Monday, March 01, 2010

பாகவதர்


 தேங்காய் மூடி பாகவதர் முதற்கொண்டு ஏஸி கச்சேரி பாகவதர்கள் வரை எத்தனையோ பேர் இருந்தாலும் 'பாகவதர்' என்றாலே தமிழக மனங்களில் சட்டென உடனே நினைவுக்கு வருவது ஓர் உருவம்தான். தியாகராஜ பாகவதர். தமிழ்த் திரையின் மிக உச்சமாக இயங்கி பின்னர் வீழ்ந்த நட்சத்திரமாக மறைந்துப் போனவர். வாழ்வின் நிலையாமைக்கு மிகச் சிறந்ததொரு தத்துவ உதாரணம். பண்டிதர்கள் தங்கள் குழுவில் பொத்தி வைத்திருந்த கர்நாடக இசையை பாமரருக்குச் சென்று சேர்த்த நபர்களில் பிரதானமானவர். ஒரு முறையாவது இவரை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்று பெண்களை ஏங்க வைத்த அப்போதைய காதல் மன்னன்.

சிறுவயது  தூர்தர்ஷன் நாட்களில் இவரது பாடல்கள் வரும் போதெல்லாம் கிண்டலடித்துக் கொண்டே தலை தெறிக்க ஓடுவோம்.  சற்று ருசி தெரிந்த பின் கேட்ட பிறகு அதன் நுணுக்கங்கள் தெரியாவிடினும் உள்ளுணர்வின் ரசனை காரணமாக பாகதவர் பாடல்களில் பித்துக் கொண்டேன். 'தீன கருணாகரனே நடராஜா' வை மாத்திரம் எத்தனை முறை கேட்டிருப்பேன் என்ற கணக்கில்லை.

இன்று அவரது நூற்றாண்டு பிறந்த தினம். இது தொடர்பாக இந்து நாளிதழில் இன்று வெளிவந்த எஸ்.முத்தைய்யாவின் கட்டுரையை  இங்கு வாசிக்கலாம்.

 suresh kannan

2 comments:

  1. http://thanthaithanthai.blogspot.com/2009/03/blog-post_10.html

    http://thanthaithanthai.blogspot.com/2009/03/blog-post_17.html
    http://thanthaithanthai.blogspot.com/2009/09/blog-post.html
    http://thanthaithanthai.blogspot.com/2009/09/blog-post_02.html

    ReplyDelete
  2. அட முந்திட்டீங்களா.. நன்றி :-)

    ReplyDelete