங்களுக்காக சண்டைக் காட்சிகளில் வழக்கமான நாயக வேஷத்தையும் கட்ட வேண்டிதாயிருக்கிறது. படத்தின் முதல் பாடல் (கற்க கற்க) சிறப்பாகவும் பாராட்டத்தக்க உத்தியுடனும் எடுக்கப்பட்டிருக்கிறது. கமலின் கடந்தகால வாழ்வு பிளாஷ்பேக்கில் தவணை முறையில் சொல்லப்பட்டிருந்தாலும் பொருத்தமான இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. திரில்லர் பட திரைக்கதையின் ஆதாரமே அடுத்தது என்ன என்று பார்வையாளளை எப்போதும் இருக்கையின் நுனியில் அமரச் செய்வதுதான். புலனாய்வின் இடையே சொல்லப்படும் அந்த மென்மையான காதல் காட்சிகள் நீளம் திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துகிறது.
தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பான்மையாகவும் பார்வையாளனின் மூளையை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாத "லாஜிக் மீறல்கள், கிளிஷேக்கள்" இந்தப்படத்திலும் உள்ளது. அமெரிக்க நாய்களின் புலன்களினாலேயே உணரப்படாத பிணங்கள், ராகவன் "உள்ளுணர்வினால்" உணரப்படுவதும், (இறுதிக்காட்சியில் "நீ ஒரு மோப்பம் பிடிக்கிற மோசமான நாய்டா" என்று வில்லன் வேறு இதை உறுதிப்படுத்துகிறான்) வழக்கு விவகாரங்களை பொது தொலைபேசியில் பேசுவதும், காவல்துறை அதிகாரியின் மூக்கருகிலேயே வில்லன் மாறுவேடத்தில் கடந்து செல்வதும் போன்றவையான காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். (வில்லன் என்றாலே தலை நிறைய மயிர் வளர்த்திருக்க வேண்டும் என்கிற கவுதமின் எதிர்பார்ப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்).
()
ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் சில சிறப்பாக அமைந்திருந்ததற்கு ஏற்ப, பாடல்களின் காட்சியமைப்பும் சிறப்பாக அமைக்கபட்டிருக்கிறது. பின்னணி இசையில் ஹாரிஸ் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறாரா என்று தோன்றுகிறது. கமல்-ஜோ காதல் காட்சிகளின் பின்னணியில் பழைய இந்திப்படங்களை போல நூறு வயலின்கள் கதறுகிறது. பின்னணி இசை என்றாலே ஏதாவதொரு வாத்தியம் ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதில்லை. அவற்றிற்கு ஓய்வு கொடுக்க வேண்டிய தருணங்களும் உண்டு.
குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் எடிட்டர் ஆண்டனியும். இருவரின் கூட்டணியில் பல காட்சிகள் புத்துணர்ச்சியாக இருக்கிறது.
()
முந்தைய படமான 'காக்க காக்க'விலிருந்து முற்றிலும் மாறி எடுக்க தீர்மானித்ததாக இயக்குநர் கவுதம் (மதனுடனான) பேட்டியில் சொல்லியிருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் 'கா.கா' வை நினைவுப்படுத்துவதை தவிர்க்க இயலவில்லை. மேலும் இளமாறன், மாயா என்று முந்தைய படத்தின் பாத்திரங்களையே உபயோகிக்கும் அளவிற்கு என்ன பெயர் பஞ்சம் அல்லது சம்பந்தப்பட்ட பெயர்களின் மேல் இயக்குநருக்கு என்ன பிரேமை என்று புரியவில்லை. மேலும் 'கா.கா'வின் நாயகி ஜோதிகாவையே இதிலும் உபயோகித்ததில் இந்த ஒப்பிடுதல் இன்னும் அதிகமாகிறது. (சம்பந்தப்பட்ட பாத்திரத்திற்கு குறிப்பிட்ட நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் தீர்மானிப்பதில் தவறில்லை. ஆனால் பாத்திர குணாதிசயங்களும், காட்சியமைப்புகளும் ஒத்துப் போவதில்தான் இந்த சிக்கல் ஏற்படுகிறது).
An another episode in police officer's life என்பது இந்தப்படத்தின் tag line. ஆனால் The same episode of "Kakka Kakka" has been remade" என்பதுதான் என் கருத்தாக இருக்கும்.
()
படம் பார்க்கச் சென்ற சூழலை எழுதாவிட்டால் சில பேர் கோபித்துக் கொள்ளவும், இந்தப் பதிவின் தனித்தன்மை பாதிக்கப்படும் என்பதினாலும் இது தவிர்க்க முடியவில்லை. ஆரோக்கியமான தொழில்நுட்ப சமாச்சாரங்கள் அமைந்திருக்கும் அரங்கத்தில்தான் இந்த மாதிரியான படங்களின் காணும் அனுபவம் சிறப்பாக இருக்கும். ஆனால் என் வீட்டருகில் உள்ள ஒரு சுமாரான தியேட்டரில் (பிருந்தா) பார்த்ததில் பெரும்பாலான வசனங்கள் காதில் விழவில்லை. ஓயாமல் அழுது கொண்டிருந்த ஒரு கைக்குழந்தையின் கதறலோடும், அது ஓய்ந்த பிறகு அந்த தம்பதியினரின் சச்சரவு ஒலிகளின் பின்னணியோடும்தான் இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. வெளியே போக முயன்ற குழந்தையின் தாயை தடுத்து "பால்குடு, பால்குடு" என்று குழந்தையை இயல்பில்லாத முறையில் சமாதானமடைய வைக்க முயன்ற அந்த தந்தையையும், முலைக்காம்பை நிராகரித்து தொடர்ந்து கதறிய குழந்தையை சமாளிக்க முடியாமல் தவித்த அந்த தாயையும் கோபிக்க முடியாமலும், ஆனால் எழுகிற எரிச்சலை தவிர்க்க முடியாமலும் இந்தப் படத்தை காணும் அனுபவம் நேர்ந்தது.
பொதுவாகவே பொது இடங்களில் எவ்வாறு புழங்குவது என்கிற அடிப்படை நாகரிகம் அறியாத நம்மவர்களின் மேல் எப்போதும் எனக்கு எரிச்சல் உண்டு. "தமிழர்களின் தொன்மை நாகரிகம்" என்று கட்டுரை எழுதுபவர்களை முகத்திலேயே குத்த வேண்டும் என்கிற ஆசையுமுண்டு. மற்றவர்களின் மேல் எச்சில் படக்கூடும் என்கிற அறிவு இல்லாமல் கண்ட இடங்களில் காறித்துப்புபவர்கள், பொது இடங்களில் உரத்த குரலில் உருப்படியில்லாத உரையாடல்களை நிகழத்துபவர்கள், அணுகுண்டு அழிவிலிருந்து தப்பி ஓடுபவர்கள் போல் பதட்டத்துடன் மோதிக் கொண்டு ஓடி பேருந்து இருக்கையில் இடம் பிடிப்பவர்கள், மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறோம் என்கிற பிரக்ஞையே இல்லாதவர்கள்; அப்படி இருந்தும் அதை அலட்சியப்படுத்துபவர்கள்.... இந்த மாதிரி பிரகஸ்பதிகளை யாராவது வேட்டையாடினால் நன்றாக இருக்கும்.
Friday, September 08, 2006
Saturday, September 02, 2006
பழைய பேப்பர்
இணையத்தில் எனது இருப்பை புதுப்பித்துக் கொள்ள, எப்பவோ எழுதின குறிப்புகளை இங்கே பதிவு செய்கிறேன்.
சென்னையில் ஒரு கோடைக்காலம்
சென்னையின் கோடை விடைபெறத் தயங்கிக் கொண்டிருக்கிறது. பேருந்தின் ரயிலின் இரும்புக் கம்பிகள் பயணிகள் தங்களை அணுகவொட்டாதவாறு சூட்டில் தகிக்கின்றன. சிவனின் தலையில் கங்கை குடியிருக்கும் ஐதீகம் உண்மையோ அல்லது பொய்யோ தெரியவில்லை. என்னுடைய தலையில் இந்த மாதிரி தேவதை யாராவது குடிகொண்டு விட்டாளா என்று சந்தேகிக்கும் வகையில் வியர்வைத் தண்ணீர் தலைக்குள்ளிலிருந்து ஊற்று போல் பொங்குகிறது. வீட்டிற்குப் போனவுடன் அலுவலக வேடத்தை களைக்கும் வேளையில் உள்ளாடைகள் பிழியப்பட்ட தேனடையை விநோதமாக நினைவுப்படுத்துகின்றன. உடம்பில் வியர்வை ஊற்றுடன் சிரமப்பட்டு பாலத்தின் மேடேறிக் கொண்டிருக்கும் கைவண்டிக்காரரை எரிச்சலுடன் ஒலியால் திட்டி துரத்துகிறது ஒரு திமிர்பிடித்த வெளிநாட்டு கார்.
எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக வரும் சக மனிதர்களைக் காண எரிச்சலாக இருக்கிறது. உலகத்திலேயே இரண்டாவது நீளமானதாக புகழ்பெற்ற மெரீனாவில் தாராளமாக சுவாசிக்கக் கிடைக்கும் மீன்வறுவல் நாற்றம் குமட்டலை ஏற்படுத்துகிறது.
மிகுந்த சப்தத்துடன் தரையில் மோதி மண் வாசனையை எழுப்பும் மழையை கற்பனையில் கண்டு நனைந்தபடி கடந்து போகின்றன நாட்கள்.
()
பழசாகிப் போன பாக்யராஜ்
மகளின் கோரிக்கைகிணங்க, இம்சை அரசனைக் காண சென்று அரங்கம் நிரம்பிவிட்டதால், "பாரிஜாதம்" என்கிற மகா அபத்தக் களஞ்சியத்தை காண நேரிட்டது. படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே தூங்கத் துவங்கிவிட்ட மகளை பொறாமையுடன் பார்த்த படியும் கொடுத்த காசு வீணாகக்கூடாதே என்கிற நடுத்தர வர்க்கத்து மனப்பான்மையில் வெளியே போக முடியாமல் சகித்தபடி கழிந்தது இரண்டரை மணி நேரம். 'இந்தியாவிலேயே மிகச் சிறந்த திரைக்கதை படைப்பாளி' என்று பாக்யராஜைப் பற்றி வெகுஜன பத்திரிகைகள் பல நேரங்களில் சிலாகிப்பதுண்டு. ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பதற்கு இது ஒர் சிறந்த உதாரணம்.
அசட்டுத்தனமான நகைச்சுவையையும் பாலியல் உணர்வுகளையும் ஏதோவொரு நூதனமான சதவிகிதத்தில் கலந்து தருவதே அவரது பாணி. இதைத் தவிர வேறொன்றுமில்லை. அவரின் சிறப்பம்சமான ஒன்றை வேண்டுமானால் குறிப்பிடலாம். பத்து பேரை அடித்துவீழ்த்துகிற, திடகாத்திரமான, வீரதீர பராக்கிரமசாலிகளே பெரும்பான்மையாக கதாநாயர்களாக உலா வந்து கொண்டிருந்த நேரத்தில், ஒரு சாமான்யனின் குணாதிசயங்களோடு கதாநாயகனாகி தொடர்ந்து வெற்றி பெற்றவர். (இந்த வரிசையில் இன்னொரு நடிகராக மோகனை குறிப்பிடலாம். இரவல் பேனாவிலிருந்து இங்க் திருடும் கதாநாயகனை (பயணங்கள் முடிவதில்லை) மிகவும் அரிதாகத்தான் காண முடியும்.)
()
இன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது. அரண்மனை பாத்திரங்களை கட்டம் கட்டி காட்டி விட்டு பல்லியையும் சுட்டும் அட்டகாசமான ஆரம்ப நகைச்சுவை பல இடங்களில் காணாமற் போயிருப்பதுதான் இந்தப் படத்தின் சோகம். பொருத்தமான கதையை தேர்வு செய்து கொண்டு வடிவேலுவை இன்னும் நன்றாக exploit செய்துகொண்டிருக்கலாம். என்னை இந்தப் படத்தில் மிகவும் கவர்ந்தது, அரண்மனை மற்றும் அந்தப்புரங்களின் அரங்க அமைப்புதான். நகைச்சுவைப் படம்தானே என்று compromise செய்து கொள்ளாமல் தீவிரமான உழைப்புடன் பங்களித்த கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியைத்தான் இந்தப்படத்தின் நிஜ கதாநாயகன் என்பேன்.
இயக்குநர் சிம்புதேவன், நகைச்சுவையைக் கொண்டு சரித்திரப்படத்தில் சமகால பிரச்சினைகளை கட்டமைத்தது புத்திசாலித்தனமான காரியம். வீச்சறுவா நாயகர்களின் ரத்தங்களுக்கு நடுவே ஒரு ஆறுதலான படம்.
()
சமீபத்தில் படித்த சில நூல்களைப் பற்றி சில வரிகள்:
(1) கூடு கலைதல் - பொ.கருணாகரமூர்த்தி
சமகால இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பொ.கருணாகரமூர்த்தி. கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற இவரின் மிக சுவாரசியமான நாவலான "ஒரு அகதி உருவாகும் நேரம்" மூலம்தான் இவரை கண்டு கொண்டேன். பல்வேறு பிரச்சினைகள், சோகங்களுக்கு நடுவில் மெல்லிய இழை போல் ஊடுருவியிருக்கும் நகைச்சுவையே இவரது எழுத்தின் பலமாக நான் காண்கிறேன்.
இவரின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு "கூடுகலைதல்" என்கிற தலைப்பாக வெளிவந்திருக்கிறது. (கனவுப்பட்டறை வெளியீடு)
(2) ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குரூஸ்
மீனவர்கள் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாக வைத்து தமிழ் நவீன இலக்கியத்தில் அதிகம் படைக்கப்படவில்லை. வண்ணநிலவனின் "கடற்புரத்தில்" போன்றவைதான் அரிதாக தென்படுகிறது. குரூஸின் இந்த நாவல் மீனவர்களின் (பரதவர்கள்) தமிழக, குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஆமந்துறை என்ற பகுதியினரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக ஆய்வு செய்கிறது.
1933-ல் தொடங்கி 1985-ல் நிறையும் இந்த நாவலின் ஊடாக அவர்களின் புவியியல் பிரச்சினைகள், சமூக மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள், மதமாற்றங்களினால் ஏற்படும் தடுமாற்றங்கள், அன்றாடம் மரணத்தை எதிர்கொண்டு ஜீவிதம் நடத்த வேண்டிய அவலமான வாழ்க்கை ஆகியவை குறித்து ஆராய்கிறது. இந்த காலகட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களையும் (சிதம்பரம் பிள்ளையின் கப்பல் கம்பெனி) நாவல் நெடுக காண முடிகிறது.
மிக முக்கியமான நாவல் (தமிழினி பதிப்பகம்)
(3) சில இலக்கிய ஆளுமைகள் - வெங்கட் சாமிநாதன்.
சுருக்கமாக வெ.சா. என அறியப்படும் வெங்கட் சாமிநாதன், பி.ஆர்.ராஜம் அய்யர் தொடங்கி உ.வே.சா., திரு.வி.க., பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், க.நா.சு., பி.எஸ்.ராமையா, மெளனி, சி.சு.செல்லப்பா, தி.ஜா., ந.முத்துசாமி, தஞ்சை பிரகாஷ், சம்பத், கோமல் சுவாமிநாதன், நாஞ்சிநாடன், தயாபவார், எஸ்.பொ., ஆகிய ஆளுமைகளைப் பற்றி பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு இதழ்களில் (பெரும்பாலும் யாத்ரா) எழுதப்பட்ட கட்டுரைகள்.
வெ.சா.விற்கு ஒருவரைப் பிடித்து விட்டால் வானுயரப் புகழ்கிறார். (ந.முத்துசாமி பற்றிய கட்டுரை). மாறாக அமைந்து விட்டால் எதிராளி துவம்சம் செய்யப்படுகிறார். க.நா.சு மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும், இருவருக்குமான முரண்கள் பல இடங்களில் வெளிப்படுகிறது. சம்பத் பற்றி எழுதப்பட்டிருந்த எனக்கு பிடித்திருந்தது. (காவ்யா பதிப்பகம்)
சென்னையில் ஒரு கோடைக்காலம்
சென்னையின் கோடை விடைபெறத் தயங்கிக் கொண்டிருக்கிறது. பேருந்தின் ரயிலின் இரும்புக் கம்பிகள் பயணிகள் தங்களை அணுகவொட்டாதவாறு சூட்டில் தகிக்கின்றன. சிவனின் தலையில் கங்கை குடியிருக்கும் ஐதீகம் உண்மையோ அல்லது பொய்யோ தெரியவில்லை. என்னுடைய தலையில் இந்த மாதிரி தேவதை யாராவது குடிகொண்டு விட்டாளா என்று சந்தேகிக்கும் வகையில் வியர்வைத் தண்ணீர் தலைக்குள்ளிலிருந்து ஊற்று போல் பொங்குகிறது. வீட்டிற்குப் போனவுடன் அலுவலக வேடத்தை களைக்கும் வேளையில் உள்ளாடைகள் பிழியப்பட்ட தேனடையை விநோதமாக நினைவுப்படுத்துகின்றன. உடம்பில் வியர்வை ஊற்றுடன் சிரமப்பட்டு பாலத்தின் மேடேறிக் கொண்டிருக்கும் கைவண்டிக்காரரை எரிச்சலுடன் ஒலியால் திட்டி துரத்துகிறது ஒரு திமிர்பிடித்த வெளிநாட்டு கார்.
எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக வரும் சக மனிதர்களைக் காண எரிச்சலாக இருக்கிறது. உலகத்திலேயே இரண்டாவது நீளமானதாக புகழ்பெற்ற மெரீனாவில் தாராளமாக சுவாசிக்கக் கிடைக்கும் மீன்வறுவல் நாற்றம் குமட்டலை ஏற்படுத்துகிறது.
மிகுந்த சப்தத்துடன் தரையில் மோதி மண் வாசனையை எழுப்பும் மழையை கற்பனையில் கண்டு நனைந்தபடி கடந்து போகின்றன நாட்கள்.
()
பழசாகிப் போன பாக்யராஜ்
மகளின் கோரிக்கைகிணங்க, இம்சை அரசனைக் காண சென்று அரங்கம் நிரம்பிவிட்டதால், "பாரிஜாதம்" என்கிற மகா அபத்தக் களஞ்சியத்தை காண நேரிட்டது. படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே தூங்கத் துவங்கிவிட்ட மகளை பொறாமையுடன் பார்த்த படியும் கொடுத்த காசு வீணாகக்கூடாதே என்கிற நடுத்தர வர்க்கத்து மனப்பான்மையில் வெளியே போக முடியாமல் சகித்தபடி கழிந்தது இரண்டரை மணி நேரம். 'இந்தியாவிலேயே மிகச் சிறந்த திரைக்கதை படைப்பாளி' என்று பாக்யராஜைப் பற்றி வெகுஜன பத்திரிகைகள் பல நேரங்களில் சிலாகிப்பதுண்டு. ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பதற்கு இது ஒர் சிறந்த உதாரணம்.
அசட்டுத்தனமான நகைச்சுவையையும் பாலியல் உணர்வுகளையும் ஏதோவொரு நூதனமான சதவிகிதத்தில் கலந்து தருவதே அவரது பாணி. இதைத் தவிர வேறொன்றுமில்லை. அவரின் சிறப்பம்சமான ஒன்றை வேண்டுமானால் குறிப்பிடலாம். பத்து பேரை அடித்துவீழ்த்துகிற, திடகாத்திரமான, வீரதீர பராக்கிரமசாலிகளே பெரும்பான்மையாக கதாநாயர்களாக உலா வந்து கொண்டிருந்த நேரத்தில், ஒரு சாமான்யனின் குணாதிசயங்களோடு கதாநாயகனாகி தொடர்ந்து வெற்றி பெற்றவர். (இந்த வரிசையில் இன்னொரு நடிகராக மோகனை குறிப்பிடலாம். இரவல் பேனாவிலிருந்து இங்க் திருடும் கதாநாயகனை (பயணங்கள் முடிவதில்லை) மிகவும் அரிதாகத்தான் காண முடியும்.)
()
இன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது. அரண்மனை பாத்திரங்களை கட்டம் கட்டி காட்டி விட்டு பல்லியையும் சுட்டும் அட்டகாசமான ஆரம்ப நகைச்சுவை பல இடங்களில் காணாமற் போயிருப்பதுதான் இந்தப் படத்தின் சோகம். பொருத்தமான கதையை தேர்வு செய்து கொண்டு வடிவேலுவை இன்னும் நன்றாக exploit செய்துகொண்டிருக்கலாம். என்னை இந்தப் படத்தில் மிகவும் கவர்ந்தது, அரண்மனை மற்றும் அந்தப்புரங்களின் அரங்க அமைப்புதான். நகைச்சுவைப் படம்தானே என்று compromise செய்து கொள்ளாமல் தீவிரமான உழைப்புடன் பங்களித்த கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியைத்தான் இந்தப்படத்தின் நிஜ கதாநாயகன் என்பேன்.
இயக்குநர் சிம்புதேவன், நகைச்சுவையைக் கொண்டு சரித்திரப்படத்தில் சமகால பிரச்சினைகளை கட்டமைத்தது புத்திசாலித்தனமான காரியம். வீச்சறுவா நாயகர்களின் ரத்தங்களுக்கு நடுவே ஒரு ஆறுதலான படம்.
()
சமீபத்தில் படித்த சில நூல்களைப் பற்றி சில வரிகள்:
(1) கூடு கலைதல் - பொ.கருணாகரமூர்த்தி
சமகால இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பொ.கருணாகரமூர்த்தி. கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற இவரின் மிக சுவாரசியமான நாவலான "ஒரு அகதி உருவாகும் நேரம்" மூலம்தான் இவரை கண்டு கொண்டேன். பல்வேறு பிரச்சினைகள், சோகங்களுக்கு நடுவில் மெல்லிய இழை போல் ஊடுருவியிருக்கும் நகைச்சுவையே இவரது எழுத்தின் பலமாக நான் காண்கிறேன்.
இவரின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு "கூடுகலைதல்" என்கிற தலைப்பாக வெளிவந்திருக்கிறது. (கனவுப்பட்டறை வெளியீடு)
(2) ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குரூஸ்
மீனவர்கள் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாக வைத்து தமிழ் நவீன இலக்கியத்தில் அதிகம் படைக்கப்படவில்லை. வண்ணநிலவனின் "கடற்புரத்தில்" போன்றவைதான் அரிதாக தென்படுகிறது. குரூஸின் இந்த நாவல் மீனவர்களின் (பரதவர்கள்) தமிழக, குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஆமந்துறை என்ற பகுதியினரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக ஆய்வு செய்கிறது.
1933-ல் தொடங்கி 1985-ல் நிறையும் இந்த நாவலின் ஊடாக அவர்களின் புவியியல் பிரச்சினைகள், சமூக மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள், மதமாற்றங்களினால் ஏற்படும் தடுமாற்றங்கள், அன்றாடம் மரணத்தை எதிர்கொண்டு ஜீவிதம் நடத்த வேண்டிய அவலமான வாழ்க்கை ஆகியவை குறித்து ஆராய்கிறது. இந்த காலகட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களையும் (சிதம்பரம் பிள்ளையின் கப்பல் கம்பெனி) நாவல் நெடுக காண முடிகிறது.
மிக முக்கியமான நாவல் (தமிழினி பதிப்பகம்)
(3) சில இலக்கிய ஆளுமைகள் - வெங்கட் சாமிநாதன்.
சுருக்கமாக வெ.சா. என அறியப்படும் வெங்கட் சாமிநாதன், பி.ஆர்.ராஜம் அய்யர் தொடங்கி உ.வே.சா., திரு.வி.க., பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், க.நா.சு., பி.எஸ்.ராமையா, மெளனி, சி.சு.செல்லப்பா, தி.ஜா., ந.முத்துசாமி, தஞ்சை பிரகாஷ், சம்பத், கோமல் சுவாமிநாதன், நாஞ்சிநாடன், தயாபவார், எஸ்.பொ., ஆகிய ஆளுமைகளைப் பற்றி பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு இதழ்களில் (பெரும்பாலும் யாத்ரா) எழுதப்பட்ட கட்டுரைகள்.
வெ.சா.விற்கு ஒருவரைப் பிடித்து விட்டால் வானுயரப் புகழ்கிறார். (ந.முத்துசாமி பற்றிய கட்டுரை). மாறாக அமைந்து விட்டால் எதிராளி துவம்சம் செய்யப்படுகிறார். க.நா.சு மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும், இருவருக்குமான முரண்கள் பல இடங்களில் வெளிப்படுகிறது. சம்பத் பற்றி எழுதப்பட்டிருந்த எனக்கு பிடித்திருந்தது. (காவ்யா பதிப்பகம்)
Subscribe to:
Posts (Atom)